Newsடெல்லி கேபிட்டல்ஸை சம்பவம் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் - IPL 2024

டெல்லி கேபிட்டல்ஸை சம்பவம் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் – IPL 2024

-

IPL 2024 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை வீழ்த்தியது.

நாணய சுழற்சியில் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் களமிறங்கியது.

தொடக்க வீரர்கள் சொதப்பிய நிலையில் Riyan Parag தனியாளாக அணியின் ஸ்கோரை ஜெட் வேகத்தில் உயர்த்தினார்.

பராக் 45 பந்துகளில் 84 ஓட்டங்களும், அஸ்வின் 19 பந்துகளில் 29 ஓட்டங்களும் விளாசினர். டெல்லி கேபிட்டல்ஸ் அணி தரப்பில் பந்துவீசிய ஐந்து பந்துவீச்சாளர்களும் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய டெல்லி அணியில் மிட்செல் மார்ஷ் அடுத்தடுத்து பவுண்டரிகளை விரட்டினார். ஆனால், அவர் 23 (12) ஓட்டங்கள் எடுத்திருந்தபோது, நான்ரே பர்கரின் அசுரவேகத்தில் கிளீன் போல்டு ஆனார்.

அடுத்து வந்த ரிக்கி புய் அதே ஓவரில் சாம்சனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதற்கிடையில் David Warner ருத்ர தாண்டவம் ஆடினார்.

மறுமுனையில் ரிஷாப் பண்ட் நிதானமாக ஆட, டேவிட் வார்னர் 49 (34) ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அவரது ஸ்கோரில் 3 சிக்ஸர், 5 பவுண்டரிகள் அடங்கும்.

அடுத்து அணித்தலைவர் பண்ட் 28 ஓட்டங்களில் சஹால் ஓவரில் ஆட்டமிழக்க டெல்லி அணி சரிவை சந்தித்தது. அப்போது அதிரடியில் இறங்கிய ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சை சிதறடித்தார்.

கடைசி ஓவரில் டெல்லி அணியின் வெற்றிக்கு 16 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் ஆவேஷ் கான் பந்துவீசினார். மிரட்டலாகவும், துல்லியமாகவும் அவர் பந்துவீசியதால் டெல்லி அணியால் 4 ஓட்டங்கள் மட்டுமே அந்த ஓவரில் எடுக்க முடிந்தது.

இதன்மூலம் 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி பெற்றது. சஹால், பர்கர் தலா 2 விக்கெட்டுகளும், ஆவேஷ் கான் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

Latest news

ஆஸ்திரேலிய இளைஞர்களிடையே பொதுவாக காணப்படும் நீரிழிவு நோய்

ஆஸ்திரேலியாவில் சுமார் 30% நீரிழிவு நோயாளிகள் இன்னும் கண்டறியப்படாமல் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 15 முதல் 39 வயதுக்குட்பட்டவர்களில் நீரிழிவு நோயைக் கண்டறிவது மிகவும் முக்கியம் என்று நிபுணர்கள்...

இந்திய சமூகத்திடம் மன்னிப்பு கேட்குமாறு ஜெசிந்தாவிடம் கூறிய அல்பானீஸ்

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், இந்திய சமூகத்திற்கு தனது இரங்கலைத் தெரிவிக்குமாறு லிபரல் கட்சி செனட்டர் ஜெசிந்தா பிரைஸைக் கேட்டுக் கொண்டுள்ளார். லிபரல் கட்சி செனட்டர் ஜெசிந்தா...

நாடாளுமன்றத்திற்கு தீ வைத்த நேபாள போராட்டக்காரர்கள்

நேபாளத்தில் பல தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு மோசமான அமைதியின்மை தொடர்ந்தால், நிலைமையைக் கட்டுப்படுத்த நேபாள ராணுவம் உட்பட அனைத்து பாதுகாப்பு நிறுவனங்களும் தலையிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய...

கத்தாருக்கு பயணம் செய்யும் ஆஸ்திரேலியர்களுக்கான எச்சரிக்கை

மத்திய கிழக்கில் பாதுகாப்பு நிலைமை கணிக்க முடியாததாகவே உள்ளது என்று ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. தோஹாவில் நடந்த கொடிய தாக்குதல்களைத் தொடர்ந்து கத்தாருக்குச் செல்லும் ஆஸ்திரேலியர்கள்...

சோதனைக்கு உட்படுத்தப்படும் சிட்னி குழந்தை பராமரிப்பு மையத்தில் உள்ள குழந்தைகள்

சிட்னியின் கிழக்கே உள்ள Waverly-இல் உள்ள Little Feet Early Learning and Childcare-இல் 104 குழந்தைகளும் 34 ஊழியர்களும் காச நோயால் பாதிக்கப்படும் அபாயத்தில்...

நாடாளுமன்றத்திற்கு தீ வைத்த நேபாள போராட்டக்காரர்கள்

நேபாளத்தில் பல தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு மோசமான அமைதியின்மை தொடர்ந்தால், நிலைமையைக் கட்டுப்படுத்த நேபாள ராணுவம் உட்பட அனைத்து பாதுகாப்பு நிறுவனங்களும் தலையிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய...