Newsடெல்லி கேபிட்டல்ஸை சம்பவம் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் - IPL 2024

டெல்லி கேபிட்டல்ஸை சம்பவம் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் – IPL 2024

-

IPL 2024 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை வீழ்த்தியது.

நாணய சுழற்சியில் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் களமிறங்கியது.

தொடக்க வீரர்கள் சொதப்பிய நிலையில் Riyan Parag தனியாளாக அணியின் ஸ்கோரை ஜெட் வேகத்தில் உயர்த்தினார்.

பராக் 45 பந்துகளில் 84 ஓட்டங்களும், அஸ்வின் 19 பந்துகளில் 29 ஓட்டங்களும் விளாசினர். டெல்லி கேபிட்டல்ஸ் அணி தரப்பில் பந்துவீசிய ஐந்து பந்துவீச்சாளர்களும் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய டெல்லி அணியில் மிட்செல் மார்ஷ் அடுத்தடுத்து பவுண்டரிகளை விரட்டினார். ஆனால், அவர் 23 (12) ஓட்டங்கள் எடுத்திருந்தபோது, நான்ரே பர்கரின் அசுரவேகத்தில் கிளீன் போல்டு ஆனார்.

அடுத்து வந்த ரிக்கி புய் அதே ஓவரில் சாம்சனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதற்கிடையில் David Warner ருத்ர தாண்டவம் ஆடினார்.

மறுமுனையில் ரிஷாப் பண்ட் நிதானமாக ஆட, டேவிட் வார்னர் 49 (34) ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அவரது ஸ்கோரில் 3 சிக்ஸர், 5 பவுண்டரிகள் அடங்கும்.

அடுத்து அணித்தலைவர் பண்ட் 28 ஓட்டங்களில் சஹால் ஓவரில் ஆட்டமிழக்க டெல்லி அணி சரிவை சந்தித்தது. அப்போது அதிரடியில் இறங்கிய ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சை சிதறடித்தார்.

கடைசி ஓவரில் டெல்லி அணியின் வெற்றிக்கு 16 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் ஆவேஷ் கான் பந்துவீசினார். மிரட்டலாகவும், துல்லியமாகவும் அவர் பந்துவீசியதால் டெல்லி அணியால் 4 ஓட்டங்கள் மட்டுமே அந்த ஓவரில் எடுக்க முடிந்தது.

இதன்மூலம் 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி பெற்றது. சஹால், பர்கர் தலா 2 விக்கெட்டுகளும், ஆவேஷ் கான் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

Latest news

அடுத்த மாதம் முதல் மொபைல் போன் பயன்படுத்தினால் ஓட்டுநர்களுக்கு அபராதம்

அடுத்த மாதம் முதல் ஆஸ்திரேலியாவின் சாலைச் சட்டங்களில் பல பெரிய மாற்றங்கள் நடைபெற உள்ளன. நாடு முழுவதும் செயல்படுத்தப்பட உள்ள AI கண்காணிப்பு கேமராக்களின் உதவியுடன் மொபைல்...

ஜப்பானில் ட்விட்டர் கொலையாளிக்கு நிறைவேற்றப்பட்ட மரணதண்டனை

ஜப்பான் 2017 ஆம் ஆண்டில் ஒன்பது பேரைக் கொன்ற ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது. 2022 க்குப் பிறகு அந்த நாடு மரண தண்டனையை அமுல்படுத்தியதில்...

உறைந்த தவளைகள் உட்பட 62,000 கிலோ உணவை ஆஸ்திரேலியாவிற்குள் சட்டவிரோதமாக கொண்டுவந்த பெண்

ஆஸ்திரேலியாவிற்குள் சட்டவிரோதமாக 62,000 கிலோகிராம் வெளிநாட்டு உணவைக் கொண்டு வந்ததற்காக ஒரு பெண்ணுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. போலியாக பெயரிடப்பட்ட polystyrene பெட்டிகளில் அடைக்கப்பட்டிருந்த அந்த உணவை ஆஸ்திரேலிய...

சர்வதேச மாணவர் சேர்க்கை குறைந்து வருவதால் வேலைகளைக் குறைக்க உள்ள பல்கலைக்கழகங்கள்

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய பிராந்திய பல்கலைக்கழகங்களில் ஒன்று, அதன் பட்ஜெட்டில் இருந்து $35 மில்லியன் சேமிக்க முயற்சிப்பதால், ஊழியர்களின் வேலைகள் குறைக்கப்படும் என்று கூறியுள்ளது. சர்வதேச மாணவர் வேலைவாய்ப்புகளில்...

உறைந்த தவளைகள் உட்பட 62,000 கிலோ உணவை ஆஸ்திரேலியாவிற்குள் சட்டவிரோதமாக கொண்டுவந்த பெண்

ஆஸ்திரேலியாவிற்குள் சட்டவிரோதமாக 62,000 கிலோகிராம் வெளிநாட்டு உணவைக் கொண்டு வந்ததற்காக ஒரு பெண்ணுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. போலியாக பெயரிடப்பட்ட polystyrene பெட்டிகளில் அடைக்கப்பட்டிருந்த அந்த உணவை ஆஸ்திரேலிய...

சர்வதேச மாணவர் சேர்க்கை குறைந்து வருவதால் வேலைகளைக் குறைக்க உள்ள பல்கலைக்கழகங்கள்

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய பிராந்திய பல்கலைக்கழகங்களில் ஒன்று, அதன் பட்ஜெட்டில் இருந்து $35 மில்லியன் சேமிக்க முயற்சிப்பதால், ஊழியர்களின் வேலைகள் குறைக்கப்படும் என்று கூறியுள்ளது. சர்வதேச மாணவர் வேலைவாய்ப்புகளில்...