Sports7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது KKR - IPL 2024

7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது KKR – IPL 2024

-

IPL 2024 கிரிக்கெட் தொடரின் 10 ஆவது லீக் போட்டியில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. பெங்களூருவில் நடைபெற்ற இந்த போட்டியில் நாணயசுழற்சியில் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி துடுப்பெடுத்தாடிய பெங்களூரு அணிக்கு விராட் கோலி நல்ல ஆரம்பத்தைக் கொடுத்தார். இவருடன் ஆரம்ப வீரராக களமிறங்கிய அணி தலைவர் போப் டு பிளெசிஸ் 8 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். போட்டி முடிவில் பெங்களூரு அணி 6 விக்கெட்டுகளை இழந்து 182 ஓட்டங்களை குவித்தது.

இதைத் தொடர்ந்து 183 ஓட்டங்களை துரத்திய கொல்கத்தா அணிக்கு, பில் சால்ட் மற்றும் சுனில் நரைன் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். இருவரும் முறையே 30 மற்றும் 47 ஓட்டங்களை குவித்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த வெங்கடேஷ் அய்யர் மற்றும் ஸ்ரேயஸ் அய்யர் சிறப்பாக ஆடி ஓட்டங்களை குவித்தனர். அதிரடியாக ஆடிய வெங்கடேஷ் அய்யர் 30 பந்துகளில் அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார்.

ஸ்ரேயஸ் அய்யர் 24 பந்துகளில் 39 ஓட்டங்களை குவிக்க கொல்கத்தா அணி 16.5 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 186 ஓட்டங்களை குவித்து எளிதாக வெற்றி பெற்றது. பெங்களூரு சார்பில் வைசாக், யாஷ் தயால் மற்றும் மயான்க் டாகர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இதன் மூலம் கொல்கத்தா அணி விளையாடிய இரு போட்டிகளிலும் தோல்வி இன்றி வெற்றி பெற்றுள்ளது. பெங்களூரு அணி இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளில் ஒரு வெற்றி, இரு தோல்விகளை பெற்றிருக்கிறது.

நன்றி தமிழன்

Latest news

மகன் செய்த தவறால் தந்தைக்கு விதிக்கப்பட்ட அபராதம்

தனது மகன் சட்டவிரோதமாக சாலை ஓட்டியதற்காக ஒரு தந்தைக்கு $700 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குயின்ஸ்லாந்து காவல்துறை இந்த அபராதத்தை 50 வயது தந்தைக்கு விதித்தது. தனது 15 வயது...

புடினின் ஈஸ்டர் போர்நிறுத்தத்தை சந்தேகிக்கும் ஜெலென்ஸ்கி

ஈஸ்டர் பண்டிகையையொட்டி அறிவிக்கப்பட்ட ஒரு குறுகிய கால போர் நிறுத்தத்திற்குப் பிறகும், ரஷ்யா தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைனுடனான போரில் ரஷ்ய...

Rottnest தீவில் சொகுசு படகில் ஏற்பட்ட தீ விபத்து

ஆஸ்திரேலியாவின் ரோட்னெஸ்ட் தீவு அருகே தீப்பிடித்து முற்றிலுமாக எரிந்த சொகுசு கப்பல் குறித்து போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். கப்பல் தீப்பிடித்து எரிந்ததை அடுத்து , ரோட்னெஸ்ட் தீவில்...

பிரதமரிடம் குடியேறிகள் குறித்து ஒருவர் கேட்ட கேள்வி இணையத்தில் வைரல்

பிரதமர் அந்தோணி அல்பானீஸிடம் குடியேறிகள் குறித்து ஒருவர் கேட்ட கேள்வி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. மெல்போர்னில் உள்ள ஒரு ஹோட்டலின் லாபி அருகே நின்று கொண்டிருந்தபோது...

மெல்பேர்ண் நகரில் பரபரப்பான தெருவில் கத்திக்குத்து – ஒருவர் பலி

மெல்பேர்ணில் உள்ள சேப்பல் தெருவில் 20 வயது இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் மெல்பேர்ணின் மிகவும் பரபரப்பான தெருவான சேப்பல் தெருவில்...

புடினின் ஈஸ்டர் போர்நிறுத்தத்தை சந்தேகிக்கும் ஜெலென்ஸ்கி

ஈஸ்டர் பண்டிகையையொட்டி அறிவிக்கப்பட்ட ஒரு குறுகிய கால போர் நிறுத்தத்திற்குப் பிறகும், ரஷ்யா தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைனுடனான போரில் ரஷ்ய...