Sportsதன் முதல் வெற்றியை பதிவு செய்தது லக்னோ - IPL 2024

தன் முதல் வெற்றியை பதிவு செய்தது லக்னோ – IPL 2024

-

17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் லக்னோவில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின.இதில் நாணயசுழற்சியில் வென்ற லக்னோ அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. அதன்படி தொடக்க வீரர்களாக குயின்டன் டி கொக் , கே.எல். ராகுல் ஆகியோர் களமிறங்கினர்.

தொடக்கத்தில் கே.எல்.ராகுல் 15 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த படிக்கல் 9 ஓட்டங்களில் வெளியேறினார். பின்னர் வந்த ஸ்டாய்னிஸ் 19 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். மறுபுறம் டி கொக் சிறப்பாக நிலைத்து ஆடி ஓட்டங்களை குவித்த அவர் அரைசதமடித்த நிலையில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து நிக்கோலஸ் பூரன் , குருனால் பாண்டியா இருவரும் இணைந்து அதிரடி காட்டினர். பந்துகளை பவுண்டரி , சிக்சருக்கு பறக்க விட்டனர்.

இதனால் லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 199 ஓட்டங்களை குவித்தது. நிக்கோலஸ் பூரன் 21 பந்துகளில் 42 ஓட்டங்களும், குருனால் பாண்டியா 22 பந்துகளில் 43 ஓட்டங்களும் எடுத்தனர் . பஞ்சாப் அணி சார்பில் சாம் கரன் 3 விக்கெட்டும் , அர்ஷிதீப் சிங் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

தொடர்ந்து இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் வலுவான அடித்தளம் அமைத்து கொடுத்தனர். தவான் – பேர்ஸ்டோ இருவரும் இணைந்து 102 ஓட்டங்களை பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், பேர்ஸ்டோ 42 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய வீரர்களில் பிரப்சிம்ரன் சிங் 19 ஓட்டங்களுடனும், ஜித்தேஷ் 6 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் தவான் போராடினார். ஆனால் மற்ற வீரர்களில் யாரும் அவருக்கு பெரிய அளவில் ஒத்துழைக்கவில்லை.

முடிவில் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 178 ஓட்டங்களை மட்டுமே அடித்தது. இதன் மூலம் 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற லக்னோ 2-வது போட்டியில் விளையாடி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

பஞ்சாப் தரப்பில் அதிகபட்சமாக தவான் 70 ஓட்டங்கள் அடித்தார். லக்னோ தரப்பில் மயங்க் யாதவ் 3 விக்கெட்டுகளும், மோஷின் கான் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றி அசத்தினர்.

Latest news

30 மில்லியன் டாலர்களுக்கு சொந்தக்காரர்களான மெல்பேர்ண் தம்பதியினர்

மெல்பேர்ண், Point Cook-ஐ சேர்ந்த ஒரு ஜோடி, கடந்த 27ம் திகதி நடந்த PowerBall டிராவில் 30 மில்லியன் டாலர் ரொக்கப் பரிசை வென்றுள்ளது. அவர்கள் இந்தப்...

விக்டோரியா பறவைக் காய்ச்சலின் தீவிரம் – 2028 வரை முட்டைகள் இல்லை.

விக்டோரியன் பறவைக் காய்ச்சல் பரவல் காரணமாக ஆஸ்திரேலியாவில் முட்டை விலைகள் மேலும் உயரும் என்று வர்த்தகர்கள் எச்சரிக்கின்றனர். முட்டை பற்றாக்குறை குறைந்தது 2028 வரை நீடிக்கும் என்று...

மூடப்படும் தருவாயில் உள்ள பிரபல ஆஸ்திரேலிய கேசினோ நிறுவனம்

ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு பெரிய சூதாட்ட வணிகம் நிதி நெருக்கடியை எதிர்கொள்கிறது. கேசினோ நிறுவனமான The star அதன் அரையாண்டு நிதி முடிவுகளை அறிவிக்கத் தவறியதால், ஆஸ்திரேலிய...

தட்டம்மை குறித்து கவனமாக இருக்குமாறு விக்டோரியர்களுக்கு எச்சரிக்கை

விக்டோரியாவிற்கு தட்டம்மை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மெல்பேர்ணில் இருந்து இரண்டு தட்டம்மை வழக்குகள் பதிவான பிறகு இது நிகழ்ந்தது. விக்டோரியன் சுகாதார அதிகாரிகள், வெளிநாடுகளுக்குச் செல்லாததால், சமூகத்திற்குள் தட்டம்மை பரவும்...

தட்டம்மை குறித்து கவனமாக இருக்குமாறு விக்டோரியர்களுக்கு எச்சரிக்கை

விக்டோரியாவிற்கு தட்டம்மை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மெல்பேர்ணில் இருந்து இரண்டு தட்டம்மை வழக்குகள் பதிவான பிறகு இது நிகழ்ந்தது. விக்டோரியன் சுகாதார அதிகாரிகள், வெளிநாடுகளுக்குச் செல்லாததால், சமூகத்திற்குள் தட்டம்மை பரவும்...

இளம் குழந்தைகளின் நலனுக்காக Apple எடுத்துள்ள புதிய நடவடிக்கை

இளம் குழந்தைகளின் தொலைபேசி பயன்பாட்டை மேலும் பாதுகாக்க ஆப்பிள் பல புதிய நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இது பெற்றோர் கட்டுப்பாட்டு அமைப்பில் பல புதிய மாற்றங்களை அறிமுகப்படுத்தும், இது...