Sportsதன் முதல் வெற்றியை பதிவு செய்தது லக்னோ - IPL 2024

தன் முதல் வெற்றியை பதிவு செய்தது லக்னோ – IPL 2024

-

17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் லக்னோவில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின.இதில் நாணயசுழற்சியில் வென்ற லக்னோ அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. அதன்படி தொடக்க வீரர்களாக குயின்டன் டி கொக் , கே.எல். ராகுல் ஆகியோர் களமிறங்கினர்.

தொடக்கத்தில் கே.எல்.ராகுல் 15 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த படிக்கல் 9 ஓட்டங்களில் வெளியேறினார். பின்னர் வந்த ஸ்டாய்னிஸ் 19 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். மறுபுறம் டி கொக் சிறப்பாக நிலைத்து ஆடி ஓட்டங்களை குவித்த அவர் அரைசதமடித்த நிலையில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து நிக்கோலஸ் பூரன் , குருனால் பாண்டியா இருவரும் இணைந்து அதிரடி காட்டினர். பந்துகளை பவுண்டரி , சிக்சருக்கு பறக்க விட்டனர்.

இதனால் லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 199 ஓட்டங்களை குவித்தது. நிக்கோலஸ் பூரன் 21 பந்துகளில் 42 ஓட்டங்களும், குருனால் பாண்டியா 22 பந்துகளில் 43 ஓட்டங்களும் எடுத்தனர் . பஞ்சாப் அணி சார்பில் சாம் கரன் 3 விக்கெட்டும் , அர்ஷிதீப் சிங் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

தொடர்ந்து இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் வலுவான அடித்தளம் அமைத்து கொடுத்தனர். தவான் – பேர்ஸ்டோ இருவரும் இணைந்து 102 ஓட்டங்களை பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், பேர்ஸ்டோ 42 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய வீரர்களில் பிரப்சிம்ரன் சிங் 19 ஓட்டங்களுடனும், ஜித்தேஷ் 6 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் தவான் போராடினார். ஆனால் மற்ற வீரர்களில் யாரும் அவருக்கு பெரிய அளவில் ஒத்துழைக்கவில்லை.

முடிவில் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 178 ஓட்டங்களை மட்டுமே அடித்தது. இதன் மூலம் 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற லக்னோ 2-வது போட்டியில் விளையாடி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

பஞ்சாப் தரப்பில் அதிகபட்சமாக தவான் 70 ஓட்டங்கள் அடித்தார். லக்னோ தரப்பில் மயங்க் யாதவ் 3 விக்கெட்டுகளும், மோஷின் கான் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றி அசத்தினர்.

Latest news

NSW-வில் திருட்டுபோன Wagyu பசுக்களின் கருக்கள் மற்றும் விந்தணுக்கள்

நியூ சவுத் வேல்ஸைச் சேர்ந்த ஒருவர் மீது, மோசடியான பரிவர்த்தனையில் Wagyu கால்நடைகளின் கருக்கள் மற்றும் விந்தணுக்களைத் திருடியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர் பணிபுரிந்த கால்நடை பண்ணையின்...

பதவியேற்றார் விக்டோரியாவின் புதிய தலைமை காவல்துறை ஆணையர்

விக்டோரியாவின் புதிய தலைமை காவல் ஆணையராக Mike Bush அதிகாரப்பூர்வமாக பதவியேற்றுள்ளார். நியூசிலாந்து முன்னாள் காவல்துறை ஆணையர் சமீபத்தில் Glen Waverley போலீஸ் அகாடமியில் நடந்த விழாவில்...

நீங்கள் கோவிட் தடுப்பூசி போட்டுக்கொண்டீர்களா? உங்களுக்கும் இந்த அறிகுறிகள் உள்ளதா?

AstraZeneca கோவிட் தடுப்பூசி வலிமிகுந்த மூளை வீக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். AstraZeneca தடுப்பூசியைப் பெற்ற பிறகு மூளை மற்றும் முதுகுத் தண்டுவடத்தில் வீக்கம் ஏற்பட்ட...

புதிய கட்டண முறையை அறிமுகப்படுத்தியுள்ள Woolworths

Woolworths நிறுவனம் Scan&Go மொபைல் கட்டண அம்சத்தை நீக்கிவிட்டு புதிய கட்டண முறையை அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது. தற்போதுள்ள முறையின் கீழ், பொருட்களுக்கான பணம் மொபைல் போன்...

புதிய கட்டண முறையை அறிமுகப்படுத்தியுள்ள Woolworths

Woolworths நிறுவனம் Scan&Go மொபைல் கட்டண அம்சத்தை நீக்கிவிட்டு புதிய கட்டண முறையை அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது. தற்போதுள்ள முறையின் கீழ், பொருட்களுக்கான பணம் மொபைல் போன்...

நெடுஞ்சாலையின் நடுவில் டைட்டானிக் காட்சிகள் – $600 அபராதம் 

விக்டோரியாவில் உள்ள ஒரு பிரபலமான சாலையில் தனது காரின் திறந்த sunroof மீது இருந்து டைட்டானிக் காட்சியை நிகழ்த்தியதற்காக ஒரு பெண்ணுக்கு காவல்துறை $600 அபராதம்...