Newsவெள்ள அபாயம் உள்ள பகுதியில் 78 வீடுகள் கட்டும் திட்டம் -...

வெள்ள அபாயம் உள்ள பகுதியில் 78 வீடுகள் கட்டும் திட்டம் – உள்ளூர்வாசிகள் கடும் எதிர்ப்பு

-

விக்டோரியா மாகாணத்தில் உள்ள பெண்டிகோ நகரில் வெள்ள அபாயம் உள்ள பகுதியில் 78 வீடுகள் கட்டும் திட்டத்திற்கு உள்ளூர்வாசிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

வீடுகளை நிர்மாணிக்க உத்தேசித்துள்ள பிரதேசத்தில் வசிக்கும் மக்கள் இது வீடுகளை நிர்மாணிப்பதற்கு சரியான இடம் அல்ல என சுட்டிக்காட்டுகின்றனர்.

அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாதுகாப்பற்ற நிலையில் உள்ள இந்த நிலத்தில் வீடுகள் கட்டினால் எதிர்காலத்தில் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என எச்சரிக்கின்றனர்.

இப்பகுதி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதிக மழை பெய்யும் காலங்களில் பெண்டிகோ ஆற்றின் நீர்மட்டம் வேகமாக உயர்வதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும், வீடுகள் கட்ட உத்தேசித்துள்ள நிலம் விவசாய நிலம் என்பதால், வீட்டுத்திட்டத்தை அண்டை பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டும் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

இப்பகுதியின் முன்னாள் மாநில கவுன்சிலர் மேக்ஸ் டர்னர், வெள்ளப்பெருக்கு மேம்பாடு நல்ல யோசனையல்ல என்கிறார்.

இப் பிரேரணை தொடர்பில் சபையில் சமூகமளிக்கும் சந்தர்ப்பம் 25ஆம் திகதியுடன் முடிவடைந்தது.

நிலம் வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடியதாக இருந்தாலும், திட்டமிடல் மற்றும் கட்டிட அனுமதி நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டால், வளர்ச்சித் திட்டங்கள் நிறுத்தப்படாது என்று பெண்டிகோ நகர அதிகாரிகள் தெரிவித்தனர்.

Latest news

பயங்கரவாதத் தடுப்புச் சட்டங்களை நிறைவேற்ற மீண்டும் கூடும் நாடாளுமன்றம்

வெறுப்புப் பேச்சு மற்றும் துப்பாக்கி திரும்பப் பெறுதல் சட்டங்களை நிறைவேற்றுவதற்காக நாடாளுமன்றம் அடுத்த வாரம் மீண்டும் கூட உள்ளது. இன்று பிற்பகல் ஒரு செய்தியாளர் கூட்டத்தில், பிரதமர்...

தீப்பிழம்புகளுக்கு மத்தியில் ஒரு கப்பல் கொள்கலனில் தங்கியிருந்த மூவர் மீட்பு

விக்டோரியாவிலிருந்து ஒரு நபர் தனது வீடு காட்டுத்தீயில் எரிந்து கொண்டிருந்தபோது, ​​ஒரு கப்பல் கொள்கலனுக்குள் ஒளிந்து கொண்டு உயிர் பிழைத்ததைப் பற்றிய ஒரு கதை பதிவாகியுள்ளது. Longwood-இல்...

சந்தேகத்திற்கிடமான மின்னஞ்சல்கள் குறித்து இன்ஸ்டாகிராம் பயனர்கள் எச்சரிக்கை

கடவுச்சொல் மீட்டமைப்புகளைக் கேட்கும் சந்தேகத்திற்கிடமான மின்னஞ்சல்கள் குறித்து மில்லியன் கணக்கான பயனர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு இன்ஸ்டாகிராம் எச்சரித்துள்ளது. கடவுச்சொல் மீட்டமைப்பு மின்னஞ்சல்களைக் கோராமலேயே பெறுவது குறித்து பயனர்கள்...

குயின்ஸ்லாந்திற்குள் நுழையும் Koji புயல் – 2 பகுதிகளுக்கு திடீர் வெள்ள அபாயம்

வெப்பமண்டல சூறாவளி Koji குயின்ஸ்லாந்து மாநிலத்திற்குள் நுழைந்துள்ளது. அடுத்த சில மணிநேரங்களில் Ayr மற்றும் Bowen-ஐ சுற்றியுள்ள குடியிருப்பாளர்கள் மிக அதிக மழையால் பாதிக்கப்படுவார்கள் என்றும், இது...

குயின்ஸ்லாந்திற்குள் நுழையும் Koji புயல் – 2 பகுதிகளுக்கு திடீர் வெள்ள அபாயம்

வெப்பமண்டல சூறாவளி Koji குயின்ஸ்லாந்து மாநிலத்திற்குள் நுழைந்துள்ளது. அடுத்த சில மணிநேரங்களில் Ayr மற்றும் Bowen-ஐ சுற்றியுள்ள குடியிருப்பாளர்கள் மிக அதிக மழையால் பாதிக்கப்படுவார்கள் என்றும், இது...

புதிய Influenza தொற்றுநோய் – காய்ச்சல் நோயாளிகள் அதிகரிப்பு

'Super-K' அல்லது subclade-K எனப்படும் புதிய இன்ஃப்ளூயன்ஸா திரிபு, காய்ச்சல் நோயாளிகளில் அசாதாரண அதிகரிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று தொற்றுநோயியல் நிபுணர்கள் கூறுகின்றனர். WHO ஒத்துழைப்பு மையத்தின் இன்ஃப்ளூயன்ஸா...