Newsகாசாவில் உயிரிழந்த அவுஸ்திரேலிய உதவிப் பணியாளர்!

காசாவில் உயிரிழந்த அவுஸ்திரேலிய உதவிப் பணியாளர்!

-

மத்திய காசா பகுதியில் வான்வழித் தாக்குதலில் அவுஸ்திரேலிய உதவிப் பணியாளர் ஒருவர் உயிரிழந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மெல்போர்னில் பிறந்த லால்சுவாமி பிராங்காம், மத்திய காசா பகுதியில் உள்ள தொண்டு மையத்தில் மற்ற மூன்று சர்வதேச உதவிப் பணியாளர்கள் மற்றும் ஒரு பாலஸ்தீனிய ஓட்டுனருடன் பணிபுரியும் போது தாக்கப்பட்டார்.

உயிரிழந்த 5 பேரின் உடல்களும் அல் அக்சா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் மூவரின் பாஸ்போர்ட்டுகள் மருத்துவமனை ஊழியர்களால் சமூக ஊடகங்களில் சேர்க்கப்பட்டுள்ளன.

இதில் பிரிட்டிஷ், ஆஸ்திரேலிய மற்றும் போலந்து கடவுச்சீட்டுகள் அடங்கும்.

இந்த குழுவினர் வடக்கு காசா பகுதி வழியாக மத்திய காசா பகுதிக்கு சென்று கொண்டிருந்த போது அவர்களது வாகனம் வான்வழித் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் வடக்கில் பொதுமக்களுக்கு உதவிகளை செய்துவிட்டு ரஃபாவுக்குத் திரும்பிக் கொண்டிருந்ததாகவும் தகவல் உள்ளது.

44 வயதான ஃபிராங்காம், தேசிய மற்றும் சர்வதேச மனிதாபிமானப் பணிகளில் ஈடுபட்டு, 2019 ஆம் ஆண்டு நியூ சவுத் வேல்ஸில் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உதவிகளை வழங்கியுள்ளார்.

பிரதமர் அந்தோனி அல்பானீஸ், காஸாவில் ஏற்பட்டுள்ள இந்த சோகமான செய்தி மற்றும் உயிரிழப்பு குறித்து ஆழ்ந்த கவலையடைவதாக கூறினார்.

Latest news

அமெரிக்காவில் இந்திய மாணவர்களின் விசா இரத்து

அமெரிக்காவில் குடியேற்றவிதிகளை ட்ரம்ப் கடுமையாக்கி வருகிறார். சட்ட விரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினரை நாடு கடத்தி வருகிறார். மேலும் மாணவர்களின் போராட்டம் உட்பட பல்வேறு காரணங்களால் வெளிநாட்டு...

பூமி மீது மோதும் விண்கற்கள் – ஆபத்தை தவிர்க்க நாசா புதிய திட்டம்

சூரிய குடும்பத்தில் ஏராளமான விண்கற்கள் இருக்கின்றன. இவற்றில் எது? எப்போது பூமி மீது மோதும் என்பதை கணிக்க முடியாததாக இருக்கிறது. இருப்பினும் இந்த ஆபத்தை தவிர்க்க...

100 மில்லியன் டாலர்களை இழந்த ஆஸ்திரேலியர்கள்

இந்த நீண்ட வார இறுதியில் ஆஸ்திரேலியர்களின் செலவு கடுமையாக அதிகரித்துள்ளது. ஆஸ்திரேலியர்கள் கஃபேக்கள் மற்றும் உணவகங்களுக்குச் செல்வதற்காக கூடுதலாக $98.4 மில்லியன் செலவிடுவதாக ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. தொடர்ந்து 4...

ஆஸ்திரேலியா அடுத்த 5 ஆண்டுகளில் மில்லியன் கணக்கான வீடுகளை இழக்கும்

ஆஸ்திரேலியாவின் தற்போதைய வீட்டுவசதி கட்டுமானக் கொள்கைகள் தொடர்ந்தால், அடுத்த 5 ஆண்டுகளில் ஆஸ்திரேலியா 1.2 மில்லியன் வீடுகளை இழக்கும் என்று கிராட்டன் நிறுவனம் கூறுகிறது. குடியேற்றக் கட்டுப்பாடுகள்...

அடிலெய்டு கடற்கரைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அடிலெய்டு கடற்கரையில் ஒரு பெரிய வெள்ளை சுறா காணப்பட்டதை அடுத்து எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. இந்த கடற்கரையில் 4.5 மீட்டர் நீளமுள்ள பெரிய வெள்ளை சுறா உட்பட பல...

உலக பத்திரிகையில் பிரபலமான கைகளில்லாத பாலஸ்தீன சிறுவன்

இஸ்ரேலிய தாக்குதலால் இரு கைகளையும் இழந்த ஒரு இளம் பாலஸ்தீன சிறுவனின் புகைப்படம் இந்த ஆண்டின் உலக பத்திரிகை புகைப்படமாக கௌரவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகைப்படம் கத்தாரியைச் சேர்ந்த...