SportsRCB-யை 28 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது லக்னோ - IPL 2024

RCB-யை 28 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது லக்னோ – IPL 2024

-

IPL தொடரின் 15-வது லீக் ஆட்டத்தில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதின. இதில் நாணயசுழற்சியில் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

அதன்படி களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 181 ஓட்டங்களை சேர்த்தது. அதிகபட்சமாக டிகாக் 81 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார். RCB அணி தரப்பில் மேக்ஸ்வெல் 2 விக்கெட்டும் சிராஜ், ரீஸ் டோப்லி 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனையடுத்து RCB அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் கோலி – டுபிளிசிஸ் களமிறங்கினர். சிறப்பாக ஆடிய விராட் கோலி 22 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

மறுமுனையில் ஆடிய டுபிளிசிஸ் 1 ஓட்டத்திற்கு ஆசைபட்டு தனது விக்கெட்டை ரன் அவுட் முறையில் இழந்தார். அடுத்து வந்த மேக்ஸ்வெல் டக் அவுட்டில் வெளியேறினார்.

அடுத்து வந்த க்ரீன் 9 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ஓட்டங்களுடன் பெவிலியன் திரும்பினர். அதிரடியாக விளையாடி லோம்ரோர் ஆர்.சி.பி வெற்றிக்காக போராடினார். அவர் 13 பந்தில் 33 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்க ஆர்சிபி அணியின் தோல்வி உறுதியானது.

இறுதியில் RCB அணி 19.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 153 ஓட்டங்களை சேர்த்தது. இதனால் லக்னோ அணி 28 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

லக்னோ அணி தரப்பில் மயங்க் யாதவ் 3 விக்கெட்டுகளை அள்ளினார். இது RCB அணிக்கு 3-வது தோல்வியாகும். இது லக்னோ அணிக்கு 2-வது வெற்றி ஆகும்.

Latest news

ஆஸ்திரேலியாவில் கடுமையான பனிப்பொழிவு ஏற்படும் என எச்சரிக்கை

இந்த வாரம் பல பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு ஏற்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த வாரம் பல மாநிலங்களில் ஆலங்கட்டி மழை, மழை மற்றும்...

நாடு முழுவதும் பலத்த மழை பெய்யும் என எச்சரிக்கை

தென்கிழக்கு ஆஸ்திரேலியாவில் மில்லியன் கணக்கான மக்கள் இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக மழையை எதிர்கொள்கின்றனர். குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நாடு முழுவதும் மழை...

மேலும் இரு நாடுகளில் போர் நிறுத்தத்திற்கு வழிவகுக்கும் டிரம்பின் தலையீடு

எல்லையில் மூன்று நாட்கள் சண்டைக்குப் பிறகு, போர் நிறுத்தம் குறித்து விவாதிக்க கம்போடியாவும் தாய்லாந்தும் சந்திக்க ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இதற்காக டிரம்பிற்கு...

இளையராஜாவின் இசைக்கு எழுந்து நின்று மரியாதை செலுத்திய பிரதமர் நரேந்திர மோடி

கங்கைகொண்ட சோழபுரத்தில் இளையராஜாவின் இசைக்கு பிரதமர் நரேந்திர மோடி எழுந்து நின்று மரியாதை செலுத்தியுள்ளார். அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையார் கோயிலில் நடைபெற்ற முதலாம் ராஜேந்திர...

விக்டோரியா அரசாங்கத்தின் புதிய வரி எங்களுக்கு ஒரு சுமை!

விக்டோரியன் கவுன்சில்கள் விக்டோரியன் அரசாங்கத்தின் புதிய அவசர சேவை வரியை சவால் செய்கின்றன. அந்த நோக்கத்திற்காக மேயர்கள் நேற்று மெல்பேர்ணில் கூடினர். பல பில்லியன் டாலர் மதிப்புள்ள புதிய...

ஆஸ்திரேலிய அரசாங்கத்தை எச்சரிக்கும் Google

16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான சமூக ஊடகத் தடையில் YouTube-ஐயும் சேர்த்தால் ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் மீது வழக்குத் தொடரப்போவதாக கூகிள் அச்சுறுத்தியுள்ளது. Daily Telegraph செய்தியின்படி, Google தகவல்...