Sportsகுஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் - IPL 2024

குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் – IPL 2024

-

ஐ.பி.எல் தொடரின் 17-வது லீக் போட்டியில் குஜராத்- பஞ்சாப் அணிகள் மோதின. இதில் நாணயசுழற்சியில் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 199 ஓட்டங்களை குவித்தது. அதிகபட்சமாக கில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 89 ஓட்டங்களை எடுத்திருந்தார். பஞ்சாப் அணி தரப்பில் ரபாடா 2 விக்கெட்டும் ஹர்ப்ரீத் ப்ரார், ஒஹர்சல் படேல் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனையடுத்து பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக தவான் – பேர்ஸ்டோவ் களமிறங்கினர். தவான் 1 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பிரப்சிம்ரன் சிங் மற்றும் பேர்ஸ்டோவ் பவர்பிளேயில் சிறப்பாக ஓட்டங்களை சேர்த்தனர்.

பவர் பிளே முடிந்த முதல் ஓவரின் முதல் பந்தில் பேர்ஸ்டோவ் 22 ஓட்டங்களில் போல்ட் முறையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சாம் கரண் 5 ஓட்டங்களுடன் வெளியேறினார். அதனை தொடர்ந்து பிரப்சிம்ரன் சிங் 35 ஓட்டங்களிலும் ராசா 15 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.

இதனையடுத்து ஜிதேஷ் சர்மா- ஷஷாங்க் சிங் ஜோடி சேர்ந்து அணியின் வெற்றிக்காக போராடினார். இந்த ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 39 ஓட்டங்களை குவித்தது. ரஷித்கான் ஓவரில் தொடர்ந்து 2 சிக்சர்களை விளாசிய ஜிதேஷ் சர்மா 16 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடிய ஷஷாங்க் சிங் அரை சதம் விளாசினார்.

அடுத்து வந்த அசுதோஷ் சர்மா- ஷஷாங்க் சிங் ஜோடி பஞ்சாப் வெற்றிக்கு போராடினர். இறுதியில் 12 பந்துக்கு 25 ஓட்டங்கள் தேவை என்ற நிலைக்கு கொண்டு வந்தனர். 19-வது ஓவரில் இந்த ஜோடி 18 ஓட்டங்கள் எடுத்தது.

இதனால் கடைசி ஓவரில் 7 ஓட்டங்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரை தர்ஷன் நல்கண்டே வீசினார். முதல் பந்தில் அசுதோஷ் சர்மா ஆட்டமிழக்க அடுத்த பந்தை அகல பந்தாக வீசினார். 3-வது பந்தில் ஹர்ப்ரீத் 1 ஓட்டம் எடுத்தார்.

இதனால் கடைசி 3 பந்துக்கு 5 ஓட்டங்கள் தேவைப்பட்டது. அந்த பந்தை ஷஷாங்க் சிங் பவுண்டரி அடித்து ஓட்டங்களை சமன் செய்தார். அடுத்த பந்தில் பஞ்சாப் வெற்றி பெற்றது.

இறுதியில் பஞ்சாப் அணி 19.5 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 200 ஓட்டங்களை எடுத்து வெற்றி பெற்றது. குஜராத் தரப்பில் ரூர் அகமது 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

நன்றி தமிழன்

Latest news

மனித மூளையை கொல்லும் டிஜிட்டல் திரை – ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

ஒரு நாளைக்கு அதிக நேரம் டிஜிட்டல் திரைகளில் செலவிடுவது ஒரு நபரின் மன ஆரோக்கியத்தைப் பாதிக்கிறது என்று ஒரு புதிய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. இது மூளையின் செயல்பாடு...

விக்டோரியாவில் ரத்து செய்யப்படும் அபாயத்தில் உள்ள பிரபலமான இசை விழா

விக்டோரியா மக்களிடையே பிரபலமான இசை விழாவாகக் கருதப்படும் "Esoteric Music Festival" நடத்துவது தொடர்பாக பல சிக்கல்கள் எழுந்துள்ளன. இந்த முறை மார்ச் 7 முதல் 11...

விக்டோரியர்களுக்கு எதிர்காலத்தில் எளிதாகிவிடும் விமானப் பயணம்

விக்டோரியாவில் உள்ள பல பிராந்திய விமான நிலையங்களில் வசதிகளை மேம்படுத்த மத்திய அரசு மேலும் 4.5 மில்லியன் டாலர்களை ஒதுக்கியுள்ளது. மத்திய அரசால் செயல்படுத்தப்படும் பிராந்திய விமான...

விக்டோரியாவில் அதிகரித்துள்ள சர்வதேச மாணவர்களுக்கான கல்விக் கட்டணம்

விக்டோரியன் பள்ளிகளில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள் செலுத்தும் முழுநேர பாடநெறி கட்டணம் 2024 ஆம் ஆண்டில் அதிகரித்துள்ளதாக ஒரு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. இந்த தரவு அறிக்கையை ஆஸ்திரேலிய...

விக்டோரியாவில் அதிகரித்துள்ள சர்வதேச மாணவர்களுக்கான கல்விக் கட்டணம்

விக்டோரியன் பள்ளிகளில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள் செலுத்தும் முழுநேர பாடநெறி கட்டணம் 2024 ஆம் ஆண்டில் அதிகரித்துள்ளதாக ஒரு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. இந்த தரவு அறிக்கையை ஆஸ்திரேலிய...

மருத்துவ ரீதியாக கஞ்சா பயன்படுத்தும் விக்டோரியர்களுக்கு ஒரு நற்செய்தி

விக்டோரியா மாநிலத்தில் மருத்துவ கஞ்சாவைப் பயன்படுத்தும் நோயாளிகள் சிறப்பு நிவாரணத்திற்குத் தகுதியுடையவர்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, மார்ச் முதலாம் திகதி முதல், மருத்துவ நிலைமைகளுக்காக மருத்துவ...