Newsதாய்வானில் நிலநடுக்கத்தில் இடிபாடுகளுக்குள் நூற்றுக்கணக்கானோர்

தாய்வானில் நிலநடுக்கத்தில் இடிபாடுகளுக்குள் நூற்றுக்கணக்கானோர்

-

தாய்வானில் ஏற்பட்ட 7.4 ரிக்டா் அளவு கொண்ட நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த கட்டட இடிபாடுகளில் இன்னும் சுமாா் 600 போ் சிக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

அவா்களில், டரோக்கா பாா்க் பகுதியிலுள்ள ஒரு ஹோட்டலின் இடிபாடுகளுக்குள் மட்டும் சுமாா் 450 போ் இருப்பதாக அஞ்சப்படுகிறது.

இதற்கிடையே, இந்நிலநடுக்கத்தின் காரணமாக உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை நேற்று 13ஆக அதிகரித்தது.

தாய்வானின் தெற்குக் கடலோர நகரான ஹுவாலியனுக்கு சுமாா் 18 கிலோமீற்றர் தொலைவில் புதன்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் 7.4 அலகுகளாகப் பதிவான அது, கடந்த 25 ஆண்டுகளில் தாய்வான் சந்தித்திராத மிக சக்திவாய்ந்த நிலநடுக்கமாகும்.

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...