Newsபிரித்தானியாவில் பட்டப்பகலில் இளம் பெண்ணுக்கு நடந்த பயங்கரம்

பிரித்தானியாவில் பட்டப்பகலில் இளம் பெண்ணுக்கு நடந்த பயங்கரம்

-

பிரித்தானியாவின் பிராட்போர்ட் நகர மையத்தில் சனிக்கிழமை மதியம் ஒரு பெண் கத்திக்குத்து விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் Bradford நகர மையத்தில் Westgate மற்றும் Drewton Road சந்திப்பில் சுமார் 3:21 மணி அளவில் இளம்பெண் ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

West Yorkshire பொலிஸார் தகவலின்படி, ஒரு மர்ம நபர் 27 வயதான பெண்ணை தாக்கி விட்டு தப்பி ஓடிவிட்டார் என்று தெரியவந்துள்ளது.

படுகாயமடைந்த இளம் பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

கொலை செய்யப்பட்ட பெண்ணை காவல்துறை இதுவரை அடையாளம் காணவில்லை, ஆனால் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சிறப்பு பயிற்சி பெற்ற அதிகாரிகள் அவர்களுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர்.

அதே சமயம் மேற்கு யார்க்ஷயர் பொலிஸார் கொலை விசாரணையை தொடங்கியுள்ளனர்.

மேற்கு யார்க்ஷயர் காவல்துறையின் கொலை மற்றும் முக்கிய விசாரணை குழுவின் தலைமை காவல் ஆய்வாளர் Stacey Atkinson, “பரபரப்பான பகுதியில் பகல் நேரத்தில்” நடந்த இந்த சம்பவத்தை “கொடுமை” என்று குறிப்பிட்டுள்ளார்.

குற்றவாளியை கைது செய்வதில் கவனம் செலுத்தி விசாரணை நடந்து வருகிறது. தாக்குதல் நடத்திய நபர் பாதிக்கப்பட்ட பெண்ணை அறிந்திருக்கலாம் என்று டிசிஐ அட்கின்சன் நம்புகிறார்.

இந்த சம்பவத்தின் போது அங்கு இருந்தவர்கள் அல்லது தொடர்புடைய தகவல்கள் இருந்தால் முன்வர வேண்டும் என்று அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...