Sports7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது CSK - IPL 2024

7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது CSK – IPL 2024

-

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இதில் நாணயசுழற்சியில் வென்ற சென்னை அணியின் தலைவர் ருதுராஜ் கெய்க்வாட் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு முதல் பந்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரான பிலிப் சால்ட், துஷார் தேஷ்பாண்டே வீசிய முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். இந்த சீசனில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் கொல்கத்தா அணியை சென்னை பந்துவீச்சாளர்கள் முழுவதுமாக கட்டுப்படுத்தினர்.

கொல்கத்தா அணி வீரர்கள் சுனில் நரைன் 27 ஓட்டங்களிலும், ரகுவன்ஷி 24 ஓட்டங்களிலும், வெங்கடேஷ் ஐயர் 3 ஓட்டங்களிலும் ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரிங்கு சிங் 9 ஓட்டங்களிலும், ரசல் 10 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் கொல்கத்தா அணித் தலைவர் ஸ்ரேயாஸ் அய்யர் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை கௌரமான நிலைக்கு எட்ட உதவினார்.

பின்னர் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 137 ஓட்டங்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் அய்யர் 34 ஓட்டங்களை எடுத்தார். சென்னை தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஜடேஜா மற்றும் துஷார் தேஷ்பாண்டே ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், முஸ்டாபிசுர் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதனையடுத்து 138 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணியின் சார்பில் ரச்சின் ரவீந்திரா மற்றும் அணித் தலைவர் கெய்வாட் ஆகியோ களமிறங்கினர். இந்த ஜோடியில் ரவீந்திரா 15 (8) ஓட்டங்களில் பிடிகொடுத்து வெளியேறினார். அடுத்ததாக கெய்க்வாட்டுடன், டேரில் மிட்செல் ஜோடி சேர்ந்தார்.

இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கெய்க்வாட் 45 பந்துகளில் தனது அரை சதத்தை பூர்த்தி செய்து அசத்தினார். மறுமுனையில் நிதானமாக ஓட்டங்களை சேர்த்துக்கொண்டிருந்த டேரில் மிட்செல் 25 (19) ஓட்டங்களில் சுனில் நரைன் பந்துவீச்சில் போல்ட் ஆகி வெளியேறினார்.

அடுத்ததாக கெய்க்வாட்டுடன், ஷிவம் துபே ஜோடி சேர்ந்தார். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை மகிழ்வித்த ஷிவம் துபே 28 (18) ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

இறுதியில் கெய்க்வாட் 58 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 67 ஓட்டங்களும், தோனி 1 (3) ஓட்டங்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் சென்னை அணி 17.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 141 ஓட்டங்களை எடுத்தது. கொல்கத்தா அணியின் சார்பில் அதிகபட்சமாக வைபவ் அரோரா 2 விக்கெட்டுகளும், சுனில் நரைன் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதன்மூலம் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றதுடன், ஐ.பி.எல். தொடரின் தனது 3-வது வெற்றியை பதிவு செய்தது.

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...