Newsகாசாவில் இருந்து வெளியேறிய இஸ்ரேல் படைகள்

காசாவில் இருந்து வெளியேறிய இஸ்ரேல் படைகள்

-

தெற்கு காசாவில் இருந்து ஒரு பிரிவைத் தவிர மற்ற அனைத்தையும் திரும்பப் பெற்றதாக இஸ்ரேல் கூறுகிறது.

இதுவரையில் நிலவி வரும் மோதல்கள் தொடர்பாக இஸ்ரேலுக்கு சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்து வரும் நிலையிலேயே அவர்கள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

படையினர் வெளியேறியமைக்கான காரணமோ, அதில் ஈடுபட்ட மொத்த துருப்புக்களின் எண்ணிக்கையோ வெளியிடப்படவில்லை.

இஸ்ரேலிய குண்டுவீச்சினால் பாதிக்கப்பட்ட தெற்கு காசா நகரின் கான் யூனிஸ் பகுதியில் வசிப்பவர்கள், இஸ்ரேலியப் படைகள் நகர மையத்திலிருந்து வெளியேறி கிழக்கு மாவட்டங்களுக்கு பின்வாங்குவதைக் கண்டதாகக் கூறினர்.

ஹமாஸ் போராளிகளை ஒழிக்க விரும்புவதாக இஸ்ரேலிய தலைவர்கள் கூறியுள்ளனர், மேலும் அவர்கள் தெற்கு காஸா நகரமான ரஃபா மீதான படையெடுப்பை தாமதப்படுத்துவார்களா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்று கூறப்படுகிறது.

எகிப்து எல்லைக்கு அருகில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் தஞ்சமடைந்துள்ள ரஃபா நகரை தாக்கும் திட்டம் சர்வதேச கவனத்தையும் ஈர்த்துள்ளது.

போர்நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகள் விடுதலை ஒப்பந்தத்தை எட்டுவதை நோக்கமாகக் கொண்ட புதிய சுற்றுப் பேச்சுவார்த்தையை நடத்த எகிப்து தயாராகி வரும் நிலையில் இஸ்ரேலியப் படைகள் வாபஸ் பெறப்பட்டது.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு பதவி விலகக் கோரி இஸ்ரேலில் பாரிய மக்கள் போராட்டங்களுக்கு மத்தியில் இதுவும் நடக்கிறது.

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...