Breaking Newsசிட்னி ஷாப்பிங் மாலில் கத்தி குத்து சம்பவத்தில் 4 பேர் பலி

சிட்னி ஷாப்பிங் மாலில் கத்தி குத்து சம்பவத்தில் 4 பேர் பலி

-

சிட்னியின் வெஸ்ட்ஃபீல்ட் நகரில் உள்ள வணிக வளாகத்தில் இடம்பெற்ற கத்திக்குத்து மற்றும் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் கிடைத்த தகவலின் பிரகாரம் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் வாள்வெட்டு சம்பவத்தில் ஈடுபட்ட சந்தேக நபரை சுட்டுக்கொன்றதாக தெரிவிக்கப்படுகிறது.

வெஸ்ட்ஃபீல்ட் மாலில் இருந்து மக்கள் ஓடிவருவதைக் காண முடிந்தது, மேலும் பலர் காயமடைந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இச்சம்பவம் இன்று பிற்பகல் 3.45 மணியளவில் பதிவாகியதையடுத்து, பொலிஸார் அப்பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தி அப்பகுதிக்குள் நுழைவதைத் தடுத்துள்ளனர்.

நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், அந்த பகுதிக்கு மக்கள் வருவதை தவிர்க்குமாறும் போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

நியூ சவுத் வேல்ஸ் ஆம்புலன்ஸ் சேவை, தாக்குதல் நடத்தியவர் என நம்பப்படும் ஒருவர் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறியது.

ஒரு குழந்தை உட்பட பலர் காயமடைந்தனர் மற்றும் குறைந்தது ஆறு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Latest news

அதிகரித்து வரும் கட்டணங்களால் குளிரில் வாடும் ஆஸ்திரேலியர்கள்

வாழ்க்கைச் செலவு நெருக்கடியை எதிர்கொண்டு மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் ஹீட்டர்களின் பயன்பாட்டைக் குறைத்துள்ளதாக ஒரு புதிய கணக்கெடுப்பு வெளிப்படுத்தியுள்ளது. அதிக மின்சாரக் கட்டணங்களைத் தவிர்ப்பதற்காக ஆஸ்திரேலியர்களில் 13...

குற்றங்கள் பற்றிய தகவல்களைப் பரப்புபவர்களுக்கு ஒரு அறிவிப்பு

அனைத்து ஆஸ்திரேலியர்களும் குழு அரட்டைகளிலோ அல்லது சமூக ஊடகங்களிலோ குற்றம் மற்றும் சந்தேகத்திற்கிடமான நடத்தை பற்றி பதிவிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். குற்றங்கள் பற்றிய தகவல்களை...

70 பில்லியன் டாலர் வரி வருவாயை திரட்ட புதிய வரிகள் அறிமுகம்

70 பில்லியன் டாலர் வரி வருவாயை திரட்ட வணிக, தொழிற்சங்க மற்றும் சமூகத் தலைவர்களால் பல திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆஸ்திரேலிய பொருளாதாரம் குறித்து விவாதிக்க கான்பெராவில் கூடியபோது,...

ஆபத்தில் உள்ள மருந்துத் தொழிலாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் நிதித் தகவல்கள்

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய மருந்து விநியோகஸ்தர்களில் ஒன்றான DBG Health, சைபர் குற்றவாளிகளால் ஹேக் செய்யப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளது. ஆண்டுக்கு சுமார் $2 பில்லியன் வருவாய் ஈட்டும் நிறுவனம், அதன்...

காசாவில் போர் நிறுத்தத்திற்கு ஹமாஸ் சம்மதம்

காசா பகுதியில் போர் நிறுத்தம் மற்றும் இஸ்ரேலுடன் பணயக்கைதிகள் விடுதலை ஒப்பந்தத்திற்கு ஹமாஸ் ஒப்புக்கொண்டுள்ளதாக பாலஸ்தீன ஆயுதக் குழுவின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எகிப்து மற்றும் கத்தார் சமர்ப்பித்த...

தொடரும் வடிகாலில் கண்டெடுக்கப்பட்ட குழந்தையின் தாயைத் தேடும் பணி

பெர்த்தில் புயல் வடிகாலில் கண்டெடுக்கப்பட்ட புதிதாகப் பிறந்த குழந்தையின் தாயைக் கண்டுபிடிக்க போலீசார் சிறப்பு நடவடிக்கையைத் தொடங்கியுள்ளனர். நேற்று முந்தினம் மதியம் 1 மணியளவில் தொழிலாளர்கள் குழுவினால்...