Sydneyசிட்னியில் கத்தி குத்து சம்பவத்தின் கொலையாளி அடையாளம்

சிட்னியில் கத்தி குத்து சம்பவத்தின் கொலையாளி அடையாளம்

-

சிட்னி கிழக்கு போண்டி சந்தியில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் நேற்று பிற்பகல் கத்திக்குத்துச் சம்பவத்தை மேற்கொண்ட நபரின் அடையாளம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

குறித்த நபர் குயின்ஸ்லாந்தில் வசிக்கும் 40 வயதான ஜோயல் கௌச்சி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சந்தேகநபரின் தாக்குதலில் ஒன்பது மாதக் குழந்தையின் தாய் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

சந்தேக நபர் கடந்த மாதம் குயின்ஸ்லாந்தில் இருந்து நியூ சவுத் வேல்ஸுக்கு குடிபெயர்ந்துள்ளதாக நியூ சவுத் வேல்ஸ் உதவி பொலிஸ் ஆணையாளர் அந்தோனி குக் தெரிவித்துள்ளார்.

அவரது குடும்பத்தினருடன் பேசியதாகவும், அவர்கள் விசாரணைக்கு ஒத்துழைத்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

தாக்குதலுக்கான காரணம் உறுதிப்படுத்தப்படவில்லை, ஆனால் இது கொலையாளியின் மனநலத்துடன் தொடர்புடையதாக இருக்கும் என்று போலீசார் எதிர்பார்க்கிறார்கள்.

சந்தேக நபரைத் தவிர, நான்கு பெண்களும் ஒரு ஆணும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொரு பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Latest news

சீனாவில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது அடக்குமுறை

சீனாவில் அரச அங்கீகாரம் பெறாத நிலத்தடி தேவாலயங்கள் மீது கம்யூனிஸ்ட் அரசு தனது பிடியை இறுக்கி வருகிறது. செங்டூ நகரில் உள்ள புகழ்பெற்ற ‘ஏர்லி ரெயின்’ தேவாலயத்தின்...

கடுமையான காட்டுத்தீ எச்சரிக்கைகளுக்கு மத்தியில் தீப்பிடித்து எரியும் விக்டோரியா

விக்டோரியாவில் அதிக வெப்பநிலை காரணமாக இரண்டு கட்டுப்பாடற்ற காட்டுத்தீகள் ஏற்பட்டுள்ளன. இதனால் மத்திய விக்டோரியாவில் வீடுகள் மற்றும் சொத்துக்கள் அழிக்கப்படலாம் என்று கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Longwood...

வாடிக்கையாளர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் Woolworths

Woolworths அடுத்த சில வாரங்களுக்குள் வாடிக்கையாளர்களுக்கு புதிய கூடுதல் வரியை விதிக்க உள்ளது. பெப்ரவரி மாதம் முதல், ஞாயிற்றுக்கிழமை மற்றும் பொது விடுமுறை நாட்களில் பொருட்களை எடுத்துச்...

ஆஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்தப்படும் பிரித்தானியர்

மேற்கு ஆஸ்திரேலியாவில் வாழ்ந்து வரும் பிரித்தானிய நாட்டவர் ஒருவர் நியோ- நாசி அமைப்பில் உறுப்பினராக இருப்பதாக எழுந்த சந்தேகத்தை தொடர்ந்து அவரை நாட்டை விட்டு வெளியேற்ற...

சிவப்பு அறிவிப்புகள் இருந்தும் ஏமன் தீவுக்குச் சென்று சிக்கிய ஆஸ்திரேலியர்கள்

ஏமன் தீவு Socotra-இற்கு சுற்றுலா சென்ற ஆஸ்திரேலியர்கள் உட்பட 600க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டை விட்டு வெளியேற முடியாமல் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்குக் காரணம்,...

Grok AI-ஆல் உருவாக்கப்பட்ட பெண்களின் நிர்வாணப் படங்களை விசாரிக்கும் ஆஸ்திரேலியா

எலோன் மஸ்க்கின் X சமூக ஊடக வலையமைப்பான 'Grok' AI chatbot, பெண்கள் மற்றும் இளம் குழந்தைகளின் ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை (Deepfakes) உருவாக்கிய...