Sports20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது சென்னை - IPL 2024

20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது சென்னை – IPL 2024

-

17வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற 29வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் மோதின.

இப்போட்டிக்கான நாணயசுழற்சியில் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது. இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் தொடக்க வீரர்களாக ரஹானே, ரச்சின் ரவீந்திரா களமிறங்கினர்.ரஹானே 5 ஓட்டங்களிலும், ரவீந்திரா 21 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.

அடுத்து வந்த அணித் தலைவர் ருதுராஜ் கெய்குவாட், சிவம் துபே ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பொறுப்புடன் ஆடிய கெய்குவாட் 40 பந்துகளில் 5 பவுண்டரி, 5 சிக்சர்கள் உள்பட 69 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழக்க. பின்னர், மிச்சேல் உடன் ஜோடி சேர்ந்து தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷிவம் துபே அரைசதம் கடந்தார்.

மிச்சேல் 17 ஓட்டங்களில் ஆட்டமிழக்க. அடுத்து களமிறங்கிய டோனி கடைசி ஓவரில் 3 சிக்சர்களை பறக்கவிட்டார். இறுதியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 206 ஓட்டங்கள் குவித்தது.

ஷிவம் துபே 38 பந்துகளில் 66 ஓட்டங்களிலும், டோனி 4 பந்துகளில் 3 சிக்சர்கள் உள்பட 20 ஓட்டங்களிலும் களத்தில் இருந்தனர். இதையடுத்து 207 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் களமிறங்கியது.

தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா , இஷான் கிஷான் ஆகியோர் களமிறங்கினர். தொடக்கம் முதல் இருவரும் அதிரடி காட்டினர். தொடக்க விக்கெட்டுக்கு 70 ஓட்டங்கள் சேர்த்த நிலையில் இஷான் கிஷான் 23 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

பின்னர் வந்த சூர்யகுமார் யாதவ் ஓட்டம் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். மறுபுறம் ரோகித் சர்மா சிறப்பாக ஆடி ஓட்டங்களை குவித்தார். சென்னை அணியின் பந்துவீச்சை பவுண்டரி , சிக்சருக்கு பறக்க விட்ட ரோகித் சர்மா சதமடித்தார்.

மறுபுறம் திலக் வர்மா 31 ஓட்டங்களுக்கு வெளியேறினார். இறுதியில் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 186 ஓட்டங்களை மட்டும் எடுத்து. இதனால் 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது.

ரோகித் சர்மா 63 பந்துகளில் 103 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.சென்னை அணியில் சிறப்பாக பந்துவீசிய பதிரன 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

நன்றி தமிழன்

Latest news

Sturt நெடுஞ்சாலையில் மூன்று வாகனங்கள் மோதி விபத்து – ஒருவர் பலி

தெற்கு நியூ சவுத் வேல்ஸில் மூன்று வாகனங்கள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றும் ஒரு பெரிய நெடுஞ்சாலையும் மணிக்கணக்கில் மூடப்பட்டது. வெள்ளிக்கிழமை நண்பகல், வாகா வாகாவிலிருந்து...

மீண்டும் வெடித்த இந்தோனேசியாவின் Lewotobi Laki-Laki மலை

இந்தோனேசியாவின் Mount Lewotobi Laki-laki வெடித்து, 10 கிலோமீட்டருக்கும் அதிகமான உயரத்திற்கு சாம்பல் மேகத்தை வானத்தில் கக்கியுள்ளது. உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு 8:48 மணிக்கு எரிமலை...

இஸ்ரேலிய அதிகாரிகளின் மிருகத்தனமான நடத்தையை விவரித்த காசாவிற்கு உதவி பெற்ற ஆஸ்திரேலியர்கள்

காசாவிற்கு உதவிப் பொருட்களை ஏற்றிச் சென்ற கப்பலில் இருந்த இரண்டு ஆஸ்திரேலிய குடிமக்கள் இஸ்ரேலிய அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட பின்னர் நேற்று காலை சிட்னிக்குத் திரும்பினர். இஸ்ரேலிய...

ஆஸ்திரேலிய பள்ளி மாணவர்களின் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும் robotics

ஆஸ்திரேலியாவில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) பாடங்களை ஊக்குவிப்பதற்காக உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு robotics அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, coding வகுப்புகள், electronic tablet மற்றும்...

குற்றச் செயல்களுக்காக குழந்தைகளைத் தேர்ந்தெடுக்கும் குழுவைக் கண்டறிய நடவடிக்கைகள்

துப்பாக்கிச் சூடு மற்றும் வீடு கொள்ளைகளை நடத்துவதற்கு குழந்தைகளைச் சேர்ப்பதாக ஒரு புதிய குற்றக் கும்பல் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. G7 என்று அழைக்கப்படும் இந்தக் குழுவில்...

விக்டோரியாவில் கால் பகுதி குடும்பங்கள் விரைவில் $100 மின்சாரக் கட்டணத்தைக் குறைக்கலாம்

விக்டோரியாவின் அடுத்த சுற்று மின் சேமிப்பு போனஸுக்கான விண்ணப்பங்கள் இந்த மாத இறுதியில் திறக்கப்பட உள்ளன. ஆகஸ்ட் 25 முதல், சலுகை அட்டை உள்ள சுமார் 900,000...