Sportsமீண்டுமொரு பெரும் சாதனை படைத்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் அபார வெற்றி -...

மீண்டுமொரு பெரும் சாதனை படைத்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் அபார வெற்றி – IPL 2024

-

ஐ.பி.எல் தொடரின் 30ஆவது போட்டி செலஞ்சேர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையே இடம்பெற்றது.

பெங்களூரு எம். சின்னசாமி மைதானத்தில் இடம்பெறும் இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ரோயல் செலஞ்சேர்ஸ் பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 03 விக்கெட்டுக்களை இழந்து 287 ஓட்டங்களை எடுத்தது.

ஐபிஎல் போட்டிகளில் அணி ஒன்று பெற்றுக்கொண்ட அதிக ஓட்டங்களாக இது பதிவாகி செய்யப்பட்டுள்ளது.

ஐதராபாத் அணி சார்பில் அதிகபடியாக டிராவிஸ் ஹெட் 102 ஓட்டங்களையும், ஹென்ரிச் கிளாசென் 67 ஓட்டங்களையும் பெற்றுகொண்டனர்.

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 08ஆவது போட்டியின் மும்பை அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 277 ஓட்டங்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து 288 ஓட்டங்கள் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ரோயல் செலஞ்சேர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெடுக்களை இழந்து 262 ஓட்டங்களை பெற்றுகொண்டது.

பெங்களூரு அணி சார்பில் அதிகபட்சமாக தினேஷ் கார்த்திக் 83 ஓட்டங்களையும், ஃபாஃப் டு பிளெசிஸ் 62 ஓட்டங்களையும், விராட் கோலி 42 ஓட்டங்களை பெற்றுகொண்டனர்.

இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 25 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றுள்ளது.

Latest news

அமெரிக்காவில் இந்திய மாணவர்களின் விசா இரத்து

அமெரிக்காவில் குடியேற்றவிதிகளை ட்ரம்ப் கடுமையாக்கி வருகிறார். சட்ட விரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினரை நாடு கடத்தி வருகிறார். மேலும் மாணவர்களின் போராட்டம் உட்பட பல்வேறு காரணங்களால் வெளிநாட்டு...

பூமி மீது மோதும் விண்கற்கள் – ஆபத்தை தவிர்க்க நாசா புதிய திட்டம்

சூரிய குடும்பத்தில் ஏராளமான விண்கற்கள் இருக்கின்றன. இவற்றில் எது? எப்போது பூமி மீது மோதும் என்பதை கணிக்க முடியாததாக இருக்கிறது. இருப்பினும் இந்த ஆபத்தை தவிர்க்க...

100 மில்லியன் டாலர்களை இழந்த ஆஸ்திரேலியர்கள்

இந்த நீண்ட வார இறுதியில் ஆஸ்திரேலியர்களின் செலவு கடுமையாக அதிகரித்துள்ளது. ஆஸ்திரேலியர்கள் கஃபேக்கள் மற்றும் உணவகங்களுக்குச் செல்வதற்காக கூடுதலாக $98.4 மில்லியன் செலவிடுவதாக ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. தொடர்ந்து 4...

ஆஸ்திரேலியா அடுத்த 5 ஆண்டுகளில் மில்லியன் கணக்கான வீடுகளை இழக்கும்

ஆஸ்திரேலியாவின் தற்போதைய வீட்டுவசதி கட்டுமானக் கொள்கைகள் தொடர்ந்தால், அடுத்த 5 ஆண்டுகளில் ஆஸ்திரேலியா 1.2 மில்லியன் வீடுகளை இழக்கும் என்று கிராட்டன் நிறுவனம் கூறுகிறது. குடியேற்றக் கட்டுப்பாடுகள்...

அடிலெய்டு கடற்கரைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அடிலெய்டு கடற்கரையில் ஒரு பெரிய வெள்ளை சுறா காணப்பட்டதை அடுத்து எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. இந்த கடற்கரையில் 4.5 மீட்டர் நீளமுள்ள பெரிய வெள்ளை சுறா உட்பட பல...

உலக பத்திரிகையில் பிரபலமான கைகளில்லாத பாலஸ்தீன சிறுவன்

இஸ்ரேலிய தாக்குதலால் இரு கைகளையும் இழந்த ஒரு இளம் பாலஸ்தீன சிறுவனின் புகைப்படம் இந்த ஆண்டின் உலக பத்திரிகை புகைப்படமாக கௌரவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகைப்படம் கத்தாரியைச் சேர்ந்த...