Newsகடன் வாங்குவதற்காக சடலத்துடன் வங்கிக்குச் சென்ற பெண்

கடன் வாங்குவதற்காக சடலத்துடன் வங்கிக்குச் சென்ற பெண்

-

வங்கியில் கடன் வாங்குவதற்காக இறந்தவரை அழைத்துச் சென்ற பெண் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பிரேசிலில் இருந்து வெளியாகியுள்ளது.

கடனை மீட்பதற்காக மாமா எனக் கூறி உயிரிழந்த நபரை சக்கர நாற்காலியில் ஏற்றிச் சென்ற சந்தேகநபர் பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரியோ டி ஜெனிரோவில் உள்ள இடாவோ வங்கிக் கிளையின் கவுன்டரில் இருந்த பெண் ஒருவர் சக்கர நாற்காலியில் இருந்த முதியவரின் தலையில் கையை வைத்து அவரது கையிலிருந்து பேனாவைப் பறிக்க முயன்ற சம்பவம் சிசிடிவி காட்சிகளில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான காணொளி காட்சிகளும் சமூக ஊடகங்களில் அம்பலமாகியுள்ளதுடன், குறித்த சந்தேக நபர் 3000 டொலர்களை கடனாகப் பெற முயற்சித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கடன் தொகையை இறந்தவர் பெயரில் தேவை என வாங்கியிருப்பது தெரியவந்துள்ளது.

உத்தரவாததாரர் எந்த பதிலும் அளிக்காததால், வங்கி அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டு, உடல்நிலை சரியில்லாமல் இருந்திருக்கலாம் என கூறி ஆம்புலன்சை வரவழைத்து, விசாரணையில், அந்த நபர் இறந்து விட்டது தெரியவந்தது.

குறித்த நபர் சம்பவத்திற்கு 4 மணித்தியாலங்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ளதாக அம்புலன்ஸ் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பிரேசில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Latest news

மகன் செய்த தவறால் தந்தைக்கு விதிக்கப்பட்ட அபராதம்

தனது மகன் சட்டவிரோதமாக சாலை ஓட்டியதற்காக ஒரு தந்தைக்கு $700 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குயின்ஸ்லாந்து காவல்துறை இந்த அபராதத்தை 50 வயது தந்தைக்கு விதித்தது. தனது 15 வயது...

புடினின் ஈஸ்டர் போர்நிறுத்தத்தை சந்தேகிக்கும் ஜெலென்ஸ்கி

ஈஸ்டர் பண்டிகையையொட்டி அறிவிக்கப்பட்ட ஒரு குறுகிய கால போர் நிறுத்தத்திற்குப் பிறகும், ரஷ்யா தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைனுடனான போரில் ரஷ்ய...

Rottnest தீவில் சொகுசு படகில் ஏற்பட்ட தீ விபத்து

ஆஸ்திரேலியாவின் ரோட்னெஸ்ட் தீவு அருகே தீப்பிடித்து முற்றிலுமாக எரிந்த சொகுசு கப்பல் குறித்து போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். கப்பல் தீப்பிடித்து எரிந்ததை அடுத்து , ரோட்னெஸ்ட் தீவில்...

பிரதமரிடம் குடியேறிகள் குறித்து ஒருவர் கேட்ட கேள்வி இணையத்தில் வைரல்

பிரதமர் அந்தோணி அல்பானீஸிடம் குடியேறிகள் குறித்து ஒருவர் கேட்ட கேள்வி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. மெல்போர்னில் உள்ள ஒரு ஹோட்டலின் லாபி அருகே நின்று கொண்டிருந்தபோது...

மெல்பேர்ண் நகரில் பரபரப்பான தெருவில் கத்திக்குத்து – ஒருவர் பலி

மெல்பேர்ணில் உள்ள சேப்பல் தெருவில் 20 வயது இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் மெல்பேர்ணின் மிகவும் பரபரப்பான தெருவான சேப்பல் தெருவில்...

புடினின் ஈஸ்டர் போர்நிறுத்தத்தை சந்தேகிக்கும் ஜெலென்ஸ்கி

ஈஸ்டர் பண்டிகையையொட்டி அறிவிக்கப்பட்ட ஒரு குறுகிய கால போர் நிறுத்தத்திற்குப் பிறகும், ரஷ்யா தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைனுடனான போரில் ரஷ்ய...