Sports4 ஓட்டங்களால் வென்றது டெல்லி - IPL 2024

4 ஓட்டங்களால் வென்றது டெல்லி – IPL 2024

-

ஐ.பி.எல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லி கெப்பிட்டல்ஸ் மோதிய போட்டியில் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி 04 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியின், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.

இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 04 விக்கெட்டுக்களை இழந்து 224 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

அணி சார்பில், அதிகபடியாக ரிஷப் பண்ட் 88 ஓட்டங்களையும், அக்ஷர் படேல் 66 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் சந்தீப் வாரியர் 15 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இந்தநிலையில், 225 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 08 விக்கெட்டுக்களை இழந்து 220 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது.

அத்தோடு இந்த போட்டியில் குஜராத் அணியின் பிரதான வேகப்பந்து வீச்சாளரான மொகித் சர்மா 4 ஓவர்களில் விக்கெட் வீழ்த்தாமல் 70 ஓட்டங்களை வாரி வழங்கினார்.

இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் ஒரு போட்டியில் அதிக ஓட்டங்கள் வாரி வழங்கிய பந்து வீச்சாளர் என்ற மோசமான சாதனை பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.

Latest news

மீண்டும் பரவும் புதிய வகை கொரோனா வைரஸ்

புதிய வகை வௌவால் கொரோனா வைரஸை சீன குழு ஒன்று கண்டுபிடித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கோவிட் 19 போன்றே இந்த புதிய வைரஸூம் விலங்குகளிடம்...

ஆஸ்திரேலிய அரசியல்வாதியை மிரட்டிய நபர் – 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை

ஆஸ்திரேலியாவில் சமூக ஊடகங்கள் மூலம் அரசியல்வாதி ஒருவரை மிரட்டிய நபருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு ஆஸ்திரேலியாவிலிருந்து வந்த இந்த நபர், ஒரு கூட்டாட்சி நாடாளுமன்ற...

விக்டோரியாவின் வளர்ச்சிக்காக மில்லியன் கணக்கான டாலர்களை முதலீடு செய்யும் அரசாங்கம்

அல்பானீஸ் அரசாங்கம் விக்டோரியாவில் சாலை மேம்பாட்டில் கவனம் செலுத்தியுள்ளது. அதன்படி, கிளைட் நார்த்தில் உள்ள தாம்சன்ஸ் சாலையில் 41.75 மில்லியன் டாலர்களை முதலீடு செய்வதாக அரசாங்கம் கூறுகிறது. தற்போதுள்ள...

நாளுக்கு நாள் மாறி வரும் விக்டோரியா காவல்துறை

விக்டோரியாவில் மற்றொரு மூத்த காவல்துறை அதிகாரியை நீக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. விக்டோரியாவின் துணை போலீஸ் கமிஷனர் நீல் பேட்டர்சன் கடந்த வியாழக்கிழமை தனது ஊழியர்களுக்கு...

ஆஸ்திரேலிய அரசியல்வாதியை மிரட்டிய நபர் – 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை

ஆஸ்திரேலியாவில் சமூக ஊடகங்கள் மூலம் அரசியல்வாதி ஒருவரை மிரட்டிய நபருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு ஆஸ்திரேலியாவிலிருந்து வந்த இந்த நபர், ஒரு கூட்டாட்சி நாடாளுமன்ற...

விக்டோரியாவின் வளர்ச்சிக்காக மில்லியன் கணக்கான டாலர்களை முதலீடு செய்யும் அரசாங்கம்

அல்பானீஸ் அரசாங்கம் விக்டோரியாவில் சாலை மேம்பாட்டில் கவனம் செலுத்தியுள்ளது. அதன்படி, கிளைட் நார்த்தில் உள்ள தாம்சன்ஸ் சாலையில் 41.75 மில்லியன் டாலர்களை முதலீடு செய்வதாக அரசாங்கம் கூறுகிறது. தற்போதுள்ள...