Melbourneமெல்போர்னின் Highpoint ஷாப்பிங் சென்டரில் மற்றொரு கத்திக்குத்து

மெல்போர்னின் Highpoint ஷாப்பிங் சென்டரில் மற்றொரு கத்திக்குத்து

-

மெல்போர்னில் உள்ள ஹை பாயின்ட் ஷாப்பிங் சென்டரில் நேற்றிரவு இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவம் தொடர்பில் மைனர் ஒருவர் உட்பட மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒரு வாரத்திற்குள் ஷாப்பிங் சென்டரில் நடந்த இரண்டாவது கத்திக்குத்து இது என்று நம்பப்படுகிறது.

நேற்று மாலை 6.10 மணியளவில் வணிக வளாகத்தினுள் உள்ள திரையரங்கு வளாகத்திற்கு அருகில் 6 ஆண்களுக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

செயின்ட் அல்பான்ஸைச் சேர்ந்த 18 வயது இளைஞன் கத்தியால் குத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

சம்பவம் இடம்பெற்ற இடத்தில் 17 மற்றும் 18 வயதுடைய மூன்று இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வேண்டுமென்றே பலத்த காயத்தை ஏற்படுத்தியமை, ஆயுதத்தால் தாக்கியமை மற்றும் ஆயுதம் வைத்திருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகள் 17 வயதுடையவர் மீது சுமத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் அவர் சிறுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

கைது செய்யப்பட்ட ஏனைய இரு இளைஞர்களும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், மோதலில் ஈடுபட்டவர்கள் ஒருவருக்கொருவர் தெரிந்தவர்கள் என பொலிஸார் கருதுகின்றனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2:30 மணியளவில் இந்த ஷாப்பிங் சென்டரில் உள்ள உணவகம் ஒன்றிற்குள் ஏற்பட்ட சண்டையில் 19 வயது இளைஞர் படுகாயங்களுடன் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

சம்பவம் தொடர்பில் 19 வயதுடைய இளைஞர் ஒருவர் கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Latest news

ஸ்பெயினில் காட்டுத் தீ – ஒன்றரை இலட்சம் ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசம்

ஸ்பெயினில் பரவிவரும் காட்டுத்தீயையடுத்து ஒன்றரை இலட்சம் ஏக்கர் வனப் பகுதி எரிந்து நாசமாகியுள்ளது. காலநிலை மாற்றத்தால் உலகின் சராசரி வெப்பநிலை பல மடங்கு உயர்வடைந்துள்ளது. இதனால் வறட்சியான...

இந்திய சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் வாக்குவாதம் – பதற்றத்தை ஏற்படுத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள்!

இந்திய சுதந்திர தின கொண்டாட்டத்தை பாதிக்கும் வகையில் காலிஸ்தான் ஆதரவாளர்கள்  போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ணில் உள்ள இந்திய தூதரகம் முன் சுதந்திர தின கொண்டாட்டத்தில் ஈடுபட்ட...

ஆஸ்திரேலிய மாநிலத்தில் தடை செய்யப்பட்டுள்ள பல வகையான பிளாஸ்டிக்

தெற்கு ஆஸ்திரேலியா சோயா சாஸ் மீன் கொள்கலன்களை தடை செய்த முதல் மாநிலமாக மாறியுள்ளது. செப்டம்பர் 1 முதல், தெற்கு ஆஸ்திரேலியா உணவு அல்லது பானங்களுடன் இணைக்கப்பட்ட...

உலகின் முதல் மனித உருவ ரோபோ விளையாட்டு விழா

உலகின் முதல் மனித உருவ ரோபோ விளையாட்டுப் போட்டிகள் (Humanoid Robot Games) சீனாவின் பெய்ஜிங்கில் நேற்று தொடங்கியது. இதில் அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட 16...

உலகின் முதல் மனித உருவ ரோபோ விளையாட்டு விழா

உலகின் முதல் மனித உருவ ரோபோ விளையாட்டுப் போட்டிகள் (Humanoid Robot Games) சீனாவின் பெய்ஜிங்கில் நேற்று தொடங்கியது. இதில் அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட 16...

பாகிஸ்தானில் வெள்ளம் காரணமாக 2 நாட்களில் 320 பேர் உயிரிழப்பு

வடக்கு பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளத்தில் 48 மணி நேரத்தில் 320 பேர் உயிரிழந்துள்ளனர். காலநிலை மாற்றம் காரணமாக வடக்கு பாகிஸ்தானில் கனமழை பெய்து வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். மலைப்பாங்கான...