Sports35 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பெங்களூரு அணி - IPL...

35 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பெங்களூரு அணி – IPL 2024

-

IPL கிரிக்கெட் தொடரில் இடம்பெற்ற 41-வது லீக் போட்டியில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் – ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. ஊதில் நாணயசுழற்சியில் வென்ற பெங்களூரு அணியின் தலைவர் போப் டு பிளசிஸ் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார்.

அதன்படி பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக விராட் கோலி, டு பிளசிஸ் ஆகியோர் களமிறங்கினர். தொடக்கம் முதலே இருவரும் அதிரடி காட்டினர். தொடக்க விக்கெட்டுக்கு 48 ஓட்டங்கள் சேர்த்த நிலையில் டு பிளசிஸ் 12 பந்துகளில் 25 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த வில் ஜாக்ஸ் 6 ஓட்டங்களில் வெளியேறினார்.

அடுத்து களமிறக்கிய ரஜத் படிதார் பந்துகளை சிக்சருக்கு பறக்க விட்டார். விராட் கோலி மற்றும் படிதார் ஆகிய இருவரும் இணைந்து சிறப்பாக விளையாடி ஓட்டங்களை குவித்தனர். இருவரும் அரைசதம் அடித்து ஆட்டமிழந்தனர். கடைசி கட்டத்தில் கேமரூன் கிரீன் அதிரடியாக விளையாடி 37 ஓட்டங்கள் எடுத்தார். இறுதியில் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 206 ஓட்டங்கள் எடுத்தது. ஐதராபாத் அணியில் அதிகபட்சமாக ஜெயதேவ் உனத்கட் 3 விக்கெட்டுகளும், நடராஜன் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 207 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணியின் சார்பில் அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். இந்த ஜோடியில் டிராவிஸ் ஹெட் 1 ஓட்டத்துடன் பிடிகொடுத்து ஐதராபாத் அணியின் ரசிகர்கள்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.

இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த அபிஷேக் சர்மா 31 ஓட்டங்களில் வெளியேற, அவரைத் தொடர்ந்து களமிறங்கிய மார்க்ரம் 7 ஓட்டங்களும், ஹென்ரிச் கிளாசென் 7 ஓட்டங்களும், நிதிஷ் ரெட்டி 13 ஓட்டங்களும், அப்துல் சமத் 10 ஓட்டங்களும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். பெங்களூரு அணியினரின் சிறப்பான பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் ஐதராபாத் அணி வீரர்கள் திணறினர்.

அடுத்ததாக ஷபாஸ் அகமதுவுடன், பேட் கம்மின்ஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியில் அதிரடியாக ஓட்டங்கள் சேர்த்த பேட் கம்மின்ஸ் 31 ஓட்டங்களில் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய புவனேஷ்வர் குமார் 13 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

இறுதிவரை போராடிய ஷபாஸ் அகமது 40 (37) ஓட்டங்களும், உனத் கட் 8 (10) ஓட்டங்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

இறுதியில் ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 171 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. பெங்களூரு அணியின் சார்பில் சிறப்பாக பந்து வீசிய கேமரூன் கிரீன், சுவப்நில் சிங் மற்றும் கரண் சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், வில் ஜாக்ஸ், யாஸ் தயாள் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இதன்மூலம் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 35 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றிபெற்றது.

நன்றி தமிழன்

Latest news

ஆஸ்திரேலியாவில் ஆபத்தில் உள்ள தபால் ஊழியர்களின் பாதுகாப்பு

Australia Post, பணியில் இருக்கும்போது நெடுஞ்சாலையில் உள்ள தபால் ஊழியர்களுக்கு ஆதரவளிக்குமாறு ஓட்டுநர்களைக் கேட்டுக்கொள்கிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை காலம் காரணமாக, குறிப்பாக டிசம்பரில், தபால் ஊழியர்களின் அதிக...

AI உருவாக்கிய அறிக்கை – நிறுவனத்திற்கு $440,000 அபராதம்

AI ஐப் பயன்படுத்தி ஒரு குறைபாடுள்ள அறிக்கையை தயாரித்ததாக ஒப்புக்கொண்ட பிறகு, ஒப்பந்தப் பணத்திற்கான பகுதியை மத்திய அரசுக்குத் திருப்பித் தர Deloitte ஒப்புக்கொண்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும்...

ஆஸ்திரேலியாவில் பிரபலமாகிவரும் Home Schooling முறை

ஆஸ்திரேலியாவில் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டிலேயே கல்வி கற்பிப்பதையோ அல்லது வீட்டுக்கல்வியையோ தேர்ந்தெடுக்கும் பெற்றோரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் தோராயமாக 4 மில்லியன் மாணவர்களில்...

உலகிலேயே அதிக சூதாட்ட விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அதிகப்படியான சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துமாறு நிபுணர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா உலகின் முன்னணி சூதாட்ட நாடுகளில் ஒன்றாகும், மேலும் சூதாட்டம் வேடிக்கையாகத் தோன்றினாலும், அது பெரும்பாலும் பணத்தையும்,...

மெல்பேர்ணின் EV Charging பிரச்சனைக்கான தீர்வுகள்

மெல்பேர்ணின் Merri- bek பகுதியில் மின்சார (EV) வாகனங்களை சார்ஜ் செய்வதில் பலருக்கு இருக்கும் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. Merri- bek நகர சபை,  Vehicle Charging Solutions...

வேகமாக வளர்ந்து வரும் விக்டோரியாவின் மக்கள் தொகையை விட சிறைச்சாலை மக்கள் தொகை

விக்டோரியாவில் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை, மாநிலத்தின் மக்கள்தொகை வளர்ச்சியை விட வேகமாக அதிகரித்து வருவதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 20 வருட காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை...