Newsஆஸ்திரேலிய கடற்பகுதியில் அதிகரித்து வரும் சட்டவிரோத வெளிநாட்டு கப்பல்கள்

ஆஸ்திரேலிய கடற்பகுதியில் அதிகரித்து வரும் சட்டவிரோத வெளிநாட்டு கப்பல்கள்

-

அவுஸ்திரேலியாவிற்கு வரும் சட்டவிரோத வெளிநாட்டு மீன்பிடி கப்பல்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகரித்துள்ளது.

அரசாங்கத்தின் சமீபத்திய தரவுகளின்படி, இந்த சட்டவிரோத மீன்பிடி படகுகளில் பெரும்பாலானவை வடக்கு ஆஸ்திரேலிய பிராந்தியத்தில் இயங்குவதாகத் தெரிகிறது.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் சட்டவிரோத மீன்பிடி படகுகளின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாகவும், மனித கடத்தல்காரர்கள் பற்றிய தகவலும் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக ஆளில்லா விமானங்களை பயன்படுத்தி கண்காணிப்பு நடவடிக்கைகளை அதிகரிக்க அவுஸ்திரேலிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

2023ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதலாம் திகதியில் இருந்து இதுவரை 216 வெளிநாட்டு மீன்பிடி படகுகள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்ட படகுகள் தொடர்பான விசாரணையில் மனித கடத்தல் இடம்பெற்று வருவதும் கண்டறியப்பட்டுள்ளது.

வடக்கு கடற்கரையில் உள்ள கடல் பூங்காக்களில் மனித கடத்தல் அதிகமாக நடைபெறுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தோனேசிய மீனவர்கள் சில நிலங்களில் முகாமிட்டு மீன்பிடிக்கிறோம் என்ற போர்வையில் சதுப்புநிலங்களை அழித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கடல் மார்க்கமாக அவுஸ்திரேலியாவிற்குள் சட்டவிரோதமாக பிரவேசிப்பதை தவிர்க்குமாறும், பிடிபட்டால் அவர்கள் நாடு கடத்தப்படுவார்கள் எனவும் அவுஸ்திரேலிய கடல்சார் பாதுகாப்புப் படை சுட்டிக்காட்டியுள்ளது.

Latest news

ஆஸ்திரேலியாவில் ஆபத்தில் உள்ள தபால் ஊழியர்களின் பாதுகாப்பு

Australia Post, பணியில் இருக்கும்போது நெடுஞ்சாலையில் உள்ள தபால் ஊழியர்களுக்கு ஆதரவளிக்குமாறு ஓட்டுநர்களைக் கேட்டுக்கொள்கிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை காலம் காரணமாக, குறிப்பாக டிசம்பரில், தபால் ஊழியர்களின் அதிக...

AI உருவாக்கிய அறிக்கை – நிறுவனத்திற்கு $440,000 அபராதம்

AI ஐப் பயன்படுத்தி ஒரு குறைபாடுள்ள அறிக்கையை தயாரித்ததாக ஒப்புக்கொண்ட பிறகு, ஒப்பந்தப் பணத்திற்கான பகுதியை மத்திய அரசுக்குத் திருப்பித் தர Deloitte ஒப்புக்கொண்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும்...

ஆஸ்திரேலியாவில் பிரபலமாகிவரும் Home Schooling முறை

ஆஸ்திரேலியாவில் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டிலேயே கல்வி கற்பிப்பதையோ அல்லது வீட்டுக்கல்வியையோ தேர்ந்தெடுக்கும் பெற்றோரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் தோராயமாக 4 மில்லியன் மாணவர்களில்...

உலகிலேயே அதிக சூதாட்ட விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அதிகப்படியான சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துமாறு நிபுணர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா உலகின் முன்னணி சூதாட்ட நாடுகளில் ஒன்றாகும், மேலும் சூதாட்டம் வேடிக்கையாகத் தோன்றினாலும், அது பெரும்பாலும் பணத்தையும்,...

மெல்பேர்ணின் EV Charging பிரச்சனைக்கான தீர்வுகள்

மெல்பேர்ணின் Merri- bek பகுதியில் மின்சார (EV) வாகனங்களை சார்ஜ் செய்வதில் பலருக்கு இருக்கும் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. Merri- bek நகர சபை,  Vehicle Charging Solutions...

வேகமாக வளர்ந்து வரும் விக்டோரியாவின் மக்கள் தொகையை விட சிறைச்சாலை மக்கள் தொகை

விக்டோரியாவில் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை, மாநிலத்தின் மக்கள்தொகை வளர்ச்சியை விட வேகமாக அதிகரித்து வருவதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 20 வருட காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை...