Newsஆஸ்திரேலிய கடற்பகுதியில் அதிகரித்து வரும் சட்டவிரோத வெளிநாட்டு கப்பல்கள்

ஆஸ்திரேலிய கடற்பகுதியில் அதிகரித்து வரும் சட்டவிரோத வெளிநாட்டு கப்பல்கள்

-

அவுஸ்திரேலியாவிற்கு வரும் சட்டவிரோத வெளிநாட்டு மீன்பிடி கப்பல்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகரித்துள்ளது.

அரசாங்கத்தின் சமீபத்திய தரவுகளின்படி, இந்த சட்டவிரோத மீன்பிடி படகுகளில் பெரும்பாலானவை வடக்கு ஆஸ்திரேலிய பிராந்தியத்தில் இயங்குவதாகத் தெரிகிறது.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் சட்டவிரோத மீன்பிடி படகுகளின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாகவும், மனித கடத்தல்காரர்கள் பற்றிய தகவலும் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக ஆளில்லா விமானங்களை பயன்படுத்தி கண்காணிப்பு நடவடிக்கைகளை அதிகரிக்க அவுஸ்திரேலிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

2023ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதலாம் திகதியில் இருந்து இதுவரை 216 வெளிநாட்டு மீன்பிடி படகுகள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்ட படகுகள் தொடர்பான விசாரணையில் மனித கடத்தல் இடம்பெற்று வருவதும் கண்டறியப்பட்டுள்ளது.

வடக்கு கடற்கரையில் உள்ள கடல் பூங்காக்களில் மனித கடத்தல் அதிகமாக நடைபெறுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தோனேசிய மீனவர்கள் சில நிலங்களில் முகாமிட்டு மீன்பிடிக்கிறோம் என்ற போர்வையில் சதுப்புநிலங்களை அழித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கடல் மார்க்கமாக அவுஸ்திரேலியாவிற்குள் சட்டவிரோதமாக பிரவேசிப்பதை தவிர்க்குமாறும், பிடிபட்டால் அவர்கள் நாடு கடத்தப்படுவார்கள் எனவும் அவுஸ்திரேலிய கடல்சார் பாதுகாப்புப் படை சுட்டிக்காட்டியுள்ளது.

Latest news

$1 மில்லியன் ரொக்கப் பரிசை வழங்கவுள்ள விக்டோரியா காவல்துறை

விக்டோரியா காவல்துறை ஒரு மில்லியன் டாலர் ரொக்கப் பரிசை வழங்கத் தயாராகி வருகிறது. 27 ஆண்டுகளுக்கு முன்பு வடக்கு மெல்போர்னில் இறந்த கியானி "ஜான்" ஃபர்லானின் கொலை...

சுகாதார காப்பீட்டை வேண்டாம் என்று கூறும் மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள்

நாட்டில் காப்பீட்டு பிரீமிய விலைகள் அதிகரித்து வருவதால், இந்த ஆண்டு மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் தங்கள் தனியார் சுகாதார காப்பீட்டை ரத்து செய்யத் தயாராகி வருவதாக...

ஆஸ்திரேலியாவில் வாழ்க்கைச் செலவு ஏன் அதிகரித்து வருகிறது?

நாட்டின் வாழ்க்கைச் செலவு நெருக்கடிக்கு வட்டி விகிதங்கள் உயர்வு காரணமல்ல என்று முன்னாள் பெடரல் ரிசர்வ் வங்கித் தலைவர் பிலிப் லோவ் கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவில் பல பொருளாதார...

விக்டோரியாவில் அதிகம் இடம்பெறும் புகையிலை தொடர்பான குற்றங்கள்

ஆஸ்திரேலியா முழுவதும் புகையிலை உற்பத்தித் துறையை அடிப்படையாகக் கொண்ட குற்றச் செயல்களில் அதிகரிப்பு உள்ளது. இத்தகைய குற்றச் செயல்கள் விக்டோரியா மாநிலத்தில் அதிகமாக நடப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. கடந்த...

மெல்பேர்ணில் உள்ள ஒரு தேவாலயத்தில் சந்தேகத்திற்கிடமான தீ விபத்து

மெல்பேர்ணில் உள்ள ஒரு தேவாலயத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அங்கு குடியேற்றவாசிகள் குழு வசித்து வருவதாக சந்தேகிக்கப்படுகிறது. தெற்கு மெல்பேர்ணில் உள்ள பார்க் தெருவில் உள்ள...

சுகாதார காப்பீட்டை வேண்டாம் என்று கூறும் மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள்

நாட்டில் காப்பீட்டு பிரீமிய விலைகள் அதிகரித்து வருவதால், இந்த ஆண்டு மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் தங்கள் தனியார் சுகாதார காப்பீட்டை ரத்து செய்யத் தயாராகி வருவதாக...