Newsஆஸ்திரேலிய கடற்பகுதியில் அதிகரித்து வரும் சட்டவிரோத வெளிநாட்டு கப்பல்கள்

ஆஸ்திரேலிய கடற்பகுதியில் அதிகரித்து வரும் சட்டவிரோத வெளிநாட்டு கப்பல்கள்

-

அவுஸ்திரேலியாவிற்கு வரும் சட்டவிரோத வெளிநாட்டு மீன்பிடி கப்பல்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகரித்துள்ளது.

அரசாங்கத்தின் சமீபத்திய தரவுகளின்படி, இந்த சட்டவிரோத மீன்பிடி படகுகளில் பெரும்பாலானவை வடக்கு ஆஸ்திரேலிய பிராந்தியத்தில் இயங்குவதாகத் தெரிகிறது.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் சட்டவிரோத மீன்பிடி படகுகளின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாகவும், மனித கடத்தல்காரர்கள் பற்றிய தகவலும் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக ஆளில்லா விமானங்களை பயன்படுத்தி கண்காணிப்பு நடவடிக்கைகளை அதிகரிக்க அவுஸ்திரேலிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

2023ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதலாம் திகதியில் இருந்து இதுவரை 216 வெளிநாட்டு மீன்பிடி படகுகள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்ட படகுகள் தொடர்பான விசாரணையில் மனித கடத்தல் இடம்பெற்று வருவதும் கண்டறியப்பட்டுள்ளது.

வடக்கு கடற்கரையில் உள்ள கடல் பூங்காக்களில் மனித கடத்தல் அதிகமாக நடைபெறுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தோனேசிய மீனவர்கள் சில நிலங்களில் முகாமிட்டு மீன்பிடிக்கிறோம் என்ற போர்வையில் சதுப்புநிலங்களை அழித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கடல் மார்க்கமாக அவுஸ்திரேலியாவிற்குள் சட்டவிரோதமாக பிரவேசிப்பதை தவிர்க்குமாறும், பிடிபட்டால் அவர்கள் நாடு கடத்தப்படுவார்கள் எனவும் அவுஸ்திரேலிய கடல்சார் பாதுகாப்புப் படை சுட்டிக்காட்டியுள்ளது.

Latest news

71 வயதில் காலமானார் குயின்ஸ்லாந்து முன்னாள் அமைச்சர்!

குயின்ஸ்லாந்து மாநிலத்தின் முன்னாள் தொழிலாளர் அமைச்சர் Gordon Nuttall, புற்றுநோயுடன் போராடி தனது 71 வயதில் காலமானார். Beattie அரசாங்கத்தில் ஒரு மூத்த நபராக Nuttall இருந்தார்....

பாலியல் பொம்மையுடன் MRI ஸ்கேன் செய்யப்பட்ட பெண் ஆபத்தான நிலையில்

ஒரு பெண்ணின் ஆசனவாயில் Sex Toy செருகப்பட்டதால், MRI ஸ்கேன் எடுக்கும்போது அவருக்கு உட்புறத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பொதுவாக, நோயாளிகள் MRI ஸ்கேன் எடுக்கும்போது அவர்கள்...

மேற்கு ஆஸ்திரேலிய மக்கள் தடுப்பூசி பெறுவது கட்டாயம் – சுகாதார அதிகாரிகள்

மேற்கு ஆஸ்திரேலியாவில் காய்ச்சல் தடுப்பூசி போடுவதன் அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது . தேசிய நோய்த்தடுப்பு ஆராய்ச்சி மற்றும் கண்காணிப்பு மையத்தின் தரவுகளின்படி, மேற்கு ஆஸ்திரேலியாவில் 65 வயதுக்குட்பட்டவர்களில் காய்ச்சல்...

நிலையான வட்டி விகிதங்களைக் குறைக்கும் ANZ வங்கி

ரிசர்வ் வங்கியின் அடுத்த பணவியல் கொள்கை நடவடிக்கைக்கு இன்னும் 11 நாட்கள் மீதமுள்ள நிலையில், நிலையான வட்டி விகிதங்களைக் குறைக்க ANZ வங்கிக்கு ரிசர்வ் வங்கி...

பாலியல் பொம்மையுடன் MRI ஸ்கேன் செய்யப்பட்ட பெண் ஆபத்தான நிலையில்

ஒரு பெண்ணின் ஆசனவாயில் Sex Toy செருகப்பட்டதால், MRI ஸ்கேன் எடுக்கும்போது அவருக்கு உட்புறத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பொதுவாக, நோயாளிகள் MRI ஸ்கேன் எடுக்கும்போது அவர்கள்...

மெல்பேர்ணில் பாதசாரி கடவையில் குழந்தையை மோதிய தப்பியோடிய சந்தேக நபர்

மெல்பேர்ணின் Murrumbeena ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள பாதசாரி கடவையில் ஒரு குழந்தையை மோதி விபத்துக்குள்ளாக்கிய ஓட்டுநரைக் கண்டுபிடிக்க காவல்துறை பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது. மே 1 ஆம்...