Breaking Newsசிட்னி உட்பட இரண்டு பகுதிகளில் நடந்த கத்திக்குத்து சம்பவங்கள் - இருவர்...

சிட்னி உட்பட இரண்டு பகுதிகளில் நடந்த கத்திக்குத்து சம்பவங்கள் – இருவர் பலி

-

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் உள்ள சிட்னி உள்ளிட்ட இரண்டு பகுதிகளில் கத்திக்குத்து தாக்குதலில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

நேற்றிரவு இந்த குற்றச் செயல்கள் நடந்ததாக மாநில காவல்துறை அறிவித்துள்ளது.

சிட்னியின் குவாக்கர்ஸ் ஹில் பகுதியில் நேற்று இரவு 8.25 மணியளவில் 28 வயதுடைய நபர் ஒருவர் மார்பில் வெட்டுக் காயங்களுடன் கிடந்துள்ளார்.

ஆம்புலன்ஸ் மருத்துவர்கள் அவருக்கு அடிப்படை சிகிச்சை அளித்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் அடையாளம் காணப்படவில்லை என்பதுடன், கத்தியால் தாக்கப்பட்ட இளைஞனின் அடையாளத்தை பொலிஸார் இதுவரை வெளியிடவில்லை.

இதேவேளை, நியூ சவுத் வேல்ஸ், நரோமைனில் இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்றிரவு 9 மணியளவில் 16 வயது சிறுவன் கழுத்து பகுதியில் கத்திக்குத்து காயங்களுடன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் அருகில் உள்ள வீடொன்றைச் சேர்ந்த 26 வயதுடைய நபரொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

இதேவேளை, சிட்னி தேவாலயத்தில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் 7 சிறார்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

14, 16 மற்றும் 17 வயதுடைய இளைஞர்கள் பொது இடத்தில் கத்தியை எடுத்துச் சென்றது, சதி செய்தல் அல்லது பயங்கரவாதச் செயலில் ஈடுபடத் திட்டமிட்டது ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக காவல்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதன்கிழமை கைது செய்யப்பட்ட மற்ற இரண்டு சிறுவர்கள் மீது இன்னும் குற்றஞ்சாட்டப்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.

மேலும் மூன்று சிறார்கள் மற்றும் இரண்டு பேர் பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர், இன்னும் கைது செய்யப்படவில்லை.

Latest news

சீன BYDகளால் நிரம்பியுள்ள ஆஸ்திரேலிய கிடங்குகள்

ஆஸ்திரேலியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்ட பிரபலமான சீன மின்சார காரான BYD வாகனங்கள், விற்பனை இல்லாததால் கிடங்குகளில் விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத்தால் வழங்கப்படவுள்ள புதிய வாகனத் திறன் தரநிலை...

இரண்டு வருடங்களில் வீட்டு விலைகள் வேகமாக உயரக் காரணம் இதுதான்!

அரசாங்கத்தின் முதல் வீடு வாங்கும் வைப்பு உத்தரவாதத் திட்டத்தின் காரணமாக, ஆஸ்திரேலியா முழுவதும் வீட்டு விலைகள் இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேகமாக உயர்ந்துள்ளதாக புதிய...

ஆஸ்திரேலியர்களுக்கு 3 மணி நேரம் இலவச மின்சாரம்

புதிய எரிசக்தி திட்டத்தின் கீழ் ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று மணிநேரம் இலவச சூரிய சக்தி மின்சாரம் வழங்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. “Solar Sharer” என்று...

ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளை எச்சரிக்கும் “கல்மேகி”

தென்கிழக்கு ஆசியாவில் வீசும் "Kalmaegi" என்ற வெப்பமண்டல சூறாவளி குறித்து ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தப் புயல் வியட்நாம், கம்போடியா...

ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளை எச்சரிக்கும் “கல்மேகி”

தென்கிழக்கு ஆசியாவில் வீசும் "Kalmaegi" என்ற வெப்பமண்டல சூறாவளி குறித்து ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தப் புயல் வியட்நாம், கம்போடியா...

நவம்பர் மாத வட்டி விகிதத்தை அறிவிக்கும் RBA

நவம்பர் மாதத்தில் வட்டி விகிதத்தை 3.6% ஆக மாற்றாமல் வைத்திருப்பதாக RBA அறிவித்துள்ளது. இது பல ஆய்வாளர்கள் எதிர்பார்த்த ஒரு முடிவாகும். மேலும் வட்டி விகிதத்தை மாற்றாததற்கு...