Breaking Newsசிட்னி உட்பட இரண்டு பகுதிகளில் நடந்த கத்திக்குத்து சம்பவங்கள் - இருவர்...

சிட்னி உட்பட இரண்டு பகுதிகளில் நடந்த கத்திக்குத்து சம்பவங்கள் – இருவர் பலி

-

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் உள்ள சிட்னி உள்ளிட்ட இரண்டு பகுதிகளில் கத்திக்குத்து தாக்குதலில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

நேற்றிரவு இந்த குற்றச் செயல்கள் நடந்ததாக மாநில காவல்துறை அறிவித்துள்ளது.

சிட்னியின் குவாக்கர்ஸ் ஹில் பகுதியில் நேற்று இரவு 8.25 மணியளவில் 28 வயதுடைய நபர் ஒருவர் மார்பில் வெட்டுக் காயங்களுடன் கிடந்துள்ளார்.

ஆம்புலன்ஸ் மருத்துவர்கள் அவருக்கு அடிப்படை சிகிச்சை அளித்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் அடையாளம் காணப்படவில்லை என்பதுடன், கத்தியால் தாக்கப்பட்ட இளைஞனின் அடையாளத்தை பொலிஸார் இதுவரை வெளியிடவில்லை.

இதேவேளை, நியூ சவுத் வேல்ஸ், நரோமைனில் இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்றிரவு 9 மணியளவில் 16 வயது சிறுவன் கழுத்து பகுதியில் கத்திக்குத்து காயங்களுடன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் அருகில் உள்ள வீடொன்றைச் சேர்ந்த 26 வயதுடைய நபரொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

இதேவேளை, சிட்னி தேவாலயத்தில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் 7 சிறார்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

14, 16 மற்றும் 17 வயதுடைய இளைஞர்கள் பொது இடத்தில் கத்தியை எடுத்துச் சென்றது, சதி செய்தல் அல்லது பயங்கரவாதச் செயலில் ஈடுபடத் திட்டமிட்டது ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக காவல்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதன்கிழமை கைது செய்யப்பட்ட மற்ற இரண்டு சிறுவர்கள் மீது இன்னும் குற்றஞ்சாட்டப்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.

மேலும் மூன்று சிறார்கள் மற்றும் இரண்டு பேர் பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர், இன்னும் கைது செய்யப்படவில்லை.

Latest news

அமெரிக்கா செல்லும் Bondi ஹீரோ

Bondi நாயகன் அகமது அல் அகமது மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்காவிற்கு பறந்து சென்றுள்ளார். டிசம்பர் 14 பயங்கரவாத தாக்குதலில் பலமுறை சுடப்பட்ட 43 வயதான அவர், தனது...

விக்டோரியாவில் வேகமாகப் பரவி வரும் காட்டுத்தீ

வேகமாகப் பரவி வரும் காட்டுத்தீ நிலைமை காரணமாக, விக்டோரியாவின் Upper Murray பகுதியில் வசிப்பவர்கள் வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஒரு தேசிய பூங்காவிற்கு அருகில் 1,200 ஹெக்டேர் பரப்பளவில்...

விக்டோரியாவில் சொத்து பாதுகாப்பு குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

குற்றப் புள்ளியியல் நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி, கடந்த காலாண்டில் விக்டோரியாவில் குற்றச் சம்பவங்கள் மேலும் அதிகரித்துள்ளன. அதிக குற்ற விகிதங்களைக் கொண்ட பிற பகுதிகள் Yarra...

2025இல் ஆஸ்திரேலியாவில் அதிகம் விற்பனையான வாகனங்கள்

2025 ஆம் ஆண்டுக்குள் ஆஸ்திரேலிய கார் சந்தையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். கார் உரிமையாளர்கள் அதிகளவில் எரிபொருள் திறன் கொண்ட, குறைந்த உமிழ்வு...

2025இல் ஆஸ்திரேலியாவில் அதிகம் விற்பனையான வாகனங்கள்

2025 ஆம் ஆண்டுக்குள் ஆஸ்திரேலிய கார் சந்தையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். கார் உரிமையாளர்கள் அதிகளவில் எரிபொருள் திறன் கொண்ட, குறைந்த உமிழ்வு...

தெற்கு ஆஸ்திரேலியாவில் ரயில் தடம் புரண்டதால் தேசிய சரக்கு வழித்தடங்கள் பாதிப்பு

செவ்வாய்க்கிழமை பிற்பகல் Port Pirie அருகே பல ரயில் பெட்டிகள் தடம் புரண்டதை அடுத்து, நாட்டை இணைக்கும் முக்கிய சரக்கு சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. பகுதியளவு தடம் புரண்டதாக...