Breaking Newsசிட்னி உட்பட இரண்டு பகுதிகளில் நடந்த கத்திக்குத்து சம்பவங்கள் - இருவர்...

சிட்னி உட்பட இரண்டு பகுதிகளில் நடந்த கத்திக்குத்து சம்பவங்கள் – இருவர் பலி

-

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் உள்ள சிட்னி உள்ளிட்ட இரண்டு பகுதிகளில் கத்திக்குத்து தாக்குதலில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

நேற்றிரவு இந்த குற்றச் செயல்கள் நடந்ததாக மாநில காவல்துறை அறிவித்துள்ளது.

சிட்னியின் குவாக்கர்ஸ் ஹில் பகுதியில் நேற்று இரவு 8.25 மணியளவில் 28 வயதுடைய நபர் ஒருவர் மார்பில் வெட்டுக் காயங்களுடன் கிடந்துள்ளார்.

ஆம்புலன்ஸ் மருத்துவர்கள் அவருக்கு அடிப்படை சிகிச்சை அளித்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் அடையாளம் காணப்படவில்லை என்பதுடன், கத்தியால் தாக்கப்பட்ட இளைஞனின் அடையாளத்தை பொலிஸார் இதுவரை வெளியிடவில்லை.

இதேவேளை, நியூ சவுத் வேல்ஸ், நரோமைனில் இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்றிரவு 9 மணியளவில் 16 வயது சிறுவன் கழுத்து பகுதியில் கத்திக்குத்து காயங்களுடன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் அருகில் உள்ள வீடொன்றைச் சேர்ந்த 26 வயதுடைய நபரொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

இதேவேளை, சிட்னி தேவாலயத்தில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் 7 சிறார்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

14, 16 மற்றும் 17 வயதுடைய இளைஞர்கள் பொது இடத்தில் கத்தியை எடுத்துச் சென்றது, சதி செய்தல் அல்லது பயங்கரவாதச் செயலில் ஈடுபடத் திட்டமிட்டது ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக காவல்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதன்கிழமை கைது செய்யப்பட்ட மற்ற இரண்டு சிறுவர்கள் மீது இன்னும் குற்றஞ்சாட்டப்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.

மேலும் மூன்று சிறார்கள் மற்றும் இரண்டு பேர் பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர், இன்னும் கைது செய்யப்படவில்லை.

Latest news

விக்டோரியாவில் 4 அவசர நிலை காட்டுத்தீகள்

விக்டோரியாவில் நான்கு அவசர நிலை காட்டுத்தீகளை தீயணைப்பு வீரர்கள் எதிர்த்துப் போராடி வருகின்றனர். இருப்பினும், காட்டுத்தீயால் ஏற்படும் சேதம் அதிகரித்து வருவதாகவும், பலத்த காற்று காரணமாக நிலைமை...

குயின்ஸ்லாந்தை தாக்கும் ஒரு புயல்

குயின்ஸ்லாந்து மாநிலம் ஒரு சூறாவளிக்கு தயாராகி வருகிறது. வெப்பமண்டல புயல் சூறாவளியாக மாற 60 சதவீத வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. Cairns இலிருந்து வடகிழக்கே...

குயின்ஸ்லாந்து வெள்ளத்தில் இறந்த 40,000க்கும் மேற்பட்ட கால்நடைகள்

குயின்ஸ்லாந்தின் சில பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தில் 40,000க்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்துள்ளதாக குயின்ஸ்லாந்து முதல்வர் David Crisafulli உறுதிப்படுத்தியுள்ளார். இன்னும் ஆயிரக்கணக்கானோர் இறக்கக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில்,...

விக்டோரிய மக்கள் அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்க அறிவுறுத்தல்

தற்போதைய காட்டுத்தீ நெருக்கடியின் போது உயிர்களையும் வீடுகளையும் காப்பாற்ற போராடும் அவசர சேவைகள் மற்றும் முதலுதவி அளிப்பவர்களைப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் பாராட்டுகிறார். குடியிருப்பாளர்கள் ஆலோசனைகள் மற்றும்...

Thai Pongal – Traditional Celebration

📅 15 January 2026🕗 8:00 AM – 11:00 AMIncludes traditional Pongal cooking, light refreshments, and the official launch of...

விக்டோரிய மக்கள் அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்க அறிவுறுத்தல்

தற்போதைய காட்டுத்தீ நெருக்கடியின் போது உயிர்களையும் வீடுகளையும் காப்பாற்ற போராடும் அவசர சேவைகள் மற்றும் முதலுதவி அளிப்பவர்களைப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் பாராட்டுகிறார். குடியிருப்பாளர்கள் ஆலோசனைகள் மற்றும்...