Newsசாரதியாக வேலைக்குச் சென்று லிதுவேனியாவில் பன்றிக் கூடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்கள் குழு!

சாரதியாக வேலைக்குச் சென்று லிதுவேனியாவில் பன்றிக் கூடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்கள் குழு!

-

லிதுவேனியாவில் கனரக வாகன சாரதிகளாக பணிபுரியச் சென்ற 106 இலங்கையர்கள் ஐரோப்பாவில் சிக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த இலங்கையர்கள் எதிர்பார்த்த வேலைகள், உணவு மற்றும் தங்குமிட வசதிகள் இன்றி தவிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த குழுவில் இருந்து லிதுவேனியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இருவர் இலங்கைக்கு திரும்பி வந்து உண்மைகளை முன்வைத்ததை அடுத்து இந்த உண்மைகள் வெளியாகியுள்ளன.

அந்த இருவர் உட்பட 108 இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து 12 இலட்சம் ரூபாவை செலுத்தி கொழும்பில் உள்ள வேலைவாய்ப்பு நிறுவனம் மூலம் லிதுவேனியாவில் கனரக வாகன சாரதிகளாக வெளியேறியுள்ளனர்.

லிதுவேனியாவுக்குச் சென்ற பின்னர் அந்நாட்டு நிறுவனமொன்று இலங்கையர் இருவருக்கு மட்டும் கனரக வாகன சாரதி பதவிகளை வழங்கி எஞ்சியவர்களை பன்றிக்கூடுகளில் வேலைக்கு அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.

சம்பந்தப்பட்ட சாரதிகள் மறுப்பு தெரிவித்ததையடுத்து, இரண்டு வருடங்களாக வழங்கப்பட்ட வதிவிட விசாவை லிதுவேனியா அரசாங்கம் இரத்துச் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் அமைப்பின் தலைவருக்கு தெரியப்படுத்தியதையடுத்து அவரை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வர ஏற்பாடு செய்துள்ளனர்.

Latest news

Bondi கடற்கரை தாக்குதலுக்கு தனது இரங்கலைத் தெரிவித்தார் டொனால்ட் டிரம்ப்

Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு ஆஸ்திரேலியர்கள் அதிர்ச்சியில் நிற்கும் வேளையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனது அன்பையும் பிரார்த்தனையையும்...

ஆங்கில மொழிப் பிரச்சினையால் ஆபத்தில் உள்ள நியூசிலாந்து பொதுப் போக்குவரத்து

புலம்பெயர்ந்த பேருந்து ஓட்டுநர்களுக்கான ஆங்கில மொழித் தேவைகளைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை நியூசிலாந்தின் குடிவரவு அமைச்சர் நிராகரித்துள்ளார். தற்போதைய ஆங்கில மொழித் தரத்தை மாற்றும் திட்டம்...

விக்டோரியன் குழந்தைகள் ஆணையத்தின் புதிய தலைவர்

விக்டோரியன் குழந்தைகள் மற்றும் இளைஞர் ஆணையத்தின் புதிய தலைமை ஆணையராக Tracy Beaton நியமிக்கப்பட்டுள்ளார். குழந்தைகள் நலத் துறையில் பல தசாப்த கால அனுபவத்தைக் கொண்ட Beaton,...

பாலிக்கு போதைப்பொருள் கடத்திய ஆஸ்திரேலியருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை

சுற்றுலாத் தீவான பாலிக்கு கோகைன் கடத்தியதாக ஆஸ்திரேலிய குடிமகன் ஒருவருக்கு இந்தோனேசிய நீதிமன்றம் 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. வடக்கு குயின்ஸ்லாந்தில் உள்ள Cairns-ஐ சேர்ந்த 43...

பாலிக்கு போதைப்பொருள் கடத்திய ஆஸ்திரேலியருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை

சுற்றுலாத் தீவான பாலிக்கு கோகைன் கடத்தியதாக ஆஸ்திரேலிய குடிமகன் ஒருவருக்கு இந்தோனேசிய நீதிமன்றம் 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. வடக்கு குயின்ஸ்லாந்தில் உள்ள Cairns-ஐ சேர்ந்த 43...

ANU மனநல மருத்துவமனையில் கத்தியால் குத்திய சந்தேக நபருக்கு ஆயுள் தண்டனை

ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தில் (ANU) இரண்டு மாணவர்களை கத்தியால் கடுமையாக காயப்படுத்திய 26 வயதான Alex Ophel-ஐ, வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பான மனநல மருத்துவமனையில் அடைக்க...