Newsசாரதியாக வேலைக்குச் சென்று லிதுவேனியாவில் பன்றிக் கூடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்கள் குழு!

சாரதியாக வேலைக்குச் சென்று லிதுவேனியாவில் பன்றிக் கூடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்கள் குழு!

-

லிதுவேனியாவில் கனரக வாகன சாரதிகளாக பணிபுரியச் சென்ற 106 இலங்கையர்கள் ஐரோப்பாவில் சிக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த இலங்கையர்கள் எதிர்பார்த்த வேலைகள், உணவு மற்றும் தங்குமிட வசதிகள் இன்றி தவிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த குழுவில் இருந்து லிதுவேனியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இருவர் இலங்கைக்கு திரும்பி வந்து உண்மைகளை முன்வைத்ததை அடுத்து இந்த உண்மைகள் வெளியாகியுள்ளன.

அந்த இருவர் உட்பட 108 இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து 12 இலட்சம் ரூபாவை செலுத்தி கொழும்பில் உள்ள வேலைவாய்ப்பு நிறுவனம் மூலம் லிதுவேனியாவில் கனரக வாகன சாரதிகளாக வெளியேறியுள்ளனர்.

லிதுவேனியாவுக்குச் சென்ற பின்னர் அந்நாட்டு நிறுவனமொன்று இலங்கையர் இருவருக்கு மட்டும் கனரக வாகன சாரதி பதவிகளை வழங்கி எஞ்சியவர்களை பன்றிக்கூடுகளில் வேலைக்கு அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.

சம்பந்தப்பட்ட சாரதிகள் மறுப்பு தெரிவித்ததையடுத்து, இரண்டு வருடங்களாக வழங்கப்பட்ட வதிவிட விசாவை லிதுவேனியா அரசாங்கம் இரத்துச் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் அமைப்பின் தலைவருக்கு தெரியப்படுத்தியதையடுத்து அவரை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வர ஏற்பாடு செய்துள்ளனர்.

Latest news

ஆஸ்திரேலியாவில் மாறிவரும் Rewards மற்றும் Loyalty திட்டங்கள்

ஆஸ்திரேலியாவின் பிரபலமான Rewards மற்றும் Loyalty திட்டங்கள் மாறி வருகின்றன. ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகள் காரணமாக, Qantas மற்றும் Virgin போன்ற பிரபலமான விமான நிறுவனங்கள்...

விற்பனைக்கு வர உள்ள நீண்டகாலமாக இயங்கும் ஆஸ்திரேலிய பேக்கரி சங்கிலி

ஆஸ்திரேலிய உணவுத் துறையில் ஒரு முக்கிய நிறுவனம், கடந்த நிதியாண்டில் அதன் தாய் நிறுவனத்திற்கு 12 மில்லியன் டாலர்களுக்கும் அதிகமான நஷ்டத்தை ஏற்படுத்திய பின்னர் விற்பனைக்கு...

உலக சாதனையை முறியடித்த ஆஸ்திரேலிய சிறுவன்

ஆஸ்திரேலியாவில் ஒரு சிறுவன் அற்புதமான நீர் விளையாட்டின் மூலம் உலக சாதனை படைத்துள்ளான். ஒரே பேட்டரி சார்ஜில் மின்சார Hydrofoiling-இல் அதிக தூரம் பயணித்ததற்கான புதிய உலக...

பாசி நெருக்கடியை நிவர்த்தி செய்ய மத்திய அரசின் ஆதரவு

தெற்கு ஆஸ்திரேலியாவின் பேரழிவு தரும் பாசி நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஆதரவளிப்பதாக மத்திய அரசு உறுதியளித்துள்ளது. இதற்காக ஒரு புதிய சோதனை ஆய்வகத்தில் மில்லியன் கணக்கான டாலர்கள்...

பாசி நெருக்கடியை நிவர்த்தி செய்ய மத்திய அரசின் ஆதரவு

தெற்கு ஆஸ்திரேலியாவின் பேரழிவு தரும் பாசி நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஆதரவளிப்பதாக மத்திய அரசு உறுதியளித்துள்ளது. இதற்காக ஒரு புதிய சோதனை ஆய்வகத்தில் மில்லியன் கணக்கான டாலர்கள்...

Triple-Negative மார்பகப் புற்றுநோய் நோயாளிகளுக்கு புதிய நம்பிக்கை

Beta blockers சிகிச்சையானது Triple-Negative மார்பகப் புற்றுநோயின் பரவலைத் தடுக்க முடியும் என்று ஒரு புதிய ஆஸ்திரேலிய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. மோனாஷ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், புற்றுநோய் பரவலுக்கான...