Newsசாரதியாக வேலைக்குச் சென்று லிதுவேனியாவில் பன்றிக் கூடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்கள் குழு!

சாரதியாக வேலைக்குச் சென்று லிதுவேனியாவில் பன்றிக் கூடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்கள் குழு!

-

லிதுவேனியாவில் கனரக வாகன சாரதிகளாக பணிபுரியச் சென்ற 106 இலங்கையர்கள் ஐரோப்பாவில் சிக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த இலங்கையர்கள் எதிர்பார்த்த வேலைகள், உணவு மற்றும் தங்குமிட வசதிகள் இன்றி தவிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த குழுவில் இருந்து லிதுவேனியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இருவர் இலங்கைக்கு திரும்பி வந்து உண்மைகளை முன்வைத்ததை அடுத்து இந்த உண்மைகள் வெளியாகியுள்ளன.

அந்த இருவர் உட்பட 108 இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து 12 இலட்சம் ரூபாவை செலுத்தி கொழும்பில் உள்ள வேலைவாய்ப்பு நிறுவனம் மூலம் லிதுவேனியாவில் கனரக வாகன சாரதிகளாக வெளியேறியுள்ளனர்.

லிதுவேனியாவுக்குச் சென்ற பின்னர் அந்நாட்டு நிறுவனமொன்று இலங்கையர் இருவருக்கு மட்டும் கனரக வாகன சாரதி பதவிகளை வழங்கி எஞ்சியவர்களை பன்றிக்கூடுகளில் வேலைக்கு அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.

சம்பந்தப்பட்ட சாரதிகள் மறுப்பு தெரிவித்ததையடுத்து, இரண்டு வருடங்களாக வழங்கப்பட்ட வதிவிட விசாவை லிதுவேனியா அரசாங்கம் இரத்துச் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் அமைப்பின் தலைவருக்கு தெரியப்படுத்தியதையடுத்து அவரை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வர ஏற்பாடு செய்துள்ளனர்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...