Newsசாரதியாக வேலைக்குச் சென்று லிதுவேனியாவில் பன்றிக் கூடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்கள் குழு!

சாரதியாக வேலைக்குச் சென்று லிதுவேனியாவில் பன்றிக் கூடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்கள் குழு!

-

லிதுவேனியாவில் கனரக வாகன சாரதிகளாக பணிபுரியச் சென்ற 106 இலங்கையர்கள் ஐரோப்பாவில் சிக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த இலங்கையர்கள் எதிர்பார்த்த வேலைகள், உணவு மற்றும் தங்குமிட வசதிகள் இன்றி தவிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த குழுவில் இருந்து லிதுவேனியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இருவர் இலங்கைக்கு திரும்பி வந்து உண்மைகளை முன்வைத்ததை அடுத்து இந்த உண்மைகள் வெளியாகியுள்ளன.

அந்த இருவர் உட்பட 108 இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து 12 இலட்சம் ரூபாவை செலுத்தி கொழும்பில் உள்ள வேலைவாய்ப்பு நிறுவனம் மூலம் லிதுவேனியாவில் கனரக வாகன சாரதிகளாக வெளியேறியுள்ளனர்.

லிதுவேனியாவுக்குச் சென்ற பின்னர் அந்நாட்டு நிறுவனமொன்று இலங்கையர் இருவருக்கு மட்டும் கனரக வாகன சாரதி பதவிகளை வழங்கி எஞ்சியவர்களை பன்றிக்கூடுகளில் வேலைக்கு அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.

சம்பந்தப்பட்ட சாரதிகள் மறுப்பு தெரிவித்ததையடுத்து, இரண்டு வருடங்களாக வழங்கப்பட்ட வதிவிட விசாவை லிதுவேனியா அரசாங்கம் இரத்துச் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் அமைப்பின் தலைவருக்கு தெரியப்படுத்தியதையடுத்து அவரை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வர ஏற்பாடு செய்துள்ளனர்.

Latest news

ஆஸ்திரேலியாவில் ஆபத்தில் உள்ள தபால் ஊழியர்களின் பாதுகாப்பு

Australia Post, பணியில் இருக்கும்போது நெடுஞ்சாலையில் உள்ள தபால் ஊழியர்களுக்கு ஆதரவளிக்குமாறு ஓட்டுநர்களைக் கேட்டுக்கொள்கிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை காலம் காரணமாக, குறிப்பாக டிசம்பரில், தபால் ஊழியர்களின் அதிக...

AI உருவாக்கிய அறிக்கை – நிறுவனத்திற்கு $440,000 அபராதம்

AI ஐப் பயன்படுத்தி ஒரு குறைபாடுள்ள அறிக்கையை தயாரித்ததாக ஒப்புக்கொண்ட பிறகு, ஒப்பந்தப் பணத்திற்கான பகுதியை மத்திய அரசுக்குத் திருப்பித் தர Deloitte ஒப்புக்கொண்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும்...

ஆஸ்திரேலியாவில் பிரபலமாகிவரும் Home Schooling முறை

ஆஸ்திரேலியாவில் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டிலேயே கல்வி கற்பிப்பதையோ அல்லது வீட்டுக்கல்வியையோ தேர்ந்தெடுக்கும் பெற்றோரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் தோராயமாக 4 மில்லியன் மாணவர்களில்...

உலகிலேயே அதிக சூதாட்ட விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அதிகப்படியான சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துமாறு நிபுணர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா உலகின் முன்னணி சூதாட்ட நாடுகளில் ஒன்றாகும், மேலும் சூதாட்டம் வேடிக்கையாகத் தோன்றினாலும், அது பெரும்பாலும் பணத்தையும்,...

மெல்பேர்ணின் EV Charging பிரச்சனைக்கான தீர்வுகள்

மெல்பேர்ணின் Merri- bek பகுதியில் மின்சார (EV) வாகனங்களை சார்ஜ் செய்வதில் பலருக்கு இருக்கும் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. Merri- bek நகர சபை,  Vehicle Charging Solutions...

வேகமாக வளர்ந்து வரும் விக்டோரியாவின் மக்கள் தொகையை விட சிறைச்சாலை மக்கள் தொகை

விக்டோரியாவில் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை, மாநிலத்தின் மக்கள்தொகை வளர்ச்சியை விட வேகமாக அதிகரித்து வருவதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 20 வருட காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை...