Breaking Newsஅவுஸ்திரேலியாவிற்கு வரும் இலங்கை புலம்பெயர்ந்த படகுகள் பற்றிய புதிய தகவல்

அவுஸ்திரேலியாவிற்கு வரும் இலங்கை புலம்பெயர்ந்த படகுகள் பற்றிய புதிய தகவல்

-

கடந்த வருடத்தில் இலங்கை படகுகள் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு வருகை தந்த சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை என அவுஸ்திரேலிய அவசரகால அதிரடிப் படை தெரிவித்துள்ளது.

ஒரு வருடத்திற்கும் மேலாக இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவிற்கு எந்த படகுகளையும் பார்க்கவில்லை என அவசரகால அதிரடிப்படையின் இறையாண்மை எல்லை நடவடிக்கைகளின் தலைவர் மார்க் வைட்சர்ச் தெரிவித்தார்.

அவுஸ்திரேலியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கூட்டு கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கையான ‘திசி ரலா’வை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கடலோர அலை நடவடிக்கையானது கடல் சூழலைப் பாதுகாக்கும் பொறுப்பை வலியுறுத்துவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய வைட்சர்ச், மனித கடத்தல் போன்ற சிக்கலான பிரச்சனைகளுக்கு ஒருங்கிணைந்த தீர்வுகள் தேவை என்றார்.

பொது மக்களின் தலையீடு இன்றியமையாதது எனவும், மனித கடத்தலை தடுப்பதில் சமூகத்திலிருந்து பெறப்படும் தகவல்கள் மிக முக்கிய பங்காற்றுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடத்தல்காரர்களுக்கு மனித உயிர் மீது எந்த மதிப்பும் இல்லை, அவர்களின் கவனம் லாபம் சம்பாதிப்பதில் மட்டுமே உள்ளது.

எனவே, இவ்வாறான குற்றச் செயல்களில் இருந்து மக்களைப் பாதுகாக்க அவுஸ்திரேலியாவும் இலங்கையும் அயராது பாடுபடுகின்றன என மார்க் வைட்சர்ச் வலியுறுத்தியுள்ளார்.

அதன்படி, கடந்த வருடத்தில் இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல முயற்சித்த படகுகள் எதுவும் அவதானிக்கப்படவில்லை என்பதுடன், செயற்பாடுகள் பயனுள்ளதாக இருப்பதை இது நிரூபிப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

Latest news

Centrelink-க்கு தவறாக விண்ணப்பித்ததால் $15,000 இழந்த ஆஸ்திரேலிய தாய்

Centrelink பெற்றோர் விடுப்புக்கு விண்ணப்பிக்கும்போது ஏற்பட்ட ஒரு பொதுவான தவறு காரணமாக $15,000 இழந்த இரண்டு குழந்தைகளின் ஆஸ்திரேலிய தாய் ஒருவர் தனது அனுபவத்தை சமூக...

அதிகரித்து வரும் கடல் வெப்பநிலை குறித்து ஆஸ்திரேலியர்களுக்கு எச்சரிக்கை

அதிகரித்து வரும் கடல் வெப்பநிலை குறித்து ஆஸ்திரேலிய பொதுமக்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் கடல் வெப்பநிலை கடந்த ஆண்டு சாதனை அளவை எட்டியது. வெப்பமான கடல் நீர்,...

Hoskyn தீவில் மூழ்கும் படகிலிருந்து மீட்கப்பட்ட நான்கு பேர்

தெற்கு Great Barrier Reef-இல் உள்ள ஒரு தொலைதூரத் தீவான Hoskyn தீவு அருகே மூழ்கும் படகிலிருந்து நான்கு பேர் மீட்கப்பட்டுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4:30 மணியளவில் Hoskyn...

வேக வரம்புகளை மீறும் விக்டோரிய ஓட்டுநர்களுக்கு அடுத்த வாரம் விதிக்கப்படும் அபராதம்

விக்டோரியாவில் ஒரு வார காலமாக நடத்தப்பட்ட ஒரு பெரிய போலீஸ் நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட ஓட்டுநர்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு பேர் வேக வரம்பை...

வேக வரம்புகளை மீறும் விக்டோரிய ஓட்டுநர்களுக்கு அடுத்த வாரம் விதிக்கப்படும் அபராதம்

விக்டோரியாவில் ஒரு வார காலமாக நடத்தப்பட்ட ஒரு பெரிய போலீஸ் நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட ஓட்டுநர்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு பேர் வேக வரம்பை...

சிட்னியில் கயிற்றில் சிக்கி ஆபத்தான நிலையில் இருக்கும் கூன் முதுகு திமிங்கலம்

சிட்னி துறைமுகத்திற்கு அருகிலுள்ள தெற்கு கடலில் கயிற்றில் சிக்கிக் கொள்ளும் அபாயத்தில் இருக்கும் ஒரு கூன் முதுகு திமிங்கலம் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆஸ்திரேலிய Cetaceans...