Newsகொரோனா தடுப்பூசியால் ஏற்படும் பக்கவிளைவு பற்றி மருத்துவ நிபுணர்களின் விசேட அறிவிப்பு

கொரோனா தடுப்பூசியால் ஏற்படும் பக்கவிளைவு பற்றி மருத்துவ நிபுணர்களின் விசேட அறிவிப்பு

-

கொரோனா தடுப்பூசியால் பக்கவிளைவு ஏற்படும் என்ற தகவல் பரவியுள்ள நிலையில், பிரபல மருத்துவ நிபுணர்கள் இது பற்றி பயப்படத் தேவையில்லையெனக் கூறியுள்ளனர்.

பிரிட்டனைச் சேர்ந்த, ‘AstraZeneca’ நிறுவனம் உருவாக்கிய கொரோனா தடுப்பூசியால் பலர் உயிரிழந்துள்ளனர்.

இது தொடர்பாக 51 வழக்குகள் லண்டன் நீதிமன்றத்தில் நடந்து வருகின்றன.

இதற்கு இந்நிறுவனம் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில் தங்களுடைய கொரோனா தடுப்பூசியால் பக்கவிளைவாக இரத்தம் உறைதல் அல்லது இரத்த தட்டணுக்கள் குறைவது போன்ற பாதிப்புகள் ஏற்படலாம் என்று கூறியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

இந்நிறுவனமானது ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்துடன் இணைந்து கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்தது.

‘Serum India’ நிறுவனமானது AstraZeneca-வுடன் ஒப்பந்தம் செய்தது. அதன்படி, ‘CoviShield’ என்ற பெயரில் தடுப்பூசி தயாரிக்கப்பட்டது.

இது குறித்து, பிரபல தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் ராமன் கங்காகேதார், ‘Vitamin B12’ மருந்து சிலருக்கு பக்கவிளைவை ஏற்படுத்தலாம் என்பதால், வைத்தியசாலையில் வைத்து தான் வழங்கப்பட்டதெனக் கூறினார்.

கொரோனா தடுப்பூசியால், 10 இலட்சம் பேரில் ஏழு அல்லது எட்டு பேருக்கு பக்கவிளைவுகள் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.

முதல் டோஸ் எடுத்துக்கொண்டபோது, பக்கவிளைவுக்கான சாத்தியம் சற்று அதிகமாக இருக்கலாம். இரண்டாவது டோஸ் எடுத்துக்கொண்டவர்களுக்கு, அதற்கான சாத்தியம் மேலும் குறைகிறது. பூஸ்டர் எனப்படும் மூன்றாவது டோஸ் எடுத்துக்கொண்டால், பக்கவிளைவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைகிறது.

மேலும் பக்கவிளைவுகள் என்றால் தடுப்பூசி போட்ட பின்னர் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் ஏற்படும். அதற்கு மேல் பக்கவிளைவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்பே இல்லை. அதனால் மக்கள் பயப்படத் தேவையில்லையென அவர் மேலும் தெரிவித்தார்.

Latest news

புதிய கட்டண முறையை அறிமுகப்படுத்தியுள்ள Woolworths

Woolworths நிறுவனம் Scan&Go மொபைல் கட்டண அம்சத்தை நீக்கிவிட்டு புதிய கட்டண முறையை அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது. தற்போதுள்ள முறையின் கீழ், பொருட்களுக்கான பணம் மொபைல் போன்...

நெடுஞ்சாலையின் நடுவில் டைட்டானிக் காட்சிகள் – $600 அபராதம் 

விக்டோரியாவில் உள்ள ஒரு பிரபலமான சாலையில் தனது காரின் திறந்த sunroof மீது இருந்து டைட்டானிக் காட்சியை நிகழ்த்தியதற்காக ஒரு பெண்ணுக்கு காவல்துறை $600 அபராதம்...

விக்டோரியாவில் ஒரு நெடுஞ்சாலையில் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்ட 12 வாகனங்கள்

விக்டோரியாவின் Gordon-இல் உள்ள மேற்கு நெடுஞ்சாலையில் 12 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒரு ஓட்டுநர் பலத்த காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சாலையில் அடர்த்தியான பனிக்கட்டி படிந்திருந்ததால் இந்த...

டிரம்ப் நிர்வாகத்தின் பாதுகாப்பு கோரிக்கையை நிராகரித்த அரசாங்கம்

பாதுகாப்பு செலவினங்களை அதிகரிப்பதற்கான தனது கோரிக்கையை டிரம்ப் நிர்வாகம் நிராகரித்துள்ளதாக ஆஸ்திரேலிய பொருளாளர் Jim Chalmers கூறுகிறார். அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் Pete Hexeth சமீபத்தில் பாதுகாப்பு...

சிட்னி பல்கலைக்கழக முன்னாள் மாணவர் மீது Cyber Hacking குற்றச்சாட்டு

சிட்னி பல்கலைக்கழகத்தில் சைபர் தாக்குதல்களின் அலையைத் தொடங்கியதாக முன்னாள் மாணவர் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டு, 27 வயதான Birdie Kingston, வளாகத்தில்...

சிட்னியில் குப்பைத் தொட்டிகளை வைத்திருக்க அனுமதி பெற வேண்டுமா?

குப்பைத் தொட்டிகளில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக சிட்னி நகர சபை புதிய முறையை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் கீழ், நகர்ப்புறங்களில் சாலைகளுக்கு அருகில் வைக்கப்படும் குப்பைத்...