Breaking Newsமெல்போர்ன் வணிக வளாகத்தில் கூரிய ஆயுதங்களுடன் மீண்டும் ஒருவர் கைது

மெல்போர்ன் வணிக வளாகத்தில் கூரிய ஆயுதங்களுடன் மீண்டும் ஒருவர் கைது

-

மெல்போர்னில் உள்ள வாட்டர்கார்டன் ஷாப்பிங் சென்டரில் கத்தியை காட்டி வன்முறையில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர் .

அதே ஷாப்பிங் சென்டரில் உள்ள கடையில் கத்தியை வாங்கி வாடிக்கையாளர்களை மிரட்டியதாக கூறப்படுகிறது.

இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதுடன், சந்தேக நபரை போலீசார் மடக்கிப் பிடித்தனர்.

நேற்று மதியம் 12.30 மணியளவில் ஷாப்பிங் சென்டருக்குள் இருந்த 21 வயதுடைய ஆண் மற்றும் 20 வயதுடைய பெண் ஒருவரை அச்சுறுத்துவதற்காக கூரிய ஆயுதம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொதுமக்களின் உதவியுடன் குறித்த நபரை கைது செய்ய முடிந்ததாக விக்டோரியா பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

அண்மைக்காலமாக அவுஸ்திரேலியாவின் பல்வேறு நகரங்களில் கத்திக்குத்து வன்முறை அலை வீசுவதுடன், மக்களும் இது தொடர்பில் கவலையடைந்துள்ளதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பவம் நடந்தவுடன் அங்கிருந்த பொதுமக்கள் விக்டோரியா ஆம்புலன்ஸ் சேவைக்கு தகவல் கொடுத்து சம்பவ இடத்திற்கு வரவழைத்த போதிலும் அவசர சிகிச்சை தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

டிரம்பை நிராகரித்து அல்பானீஸ் இரண்டாவது முறையாக சீனாவுக்கு விஜயம் 

பிரதமர் அந்தோணி அல்பானீஸ் இந்த ஆண்டு இரண்டாவது முறையாக சீனாவுக்கு விஜயம் செய்ய உள்ளார். இந்தப் பயணத்தின் போது சீன அதிபர் Xi Jinping மற்றும் பிரதமர்...

அமெரிக்க விசா குறித்து வெளியான விசேட அறிவிப்பு

அமெரிக்க விசா பெறுவதற்கு மாணவர்கள், சுற்றுலா பயணிகள் உள்ளிட்டோருக்கான நடைமுறையை அமெரிக்கா கடுமையாக்கியுள்ளது. H-1B விசா என்பது தொழில்நுட்ப திறன் வாய்ந்த பணியாளர்கள் தற்காலிக அடிப்படையில் அமெரிக்காவுக்குள்...

ஆஸ்திரேலியாவை ஆக்கிரமிப்பு பூச்சிகளிடமிருந்து பாதுகாக்கும் போராட்டத்தில் வெளியான புதிய விரிவான படங்கள்

ஆஸ்திரேலிய விவசாயத்தைப் பாதுகாப்பதற்கான ஒரு முக்கியமான நடவடிக்கையாக, புகைப்படங்களின் தொகுப்பு பொதுமக்களுக்கு வெளியிடப்பட்டுள்ளது. இது “Pest Australia’s Disease Image Library (PaDIL)” என்று அழைக்கப்படும் தேசிய...

ஆபத்தில் உள்ள வயது வந்தோருக்கான மாற்றுத்திறனாளி பராமரிப்பு சேவைகளை வழங்கும் நிறுவனம்

முதியோர் பராமரிப்பு மற்றும் ஊனமுற்றோர் பராமரிப்பு சேவைகளை வழங்கும் நிறுவனமான Annecto, தன்னார்வ நிர்வாகத்தில் நுழைந்துள்ளது. நூற்றுக்கணக்கான ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக இந்த...

ஆஸ்திரேலியாவின் வரிகள் இரட்டிப்பாக்கப்படும் – டிரம்ப் மிரட்டல்

ஆஸ்திரேலியா மீது விதிக்கப்படும் வரிகளை இரட்டிப்பாக்குவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அச்சுறுத்தியுள்ளார். இறக்குமதி செய்யப்படும் அனைத்து மருந்துகளுக்கும் 200 சதவீத வரியை அறிவிப்பதாக ஜனாதிபதி கூறியுள்ளார். மேலும்,...

தற்கொலைகளுக்கு பெரிதும் காரணமாக உள்ள ChatGPT

Stanford பல்கலைக்கழகத்தின் புதிய ஆய்வில், ChatGPT போன்ற AI chatbots கடுமையான மனநலப் பிரச்சினைகளை ஏற்படுத்துவதாகக் தெரியவந்துள்ளது. இது மனநோய், பித்து மற்றும் தற்கொலை எண்ணங்களுக்கு வழிவகுக்கும்...