Breaking Newsமெல்போர்ன் வணிக வளாகத்தில் கூரிய ஆயுதங்களுடன் மீண்டும் ஒருவர் கைது

மெல்போர்ன் வணிக வளாகத்தில் கூரிய ஆயுதங்களுடன் மீண்டும் ஒருவர் கைது

-

மெல்போர்னில் உள்ள வாட்டர்கார்டன் ஷாப்பிங் சென்டரில் கத்தியை காட்டி வன்முறையில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர் .

அதே ஷாப்பிங் சென்டரில் உள்ள கடையில் கத்தியை வாங்கி வாடிக்கையாளர்களை மிரட்டியதாக கூறப்படுகிறது.

இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதுடன், சந்தேக நபரை போலீசார் மடக்கிப் பிடித்தனர்.

நேற்று மதியம் 12.30 மணியளவில் ஷாப்பிங் சென்டருக்குள் இருந்த 21 வயதுடைய ஆண் மற்றும் 20 வயதுடைய பெண் ஒருவரை அச்சுறுத்துவதற்காக கூரிய ஆயுதம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொதுமக்களின் உதவியுடன் குறித்த நபரை கைது செய்ய முடிந்ததாக விக்டோரியா பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

அண்மைக்காலமாக அவுஸ்திரேலியாவின் பல்வேறு நகரங்களில் கத்திக்குத்து வன்முறை அலை வீசுவதுடன், மக்களும் இது தொடர்பில் கவலையடைந்துள்ளதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பவம் நடந்தவுடன் அங்கிருந்த பொதுமக்கள் விக்டோரியா ஆம்புலன்ஸ் சேவைக்கு தகவல் கொடுத்து சம்பவ இடத்திற்கு வரவழைத்த போதிலும் அவசர சிகிச்சை தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

ஆஸ்திரேலியாவில் ஆபத்தில் உள்ள தபால் ஊழியர்களின் பாதுகாப்பு

Australia Post, பணியில் இருக்கும்போது நெடுஞ்சாலையில் உள்ள தபால் ஊழியர்களுக்கு ஆதரவளிக்குமாறு ஓட்டுநர்களைக் கேட்டுக்கொள்கிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை காலம் காரணமாக, குறிப்பாக டிசம்பரில், தபால் ஊழியர்களின் அதிக...

AI உருவாக்கிய அறிக்கை – நிறுவனத்திற்கு $440,000 அபராதம்

AI ஐப் பயன்படுத்தி ஒரு குறைபாடுள்ள அறிக்கையை தயாரித்ததாக ஒப்புக்கொண்ட பிறகு, ஒப்பந்தப் பணத்திற்கான பகுதியை மத்திய அரசுக்குத் திருப்பித் தர Deloitte ஒப்புக்கொண்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும்...

ஆஸ்திரேலியாவில் பிரபலமாகிவரும் Home Schooling முறை

ஆஸ்திரேலியாவில் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டிலேயே கல்வி கற்பிப்பதையோ அல்லது வீட்டுக்கல்வியையோ தேர்ந்தெடுக்கும் பெற்றோரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் தோராயமாக 4 மில்லியன் மாணவர்களில்...

உலகிலேயே அதிக சூதாட்ட விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அதிகப்படியான சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துமாறு நிபுணர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா உலகின் முன்னணி சூதாட்ட நாடுகளில் ஒன்றாகும், மேலும் சூதாட்டம் வேடிக்கையாகத் தோன்றினாலும், அது பெரும்பாலும் பணத்தையும்,...

மெல்பேர்ணின் EV Charging பிரச்சனைக்கான தீர்வுகள்

மெல்பேர்ணின் Merri- bek பகுதியில் மின்சார (EV) வாகனங்களை சார்ஜ் செய்வதில் பலருக்கு இருக்கும் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. Merri- bek நகர சபை,  Vehicle Charging Solutions...

வேகமாக வளர்ந்து வரும் விக்டோரியாவின் மக்கள் தொகையை விட சிறைச்சாலை மக்கள் தொகை

விக்டோரியாவில் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை, மாநிலத்தின் மக்கள்தொகை வளர்ச்சியை விட வேகமாக அதிகரித்து வருவதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 20 வருட காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை...