Breaking Newsமெல்போர்ன் வணிக வளாகத்தில் கூரிய ஆயுதங்களுடன் மீண்டும் ஒருவர் கைது

மெல்போர்ன் வணிக வளாகத்தில் கூரிய ஆயுதங்களுடன் மீண்டும் ஒருவர் கைது

-

மெல்போர்னில் உள்ள வாட்டர்கார்டன் ஷாப்பிங் சென்டரில் கத்தியை காட்டி வன்முறையில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர் .

அதே ஷாப்பிங் சென்டரில் உள்ள கடையில் கத்தியை வாங்கி வாடிக்கையாளர்களை மிரட்டியதாக கூறப்படுகிறது.

இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதுடன், சந்தேக நபரை போலீசார் மடக்கிப் பிடித்தனர்.

நேற்று மதியம் 12.30 மணியளவில் ஷாப்பிங் சென்டருக்குள் இருந்த 21 வயதுடைய ஆண் மற்றும் 20 வயதுடைய பெண் ஒருவரை அச்சுறுத்துவதற்காக கூரிய ஆயுதம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொதுமக்களின் உதவியுடன் குறித்த நபரை கைது செய்ய முடிந்ததாக விக்டோரியா பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

அண்மைக்காலமாக அவுஸ்திரேலியாவின் பல்வேறு நகரங்களில் கத்திக்குத்து வன்முறை அலை வீசுவதுடன், மக்களும் இது தொடர்பில் கவலையடைந்துள்ளதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பவம் நடந்தவுடன் அங்கிருந்த பொதுமக்கள் விக்டோரியா ஆம்புலன்ஸ் சேவைக்கு தகவல் கொடுத்து சம்பவ இடத்திற்கு வரவழைத்த போதிலும் அவசர சிகிச்சை தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...