Breaking Newsமெல்போர்ன் வணிக வளாகத்தில் கூரிய ஆயுதங்களுடன் மீண்டும் ஒருவர் கைது

மெல்போர்ன் வணிக வளாகத்தில் கூரிய ஆயுதங்களுடன் மீண்டும் ஒருவர் கைது

-

மெல்போர்னில் உள்ள வாட்டர்கார்டன் ஷாப்பிங் சென்டரில் கத்தியை காட்டி வன்முறையில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர் .

அதே ஷாப்பிங் சென்டரில் உள்ள கடையில் கத்தியை வாங்கி வாடிக்கையாளர்களை மிரட்டியதாக கூறப்படுகிறது.

இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதுடன், சந்தேக நபரை போலீசார் மடக்கிப் பிடித்தனர்.

நேற்று மதியம் 12.30 மணியளவில் ஷாப்பிங் சென்டருக்குள் இருந்த 21 வயதுடைய ஆண் மற்றும் 20 வயதுடைய பெண் ஒருவரை அச்சுறுத்துவதற்காக கூரிய ஆயுதம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொதுமக்களின் உதவியுடன் குறித்த நபரை கைது செய்ய முடிந்ததாக விக்டோரியா பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

அண்மைக்காலமாக அவுஸ்திரேலியாவின் பல்வேறு நகரங்களில் கத்திக்குத்து வன்முறை அலை வீசுவதுடன், மக்களும் இது தொடர்பில் கவலையடைந்துள்ளதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பவம் நடந்தவுடன் அங்கிருந்த பொதுமக்கள் விக்டோரியா ஆம்புலன்ஸ் சேவைக்கு தகவல் கொடுத்து சம்பவ இடத்திற்கு வரவழைத்த போதிலும் அவசர சிகிச்சை தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...