Sports24 ஓட்டங்களால் வென்றது கொல்கத்தா - IPL 2024

24 ஓட்டங்களால் வென்றது கொல்கத்தா – IPL 2024

-

IPL தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் முன்னாள் சாம்பியன்களான மும்பை இந்தியன்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.

இந்த போட்டியில் நாணயசுழற்சியில் வென்ற மும்பை அணியின் தலைவர் பாண்ட்யா பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது.

அந்த அணியின் ஆரம்ப வீரர்களாக பில் சால்ட் 5 ஓட்டங்களிலும், சுனில் நரைன் 8 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். அவர்களை தொடர்ந்து ரகுவன்சி 13 ஓட்டங்களிலும், ஸ்ரேயாஸ் 6 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்து இந்த முறையும் ஏமாற்றம் அளித்தனர்.

பின்னர் கை கோர்த்த வெங்கடேஷ் ஐயர் – மனீஷ் பாண்டே இணை அணியை சரிவிலிருந்து மீட்டது. சிறப்பாக விளையாடிய வெங்கடேஷ் அரைசதம் அடித்தார். மறுமுனையில் அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட மனீஷ் பாண்டே 42 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து களமிறங்கிய ரசல் துரதிஷ்டவசமாக ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.

19.5 ஓவர்கள் தாக்குப்பிடித்த கொல்கத்தா 169 ஓட்டங்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக வெங்கடேஷ் ஐயர் 70 ஓட்டங்கள் அடித்தார். மும்பை தரப்பில் நுவான் துஷார மற்றும் பும்ரா தலா 3 விக்கெட்டுகளும், பாண்ட்யா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினர்.

இதனையடுத்து 170 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை துடுப்பெடுத்தாட களமிறங்கியது.

அதன்படி 18.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது. அதன்படி 24 ஓட்டங்களால் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது.

Latest news

2026 முதல் விக்டோரியாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வார இறுதிப் பயணங்கள்

விக்டோரியா மாநிலம் அடுத்த ஆண்டு முதல் மாற்றுத்திறனாளிகளுக்கு வார இறுதி நாட்களில் இலவச பொதுப் போக்குவரத்து சேவைகளை வழங்க திட்டமிட்டுள்ளது. இந்த திட்டம் "Fairer Fares for...

ஹொங்கொங், சிங்கப்பூரில் வேகமடையும் கொரோனா புதிய அலை

ஆசிய நாடுகளில் கொரோனா புதிய அலை பரவிவரும் நிலையில் ஹொங்கொங் மற்றும் சிங்கப்பூரில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 2019-ல் சீனாவில் தோன்றிய கொரோனா...

NSW நெடுஞ்சாலையில் நூற்றுக்கணக்கான கார்களை சேதப்படுத்திய உலோகத் துண்டுகள்

நியூ சவுத் வேல்ஸில் உள்ள ஒரு பெரிய சாலையில் சுமார் 840 கிலோகிராம் உலோகத் துண்டுகளை ஒரு லாரி கொட்டியதில், 300க்கும் மேற்பட்ட கார்களின் டயர்கள்...

NSW நெடுஞ்சாலையில் நடந்த பயங்கர விபத்து – இருவர் உயிரிழப்பு 

NSW தூர தெற்கு கடற்கரையில் நடந்த ஒரு பயங்கர நெடுஞ்சாலை விபத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். இன்று பிற்பகல் 1.45 மணியளவில் Eden பகுதியில் உள்ள Princes...

பிரிஸ்பேர்ணில் ஐ.நா. அமைதி காக்கும் பயிற்சி மையத்தைத் தொடங்கியது ஆஸ்திரேலியா

பசிபிக் தீவு காவல்துறையினரை ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் படையினராக மாற்றுவதற்கு பயிற்சி அளிக்கும் உலகின் முதல் திட்டத்தை ஆஸ்திரேலியா தொடங்கியுள்ளது. ஆஸ்திரேலியா வெறும் அண்டை...

சிட்னி துறைமுகத்தில் பயணக் கப்பலின் நங்கூரமிடும் கயிறில் ஏறிய நபர்

சிட்னி துறைமுகத்தில் ஒரு பயணக் கப்பலின் நங்கூரமிடும் கயிறுகளில் ஏறிய ஒரு நபரை பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று பிற்பகல் 3 மணியளவில், Carnival Adventure பயணக் கப்பலை...