Melbourneமெல்போர்னில் திருடச் சென்ற மூன்று அயர்லாந்து பிரஜைகள் கைது

மெல்போர்னில் திருடச் சென்ற மூன்று அயர்லாந்து பிரஜைகள் கைது

-

மெல்போர்னில் 60 திருட்டுகளுடன் தொடர்புடைய மூன்று ஐரிஷ் பிரஜைகளை பொலிசார் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர்கள் மூவரும் மெல்பேர்னில் 60 ஆடம்பர வீடுகளில் திருட்டுச் சம்பவங்களைச் செய்துள்ளதாகவும், திருடப்பட்ட பொருட்களின் பெறுமதி ஒரு மில்லியன் டொலர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகத்திற்குரிய மூன்று ஐரிஷ் பிரஜைகள் 19, 24 மற்றும் 25 வயதுடையவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இவர்கள் 6 மாதங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலியாவுக்கு வந்துள்ளதாகவும் அதன் பின்னர் வீடுகளில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாகவும் விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக Blackburn, Doncaster, Narre Warren, Hampton Park Narre Warren மற்றும் Templestowe ஆகிய பகுதிகளில் இவர்கள் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பெரும்பாலான திருட்டு சம்பவங்கள், குடியிருப்பாளர்கள் வீட்டில் இருந்து வெளியூர் சென்றிருந்த வேளையில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தக் கொள்ளைச் சம்பவங்கள் மிகவும் நுணுக்கமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அதற்கான ஆதாரங்கள் இல்லாத இடங்களை துப்புரவு திரவம் கொண்டு சுத்தம் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகநபர்கள் மெல்பேர்ன் விமான நிலையத்திற்கு அருகில் உள்ள ஹோட்டலில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதுடன், மூவரும் இன்று மெல்பேர்ன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Latest news

டிரம்பை நிராகரித்து அல்பானீஸ் இரண்டாவது முறையாக சீனாவுக்கு விஜயம் 

பிரதமர் அந்தோணி அல்பானீஸ் இந்த ஆண்டு இரண்டாவது முறையாக சீனாவுக்கு விஜயம் செய்ய உள்ளார். இந்தப் பயணத்தின் போது சீன அதிபர் Xi Jinping மற்றும் பிரதமர்...

அமெரிக்க விசா குறித்து வெளியான விசேட அறிவிப்பு

அமெரிக்க விசா பெறுவதற்கு மாணவர்கள், சுற்றுலா பயணிகள் உள்ளிட்டோருக்கான நடைமுறையை அமெரிக்கா கடுமையாக்கியுள்ளது. H-1B விசா என்பது தொழில்நுட்ப திறன் வாய்ந்த பணியாளர்கள் தற்காலிக அடிப்படையில் அமெரிக்காவுக்குள்...

ஆஸ்திரேலியாவை ஆக்கிரமிப்பு பூச்சிகளிடமிருந்து பாதுகாக்கும் போராட்டத்தில் வெளியான புதிய விரிவான படங்கள்

ஆஸ்திரேலிய விவசாயத்தைப் பாதுகாப்பதற்கான ஒரு முக்கியமான நடவடிக்கையாக, புகைப்படங்களின் தொகுப்பு பொதுமக்களுக்கு வெளியிடப்பட்டுள்ளது. இது “Pest Australia’s Disease Image Library (PaDIL)” என்று அழைக்கப்படும் தேசிய...

ஆபத்தில் உள்ள வயது வந்தோருக்கான மாற்றுத்திறனாளி பராமரிப்பு சேவைகளை வழங்கும் நிறுவனம்

முதியோர் பராமரிப்பு மற்றும் ஊனமுற்றோர் பராமரிப்பு சேவைகளை வழங்கும் நிறுவனமான Annecto, தன்னார்வ நிர்வாகத்தில் நுழைந்துள்ளது. நூற்றுக்கணக்கான ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக இந்த...

ஆஸ்திரேலியாவின் வரிகள் இரட்டிப்பாக்கப்படும் – டிரம்ப் மிரட்டல்

ஆஸ்திரேலியா மீது விதிக்கப்படும் வரிகளை இரட்டிப்பாக்குவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அச்சுறுத்தியுள்ளார். இறக்குமதி செய்யப்படும் அனைத்து மருந்துகளுக்கும் 200 சதவீத வரியை அறிவிப்பதாக ஜனாதிபதி கூறியுள்ளார். மேலும்,...

தற்கொலைகளுக்கு பெரிதும் காரணமாக உள்ள ChatGPT

Stanford பல்கலைக்கழகத்தின் புதிய ஆய்வில், ChatGPT போன்ற AI chatbots கடுமையான மனநலப் பிரச்சினைகளை ஏற்படுத்துவதாகக் தெரியவந்துள்ளது. இது மனநோய், பித்து மற்றும் தற்கொலை எண்ணங்களுக்கு வழிவகுக்கும்...