Melbourneமெல்போர்னில் திருடச் சென்ற மூன்று அயர்லாந்து பிரஜைகள் கைது

மெல்போர்னில் திருடச் சென்ற மூன்று அயர்லாந்து பிரஜைகள் கைது

-

மெல்போர்னில் 60 திருட்டுகளுடன் தொடர்புடைய மூன்று ஐரிஷ் பிரஜைகளை பொலிசார் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர்கள் மூவரும் மெல்பேர்னில் 60 ஆடம்பர வீடுகளில் திருட்டுச் சம்பவங்களைச் செய்துள்ளதாகவும், திருடப்பட்ட பொருட்களின் பெறுமதி ஒரு மில்லியன் டொலர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகத்திற்குரிய மூன்று ஐரிஷ் பிரஜைகள் 19, 24 மற்றும் 25 வயதுடையவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இவர்கள் 6 மாதங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலியாவுக்கு வந்துள்ளதாகவும் அதன் பின்னர் வீடுகளில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாகவும் விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக Blackburn, Doncaster, Narre Warren, Hampton Park Narre Warren மற்றும் Templestowe ஆகிய பகுதிகளில் இவர்கள் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பெரும்பாலான திருட்டு சம்பவங்கள், குடியிருப்பாளர்கள் வீட்டில் இருந்து வெளியூர் சென்றிருந்த வேளையில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தக் கொள்ளைச் சம்பவங்கள் மிகவும் நுணுக்கமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அதற்கான ஆதாரங்கள் இல்லாத இடங்களை துப்புரவு திரவம் கொண்டு சுத்தம் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகநபர்கள் மெல்பேர்ன் விமான நிலையத்திற்கு அருகில் உள்ள ஹோட்டலில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதுடன், மூவரும் இன்று மெல்பேர்ன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Latest news

பள்ளிப் படிப்பை நிறுத்திய மாணவர்களின் வாழ்க்கையை மாற்ற ஒரு திட்டம்

விக்டோரியாவில் உள்ள MacKillop Education பள்ளி, பள்ளிக்குச் செல்லத் தயங்கும் சிறப்புத் தேவைகள் உள்ள மாணவர்களை ஈர்க்க ஒரு சிறப்புத் திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. Bitter Sweet Café...

விக்டோரியாவில் 2026ம் ஆண்டில் நிறுத்தப்படும் எரிவாயு விநியோகம்

2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள் விக்டோரியாவில் உள்ள 10 கிராமப்புற நகரங்களில் வசிப்பவர்களுக்கு அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு (CNG) விநியோகத்தை நிறுத்த முடிவு செய்துள்ளதாக Solstice...

ஆஸ்திரேலிய குழந்தைகளுக்கு புதிய நண்பராக மாறியுள்ள AI

பல ஆஸ்திரேலிய குழந்தைகள் AI தொழில்நுட்பத்தை நோக்கி அதிகளவில் திரும்புவதாக ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. Norton வெளியிட்டுள்ள சைபர் பாதுகாப்பு நுண்ணறிவு அறிக்கை இது குறித்த தகவல்களை...

50 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் குறைந்துள்ள விவாகரத்து விகிதம்

விவாகரத்து சட்ட சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து ஆஸ்திரேலியா அதன் மிகக் குறைந்த விவாகரத்து விகிதத்தைப் பதிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்திய தரவுகளின்படி, 2024 ஆம் ஆண்டில், 16...

50 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் குறைந்துள்ள விவாகரத்து விகிதம்

விவாகரத்து சட்ட சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து ஆஸ்திரேலியா அதன் மிகக் குறைந்த விவாகரத்து விகிதத்தைப் பதிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்திய தரவுகளின்படி, 2024 ஆம் ஆண்டில், 16...

அடிலெய்டு காவல்துறைக்கு 251 முறை போன் செய்த நபர்

எட்டு மணி நேரத்தில் காவல்துறையினருக்கு 251 அச்சுறுத்தும் தொலைபேசி அழைப்புகளைச் செய்ததாகக் கூறப்படும் அடிலெய்டு நபர் ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  நேற்று மாலை 4.45 மணி முதல்...