Melbourneமெல்போர்னில் திருடச் சென்ற மூன்று அயர்லாந்து பிரஜைகள் கைது

மெல்போர்னில் திருடச் சென்ற மூன்று அயர்லாந்து பிரஜைகள் கைது

-

மெல்போர்னில் 60 திருட்டுகளுடன் தொடர்புடைய மூன்று ஐரிஷ் பிரஜைகளை பொலிசார் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர்கள் மூவரும் மெல்பேர்னில் 60 ஆடம்பர வீடுகளில் திருட்டுச் சம்பவங்களைச் செய்துள்ளதாகவும், திருடப்பட்ட பொருட்களின் பெறுமதி ஒரு மில்லியன் டொலர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகத்திற்குரிய மூன்று ஐரிஷ் பிரஜைகள் 19, 24 மற்றும் 25 வயதுடையவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இவர்கள் 6 மாதங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலியாவுக்கு வந்துள்ளதாகவும் அதன் பின்னர் வீடுகளில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாகவும் விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக Blackburn, Doncaster, Narre Warren, Hampton Park Narre Warren மற்றும் Templestowe ஆகிய பகுதிகளில் இவர்கள் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பெரும்பாலான திருட்டு சம்பவங்கள், குடியிருப்பாளர்கள் வீட்டில் இருந்து வெளியூர் சென்றிருந்த வேளையில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தக் கொள்ளைச் சம்பவங்கள் மிகவும் நுணுக்கமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அதற்கான ஆதாரங்கள் இல்லாத இடங்களை துப்புரவு திரவம் கொண்டு சுத்தம் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகநபர்கள் மெல்பேர்ன் விமான நிலையத்திற்கு அருகில் உள்ள ஹோட்டலில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதுடன், மூவரும் இன்று மெல்பேர்ன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...