Cinemaஇயக்குநரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதனின் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு வெளியானது

இயக்குநரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதனின் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு வெளியானது

-

இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் அடுத்ததாக நடிக்க இருக்கும் திரைப்படத்தின் அறிமுக வீடியோ கடந்த மாதம் 12 ஆம் தேதி வெளியிடப்பட்டது. ‘ஓ மை கடவுளே’ திரைப்படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இந்த திரைப்படத்தை இயக்க உள்ளார்.

கலகலப்பான காட்சிகள் நிறைந்த புதிய திரைப்படத்தின் அறிமுக வீடியோ, அஸ்வத் மாரிமுத்து மற்றும் பிரதீப் ரங்கநாதன் இடையில் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற உண்மை கதையை தழுவி உருவாக்கப்பட்டு இருந்தது. இந்த புதிய திரைப்படத்தின் தலைப்பு இன்று காலை 9 மணி அளவில் வெளியிடப்படும் என படக் குழுவினர் அறிவித்தது.

‘கோமாளி’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். ஜெயம் ரவி, காஜல் அகர்வால், யோகி பாபு, கே.எஸ். ரவிக்குமார் உள்ளிட்டோர் நடிப்பி வெளியான இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து ‘லவ் டுடே’ திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.

லவ் டுடே’ திரைப்படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. ‘லவ் டுடே’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நடிகரும் இயக்குநருமான பிரதீப் ரங்கநாதன் தமிழ் திரையுலகில் முக்கியமான நபராக உருவெடுத்துள்ளார்.

இந்த நிலையில் இன்று காலை புதிய படத்தின் தலைப்பு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பிற்பகல் இப்படத்தின் தலைப்பினை படக்குழு வெளியிட்டது. அதன்படி இப்படத்திற்கு டிராகன் என பெயரிடப்பட்டுள்ளது.

Latest news

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கும் தன்னார்வல வாகனங்கள்

தெற்கு ஆஸ்திரேலியாவிற்கு நூற்றுக்கணக்கான வைக்கோல் மூட்டைகள் லாரிகளில் கொண்டு செல்லப்பட்டு, மாநிலத்தின் வடக்கு-மத்திய பகுதியில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு இதுவரை இல்லாத...

நாய் தாக்குதல்களைத் தடுக்க ஆஸ்திரேலிய அஞ்சல் ஊழியர்களுக்கு கிடைத்துள்ள புதிய சாதனம்

ஆஸ்திரேலியாவில் தபால் ஊழியர்களின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதால், பணியில் இருக்கும்போது நாய் தாக்குதல்களிலிருந்து அவர்களைப் பாதுகாக்க புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, தபால் ஊழியர்களின் பாதுகாப்பிற்காக citronella மற்றும்...

வெள்ளத்திற்குப் பிறகு ஆஸ்திரேலியா முழுவதும் பரவும் மற்றுமொரு நோய்

வெள்ளத்தைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா முழுவதும் மலேரியா வேகமாகப் பரவி வருவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். பதிவான தொற்றுநோய்களின் எண்ணிக்கை இப்போது 71 ஆக உயர்ந்துள்ளதாகவும், அது ஆஸ்திரேலிய...

200 ஆண்டுகள் பழமையான ஆணுறையை காட்சிப்படுத்த ஒரு சிறப்பு கண்காட்சி

நெதர்லாந்தின் Amsterdam நகரில் 200 ஆண்டுகள் பழமையான ஆணுறை சிறப்பு கண்காட்சியாக காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இது ஒரு செம்மறி ஆடுகளின் பிற்சேர்க்கையிலிருந்து உருவாக்கப்பட்டது என்றும் ஒரு கன்னியாஸ்திரி...

200 ஆண்டுகள் பழமையான ஆணுறையை காட்சிப்படுத்த ஒரு சிறப்பு கண்காட்சி

நெதர்லாந்தின் Amsterdam நகரில் 200 ஆண்டுகள் பழமையான ஆணுறை சிறப்பு கண்காட்சியாக காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இது ஒரு செம்மறி ஆடுகளின் பிற்சேர்க்கையிலிருந்து உருவாக்கப்பட்டது என்றும் ஒரு கன்னியாஸ்திரி...

ஈராக் சிறையில் இருந்து ஆஸ்திரேலிய பொறியாளர் விடுதலை

ஈராக்கில் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்த ஆஸ்திரேலிய பொறியாளர் Robert Pether ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். Robert Pether Baghdad-இல் ஈராக் மத்திய வங்கியை வடிவமைத்துக்கொண்டிருந்தபோது, ​​அவரது...