Melbourneமெல்பேர்னில் நண்பரை கத்தியால் குத்தி கொலை செய்த சந்தேக நபர்களிடம் விசாரணைகள்

மெல்பேர்னில் நண்பரை கத்தியால் குத்தி கொலை செய்த சந்தேக நபர்களிடம் விசாரணைகள்

-

மெல்பேர்னில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவரைக் கண்டுபிடிக்க பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

நேற்று நள்ளிரவு 1 மணியளவில் ஓர்மண்டில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் 30 வயதுடைய நபர் கொல்லப்பட்டார் மற்றும் 22 வயதுடைய ஒருவர் பலத்த காயமடைந்தார்.

சம்பவம் தொடர்பில் 26 மற்றும் 27 வயதுடைய இரு சகோதரர்களைக் கண்டறிய விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

வாக்குவாதம் முற்றி, வீட்டில் இருந்த 30 வயதுடைய நபரை சந்தேக நபர்கள் கத்தியால் குத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சந்தேகத்திற்குரிய சகோதரர்கள் இருவரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது

சம்பவத்துடன் தொடர்புடைய இரு தரப்பினரும் ஒருவரையொருவர் சில காலமாக அறிந்த நண்பர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கத்திக்குத்துக்கு முன் அவர்கள் மது அருந்தியதாகவும் கூறப்படுகிறது.

Latest news

மகன் செய்த தவறால் தந்தைக்கு விதிக்கப்பட்ட அபராதம்

தனது மகன் சட்டவிரோதமாக சாலை ஓட்டியதற்காக ஒரு தந்தைக்கு $700 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குயின்ஸ்லாந்து காவல்துறை இந்த அபராதத்தை 50 வயது தந்தைக்கு விதித்தது. தனது 15 வயது...

புடினின் ஈஸ்டர் போர்நிறுத்தத்தை சந்தேகிக்கும் ஜெலென்ஸ்கி

ஈஸ்டர் பண்டிகையையொட்டி அறிவிக்கப்பட்ட ஒரு குறுகிய கால போர் நிறுத்தத்திற்குப் பிறகும், ரஷ்யா தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைனுடனான போரில் ரஷ்ய...

Rottnest தீவில் சொகுசு படகில் ஏற்பட்ட தீ விபத்து

ஆஸ்திரேலியாவின் ரோட்னெஸ்ட் தீவு அருகே தீப்பிடித்து முற்றிலுமாக எரிந்த சொகுசு கப்பல் குறித்து போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். கப்பல் தீப்பிடித்து எரிந்ததை அடுத்து , ரோட்னெஸ்ட் தீவில்...

பிரதமரிடம் குடியேறிகள் குறித்து ஒருவர் கேட்ட கேள்வி இணையத்தில் வைரல்

பிரதமர் அந்தோணி அல்பானீஸிடம் குடியேறிகள் குறித்து ஒருவர் கேட்ட கேள்வி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. மெல்போர்னில் உள்ள ஒரு ஹோட்டலின் லாபி அருகே நின்று கொண்டிருந்தபோது...

மெல்பேர்ண் நகரில் பரபரப்பான தெருவில் கத்திக்குத்து – ஒருவர் பலி

மெல்பேர்ணில் உள்ள சேப்பல் தெருவில் 20 வயது இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் மெல்பேர்ணின் மிகவும் பரபரப்பான தெருவான சேப்பல் தெருவில்...

புடினின் ஈஸ்டர் போர்நிறுத்தத்தை சந்தேகிக்கும் ஜெலென்ஸ்கி

ஈஸ்டர் பண்டிகையையொட்டி அறிவிக்கப்பட்ட ஒரு குறுகிய கால போர் நிறுத்தத்திற்குப் பிறகும், ரஷ்யா தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைனுடனான போரில் ரஷ்ய...