Melbourneமெல்பேர்னில் நண்பரை கத்தியால் குத்தி கொலை செய்த சந்தேக நபர்களிடம் விசாரணைகள்

மெல்பேர்னில் நண்பரை கத்தியால் குத்தி கொலை செய்த சந்தேக நபர்களிடம் விசாரணைகள்

-

மெல்பேர்னில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவரைக் கண்டுபிடிக்க பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

நேற்று நள்ளிரவு 1 மணியளவில் ஓர்மண்டில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் 30 வயதுடைய நபர் கொல்லப்பட்டார் மற்றும் 22 வயதுடைய ஒருவர் பலத்த காயமடைந்தார்.

சம்பவம் தொடர்பில் 26 மற்றும் 27 வயதுடைய இரு சகோதரர்களைக் கண்டறிய விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

வாக்குவாதம் முற்றி, வீட்டில் இருந்த 30 வயதுடைய நபரை சந்தேக நபர்கள் கத்தியால் குத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சந்தேகத்திற்குரிய சகோதரர்கள் இருவரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது

சம்பவத்துடன் தொடர்புடைய இரு தரப்பினரும் ஒருவரையொருவர் சில காலமாக அறிந்த நண்பர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கத்திக்குத்துக்கு முன் அவர்கள் மது அருந்தியதாகவும் கூறப்படுகிறது.

Latest news

சீன BYDகளால் நிரம்பியுள்ள ஆஸ்திரேலிய கிடங்குகள்

ஆஸ்திரேலியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்ட பிரபலமான சீன மின்சார காரான BYD வாகனங்கள், விற்பனை இல்லாததால் கிடங்குகளில் விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத்தால் வழங்கப்படவுள்ள புதிய வாகனத் திறன் தரநிலை...

இரண்டு வருடங்களில் வீட்டு விலைகள் வேகமாக உயரக் காரணம் இதுதான்!

அரசாங்கத்தின் முதல் வீடு வாங்கும் வைப்பு உத்தரவாதத் திட்டத்தின் காரணமாக, ஆஸ்திரேலியா முழுவதும் வீட்டு விலைகள் இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேகமாக உயர்ந்துள்ளதாக புதிய...

ஆஸ்திரேலியர்களுக்கு 3 மணி நேரம் இலவச மின்சாரம்

புதிய எரிசக்தி திட்டத்தின் கீழ் ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று மணிநேரம் இலவச சூரிய சக்தி மின்சாரம் வழங்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. “Solar Sharer” என்று...

ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளை எச்சரிக்கும் “கல்மேகி”

தென்கிழக்கு ஆசியாவில் வீசும் "Kalmaegi" என்ற வெப்பமண்டல சூறாவளி குறித்து ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தப் புயல் வியட்நாம், கம்போடியா...

ஆஸ்திரேலியர்களுக்கு 3 மணி நேரம் இலவச மின்சாரம்

புதிய எரிசக்தி திட்டத்தின் கீழ் ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று மணிநேரம் இலவச சூரிய சக்தி மின்சாரம் வழங்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. “Solar Sharer” என்று...

ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளை எச்சரிக்கும் “கல்மேகி”

தென்கிழக்கு ஆசியாவில் வீசும் "Kalmaegi" என்ற வெப்பமண்டல சூறாவளி குறித்து ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தப் புயல் வியட்நாம், கம்போடியா...