Newsஉக்ரைன்-ரஷ்யா போர் முனைக்கு சென்ற இலங்கையின் முன்னாள் ராணுவ வீரர்கள் -...

உக்ரைன்-ரஷ்யா போர் முனைக்கு சென்ற இலங்கையின் முன்னாள் ராணுவ வீரர்கள் – அம்பலமானது மோசடி

-

உக்ரைன் மற்றும் ரஷ்யாவின் போர் முனைகளுக்கு இலங்கையின் முன்னாள் இராணுவ வீரர்களை அனுப்பும் மோசடி தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

ரஷ்யா மற்றும் உக்ரைனில் உள்ள இராணுவ முகாம்களுக்கு முன்னாள் இராணுவத்தினரை அனுப்பி கடத்தலில் ஈடுபட்டவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் புலனாய்வுப் பிரிவினரும் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

மோசடியான வேலைவாய்ப்பு முகவர்களுடன் இணைந்து பொய்யான வாக்குறுதிகளை வழங்கி ஓய்வுபெற்ற போர்வீரர்களை ரஷ்ய – உக்ரைன் போர் முனைக்கு அனுப்பும் மோசடி செயற்படுவதாக தெரியவந்துள்ளது.

பீட்டர்ஸ்பேர்க் போன்ற புகழ்பெற்ற இடங்களில் காணிகளை வழங்குவதாகவும், ரஷ்யாவின் குடியுரிமை வழங்குவதாகவும், போரில் ஈடுபடும் மக்களுக்கு 10 இலட்சத்திற்கும் அதிகமான தொகை வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளதாக பாதுகாப்பு செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் இவர்களுக்கு பணமோ, சம்பளமோ வழங்கப்படவில்லை என்றும், உயிரிழப்பு ஏற்பட்டாலோ, பலத்த காயம் ஏற்பட்டாலோ இழப்பீடும் வழங்கப்படவில்லை என தெரியவந்துள்ளது.

இந்த மோசடிகளில் சிறிலங்காவின் முன்னாள் இராணுவத்தினர் பலர் சிக்கி போர் முனையில் இறங்கியுள்ளதாகவும் அதில் சிலர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஆட்கடத்தலில் ஈடுபட்டவர்களை அடையாளம் காணும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், முன்னாள் இராணுவத்தினர் தொடர்ந்து போருக்குக் கட்டுப்பட்டவர்கள் அல்ல, கூலிப்படையினர் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

வெளிநாடுகளுக்குச் சென்றவர்களைத் தேடுவதற்கான விசாரணைகள் வெளிவிவகார அமைச்சினாலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

Latest news

சந்தேகத்திற்கிடமான மின்னஞ்சல்கள் குறித்து இன்ஸ்டாகிராம் பயனர்கள் எச்சரிக்கை

கடவுச்சொல் மீட்டமைப்புகளைக் கேட்கும் சந்தேகத்திற்கிடமான மின்னஞ்சல்கள் குறித்து மில்லியன் கணக்கான பயனர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு இன்ஸ்டாகிராம் எச்சரித்துள்ளது. கடவுச்சொல் மீட்டமைப்பு மின்னஞ்சல்களைக் கோராமலேயே பெறுவது குறித்து பயனர்கள்...

குயின்ஸ்லாந்திற்குள் நுழையும் Koji புயல் – 2 பகுதிகளுக்கு திடீர் வெள்ள அபாயம்

வெப்பமண்டல சூறாவளி Koji குயின்ஸ்லாந்து மாநிலத்திற்குள் நுழைந்துள்ளது. அடுத்த சில மணிநேரங்களில் Ayr மற்றும் Bowen-ஐ சுற்றியுள்ள குடியிருப்பாளர்கள் மிக அதிக மழையால் பாதிக்கப்படுவார்கள் என்றும், இது...

புதிய Influenza தொற்றுநோய் – காய்ச்சல் நோயாளிகள் அதிகரிப்பு

'Super-K' அல்லது subclade-K எனப்படும் புதிய இன்ஃப்ளூயன்ஸா திரிபு, காய்ச்சல் நோயாளிகளில் அசாதாரண அதிகரிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று தொற்றுநோயியல் நிபுணர்கள் கூறுகின்றனர். WHO ஒத்துழைப்பு மையத்தின் இன்ஃப்ளூயன்ஸா...

காட்டுத்தீயின் போது பகுதியில் கண்டெடுக்கப்பட்ட Longwood மனித உடல்

விக்டோரியா மாநிலம் முழுவதும் பரவி வரும் கடுமையான காட்டுத்தீ நிலைமை இப்போது ஒரு அபாயகரமான நிலையை எட்டியுள்ளது. Longwood பகுதியில் பலத்த எரிந்த பகுதியில் ஒரு மனித...

காட்டுத்தீயின் போது பகுதியில் கண்டெடுக்கப்பட்ட Longwood மனித உடல்

விக்டோரியா மாநிலம் முழுவதும் பரவி வரும் கடுமையான காட்டுத்தீ நிலைமை இப்போது ஒரு அபாயகரமான நிலையை எட்டியுள்ளது. Longwood பகுதியில் பலத்த எரிந்த பகுதியில் ஒரு மனித...

மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள சுற்றுலா நகரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல்

மேற்கு ஆஸ்திரேலியாவின் தென்மேற்கில் உள்ள பிரபலமான சுற்றுலா நகரங்கள் அதிக போக்குவரத்து நெரிசலால் கடுமையான நெருக்கடியை எதிர்கொள்கின்றன. Dunsborough மற்றும் Busselton போன்ற நகரங்களில் உள்ள கடற்கரைகள்...