Newsஉக்ரைன்-ரஷ்யா போர் முனைக்கு சென்ற இலங்கையின் முன்னாள் ராணுவ வீரர்கள் -...

உக்ரைன்-ரஷ்யா போர் முனைக்கு சென்ற இலங்கையின் முன்னாள் ராணுவ வீரர்கள் – அம்பலமானது மோசடி

-

உக்ரைன் மற்றும் ரஷ்யாவின் போர் முனைகளுக்கு இலங்கையின் முன்னாள் இராணுவ வீரர்களை அனுப்பும் மோசடி தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

ரஷ்யா மற்றும் உக்ரைனில் உள்ள இராணுவ முகாம்களுக்கு முன்னாள் இராணுவத்தினரை அனுப்பி கடத்தலில் ஈடுபட்டவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் புலனாய்வுப் பிரிவினரும் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

மோசடியான வேலைவாய்ப்பு முகவர்களுடன் இணைந்து பொய்யான வாக்குறுதிகளை வழங்கி ஓய்வுபெற்ற போர்வீரர்களை ரஷ்ய – உக்ரைன் போர் முனைக்கு அனுப்பும் மோசடி செயற்படுவதாக தெரியவந்துள்ளது.

பீட்டர்ஸ்பேர்க் போன்ற புகழ்பெற்ற இடங்களில் காணிகளை வழங்குவதாகவும், ரஷ்யாவின் குடியுரிமை வழங்குவதாகவும், போரில் ஈடுபடும் மக்களுக்கு 10 இலட்சத்திற்கும் அதிகமான தொகை வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளதாக பாதுகாப்பு செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் இவர்களுக்கு பணமோ, சம்பளமோ வழங்கப்படவில்லை என்றும், உயிரிழப்பு ஏற்பட்டாலோ, பலத்த காயம் ஏற்பட்டாலோ இழப்பீடும் வழங்கப்படவில்லை என தெரியவந்துள்ளது.

இந்த மோசடிகளில் சிறிலங்காவின் முன்னாள் இராணுவத்தினர் பலர் சிக்கி போர் முனையில் இறங்கியுள்ளதாகவும் அதில் சிலர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஆட்கடத்தலில் ஈடுபட்டவர்களை அடையாளம் காணும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், முன்னாள் இராணுவத்தினர் தொடர்ந்து போருக்குக் கட்டுப்பட்டவர்கள் அல்ல, கூலிப்படையினர் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

வெளிநாடுகளுக்குச் சென்றவர்களைத் தேடுவதற்கான விசாரணைகள் வெளிவிவகார அமைச்சினாலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

Latest news

டைனோசர் முட்டையில் வெளிப்படும் காலநிலை ரகசியங்கள்

சீன விஞ்ஞானிகள் குழு ஒன்று டைனோசர் முட்டைகளின் சரியான வயதை தீர்மானிப்பதில் வெற்றி பெற்றுள்ளது. முட்டை ஓடுகளில் உள்ள யுரேனியம் மற்றும் ஈய மூலக்கூறுகளின் எண்ணிக்கையைக் கணக்கிடுவதன்...

வெளிநாட்டினருக்கு முறையாக வாகனம் ஓட்ட கற்றுக்கொடுக்கும் ஆஸ்திரேலிய பட்டறை

ஆஸ்திரேலியாவிற்கு வரும் புதிய குடியிருப்பாளர்களுக்கு ஓட்டுநர் சட்டங்கள் குறித்த புரிதலை வழங்க Fit to Drive Foundation நடவடிக்கை எடுத்துள்ளது. ஆஸ்திரேலியாவின் சாலை விதிகள் பெரும்பாலும் வெளிநாட்டினருக்கு...

லுகேமியா நோயாளிகளைக் காப்பாற்ற இளைஞர்களை அழைக்கும் அரசாங்கம்

ஆஸ்திரேலிய அரசாங்கம் 18-35 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் Stem செல்களை தானம் செய்ய முன்வருமாறு வேண்டுகோள் விடுக்கிறது. இந்த Stem செல்களுக்கான தேவை மிகவும் அதிகமாக இருப்பதாக லுகேமியா...

விளையாட்டுக்களால் பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்படும் ஆஸ்திரேலிய குழந்தைகள்

உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான குழந்தைகள் தினமும் விளையாடும் Roblox விளையாட்டின் ஆபத்துகளிலிருந்து பாதுகாக்க புதிய ஆன்லைன் பாதுகாப்பு விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த விளையாட்டின் மூலம், சில...

லுகேமியா நோயாளிகளைக் காப்பாற்ற இளைஞர்களை அழைக்கும் அரசாங்கம்

ஆஸ்திரேலிய அரசாங்கம் 18-35 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் Stem செல்களை தானம் செய்ய முன்வருமாறு வேண்டுகோள் விடுக்கிறது. இந்த Stem செல்களுக்கான தேவை மிகவும் அதிகமாக இருப்பதாக லுகேமியா...

விளையாட்டுக்களால் பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்படும் ஆஸ்திரேலிய குழந்தைகள்

உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான குழந்தைகள் தினமும் விளையாடும் Roblox விளையாட்டின் ஆபத்துகளிலிருந்து பாதுகாக்க புதிய ஆன்லைன் பாதுகாப்பு விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த விளையாட்டின் மூலம், சில...