Newsசூப்பர் மார்க்கெட்டில் பெற்றோரை ஏமாற்றிய இளைஞனுக்கு வழங்கப்பட்ட தண்டனை

சூப்பர் மார்க்கெட்டில் பெற்றோரை ஏமாற்றிய இளைஞனுக்கு வழங்கப்பட்ட தண்டனை

-

குயின்ஸ்லாந்தில் உள்ள வணிக வளாகத்தில் கும்பல் ஒன்று தலையை துண்டிக்கத் தயாராகும் போலி வீடியோவை வெளியிட்ட 27 வயது இளைஞருக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துள்ளது.

மார்ச் 25 அன்று, சந்தேக நபர் தனது கழுத்தில் கத்தியை வைத்துக்கொண்டு, மவுண்ட்வியூ ஷாப்பிங் சென்டருக்கு வெளியே தன்னைக் கொல்லப் போவதாக ஒரு வீடியோ எடுத்து பெற்றோருக்கு அனுப்பியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த காணொளி ISIS தீவிரவாத வீடியோவாக படமாக்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபருக்கு ISIS பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு உள்ளதா என விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இது ISIS அமைப்பின் எச்சரிக்கை என வீடியோவின் இறுதியில் குறிப்பிட்டிருந்தார்.

அடுத்த வாரத்தில் ஷாப்பிங் மால் ஒன்றில் ISIS தலை துண்டிக்கப்படும் என்றும் கூறப்பட்டதுடன், ஒருவரின் தலையை வெட்டுவதற்கு தனக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் சந்தேக நபர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த இளைஞன் எதிர்வரும் மே மாதம் 31ஆம் திகதி மீண்டும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

சந்தேக நபர் மனநலக் கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது பைத்தியக்காரத்தனம் காரணமாகவே இவ்வாறு செய்யப்பட்டுள்ளதாகவும் சந்தேகிக்கப்படுவதுடன், உரிய மருத்துவ அறிக்கைகளையும் வரவழைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...