Sports60 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தியது RCB அணி...

60 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தியது RCB அணி – IPL 2024

-

தரம்சாலா மைதானத்தில் நடந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் துடுப்பாடியது.

விராட் கோலி (92), பட்டிடார் (55), கிரீன் (46) ஆகியோரின் அதிரடி ஆட்டத்தினால் பெங்களூரு அணி 241 ஓட்டங்கள் குவித்தது.

பின்னர் இமாலய இலக்குடன் பஞ்சாப் கிங்ஸ் அணி களமிறங்கியது. பிரப்சிம்ரன் சிங் 6 ஓட்டங்களில் அவுட் ஆனார். அடுத்து வந்த ரோசோவ் ருத்ர தாண்டவம் ஆடினார்.

பேர்ஸ்டோவ் 16 பந்துகளில் 27 ஓட்டங்கள் விளாசி அவுட் ஆனார். அதனைத் தொடர்ந்து களமிறங்கிய ஷஷாங்க் சிங்கும் அதிரடி காட்டினார்.

இதற்கிடையில் அரைசதம் அடித்த ரோசோவ் 27 பந்துகளில் 61 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அவர் 3 சிக்ஸர், 9 பவுண்டரிகள் விளாசினார்.

பின்னர் ஷஷாங்க் சிங் 37 (19) ஓட்டங்களில் ரன்அவுட் ஆனார். கார்ன் ஷர்மா, சிராஜ் பந்துவீச்சில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் விக்கெட்டுகள் சரிந்தன. இதனால் அந்த அணி 17 ஓவரில் 181 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.

இதன்மூலம் 60 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது. மேலும், 8வது தோல்வியை சந்தித்த பஞ்சாப் அணி தொடரை விட்டு வெளியேறியது. 92 ஓட்டங்கள் விளாசிய கோலி ஆட்டநாயகன் விருது பெற்றார்.

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...