Sports60 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தியது RCB அணி...

60 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தியது RCB அணி – IPL 2024

-

தரம்சாலா மைதானத்தில் நடந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் துடுப்பாடியது.

விராட் கோலி (92), பட்டிடார் (55), கிரீன் (46) ஆகியோரின் அதிரடி ஆட்டத்தினால் பெங்களூரு அணி 241 ஓட்டங்கள் குவித்தது.

பின்னர் இமாலய இலக்குடன் பஞ்சாப் கிங்ஸ் அணி களமிறங்கியது. பிரப்சிம்ரன் சிங் 6 ஓட்டங்களில் அவுட் ஆனார். அடுத்து வந்த ரோசோவ் ருத்ர தாண்டவம் ஆடினார்.

பேர்ஸ்டோவ் 16 பந்துகளில் 27 ஓட்டங்கள் விளாசி அவுட் ஆனார். அதனைத் தொடர்ந்து களமிறங்கிய ஷஷாங்க் சிங்கும் அதிரடி காட்டினார்.

இதற்கிடையில் அரைசதம் அடித்த ரோசோவ் 27 பந்துகளில் 61 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அவர் 3 சிக்ஸர், 9 பவுண்டரிகள் விளாசினார்.

பின்னர் ஷஷாங்க் சிங் 37 (19) ஓட்டங்களில் ரன்அவுட் ஆனார். கார்ன் ஷர்மா, சிராஜ் பந்துவீச்சில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் விக்கெட்டுகள் சரிந்தன. இதனால் அந்த அணி 17 ஓவரில் 181 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.

இதன்மூலம் 60 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது. மேலும், 8வது தோல்வியை சந்தித்த பஞ்சாப் அணி தொடரை விட்டு வெளியேறியது. 92 ஓட்டங்கள் விளாசிய கோலி ஆட்டநாயகன் விருது பெற்றார்.

Latest news

2026 முதல் விக்டோரியாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வார இறுதிப் பயணங்கள்

விக்டோரியா மாநிலம் அடுத்த ஆண்டு முதல் மாற்றுத்திறனாளிகளுக்கு வார இறுதி நாட்களில் இலவச பொதுப் போக்குவரத்து சேவைகளை வழங்க திட்டமிட்டுள்ளது. இந்த திட்டம் "Fairer Fares for...

ஹொங்கொங், சிங்கப்பூரில் வேகமடையும் கொரோனா புதிய அலை

ஆசிய நாடுகளில் கொரோனா புதிய அலை பரவிவரும் நிலையில் ஹொங்கொங் மற்றும் சிங்கப்பூரில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 2019-ல் சீனாவில் தோன்றிய கொரோனா...

NSW நெடுஞ்சாலையில் நூற்றுக்கணக்கான கார்களை சேதப்படுத்திய உலோகத் துண்டுகள்

நியூ சவுத் வேல்ஸில் உள்ள ஒரு பெரிய சாலையில் சுமார் 840 கிலோகிராம் உலோகத் துண்டுகளை ஒரு லாரி கொட்டியதில், 300க்கும் மேற்பட்ட கார்களின் டயர்கள்...

NSW நெடுஞ்சாலையில் நடந்த பயங்கர விபத்து – இருவர் உயிரிழப்பு 

NSW தூர தெற்கு கடற்கரையில் நடந்த ஒரு பயங்கர நெடுஞ்சாலை விபத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். இன்று பிற்பகல் 1.45 மணியளவில் Eden பகுதியில் உள்ள Princes...

பிரிஸ்பேர்ணில் ஐ.நா. அமைதி காக்கும் பயிற்சி மையத்தைத் தொடங்கியது ஆஸ்திரேலியா

பசிபிக் தீவு காவல்துறையினரை ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் படையினராக மாற்றுவதற்கு பயிற்சி அளிக்கும் உலகின் முதல் திட்டத்தை ஆஸ்திரேலியா தொடங்கியுள்ளது. ஆஸ்திரேலியா வெறும் அண்டை...

சிட்னி துறைமுகத்தில் பயணக் கப்பலின் நங்கூரமிடும் கயிறில் ஏறிய நபர்

சிட்னி துறைமுகத்தில் ஒரு பயணக் கப்பலின் நங்கூரமிடும் கயிறுகளில் ஏறிய ஒரு நபரை பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று பிற்பகல் 3 மணியளவில், Carnival Adventure பயணக் கப்பலை...