Sports60 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தியது RCB அணி...

60 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தியது RCB அணி – IPL 2024

-

தரம்சாலா மைதானத்தில் நடந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் துடுப்பாடியது.

விராட் கோலி (92), பட்டிடார் (55), கிரீன் (46) ஆகியோரின் அதிரடி ஆட்டத்தினால் பெங்களூரு அணி 241 ஓட்டங்கள் குவித்தது.

பின்னர் இமாலய இலக்குடன் பஞ்சாப் கிங்ஸ் அணி களமிறங்கியது. பிரப்சிம்ரன் சிங் 6 ஓட்டங்களில் அவுட் ஆனார். அடுத்து வந்த ரோசோவ் ருத்ர தாண்டவம் ஆடினார்.

பேர்ஸ்டோவ் 16 பந்துகளில் 27 ஓட்டங்கள் விளாசி அவுட் ஆனார். அதனைத் தொடர்ந்து களமிறங்கிய ஷஷாங்க் சிங்கும் அதிரடி காட்டினார்.

இதற்கிடையில் அரைசதம் அடித்த ரோசோவ் 27 பந்துகளில் 61 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அவர் 3 சிக்ஸர், 9 பவுண்டரிகள் விளாசினார்.

பின்னர் ஷஷாங்க் சிங் 37 (19) ஓட்டங்களில் ரன்அவுட் ஆனார். கார்ன் ஷர்மா, சிராஜ் பந்துவீச்சில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் விக்கெட்டுகள் சரிந்தன. இதனால் அந்த அணி 17 ஓவரில் 181 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.

இதன்மூலம் 60 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது. மேலும், 8வது தோல்வியை சந்தித்த பஞ்சாப் அணி தொடரை விட்டு வெளியேறியது. 92 ஓட்டங்கள் விளாசிய கோலி ஆட்டநாயகன் விருது பெற்றார்.

Latest news

பிரேசிலில் சரிந்து விழுந்த சுதந்திர தேவி சிலை

தெற்கு பிரேசிலில் குவைபா நகரில் ஹவன் என்ற வணிகவளாகத்தின் வெளியே வைக்கப்பட்டிருந்த சுமார் 24 மீற்றர் உயரமுள்ள சுதந்திர தேவி சிலை கடந்த 15ம் திகதி...

பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கு போதுமான வளங்களை அரசாங்கம் வழங்கவில்லை என குற்றம்

Bondi கடற்கரையில் நடந்த கொடூரமான துப்பாக்கிச் சூடு மீண்டும் நிகழாமல் தடுக்க பயங்கரவாத எதிர்ப்பு வளங்களுக்கான செலவினங்களை அதிகரிக்க வேண்டும் என்று பாதுகாப்பு நிபுணர்கள் கூறுகின்றனர். துப்பாக்கிதாரிகள்...

பில்லியன் கணக்கான இழப்பீடு கோரி BBC மீது டிரம்ப் வழக்கு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் BBC தொலைக்காட்சி மீது பில்லியன் கணக்கான டாலர்கள் இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்துள்ளார். ஜனவரி 6, 2021 அன்று தான் ஆற்றிய...

Bondi துப்பாக்கிதாரிகளுடன் சண்டையிட்ட மேலும் இரண்டு ஹீரோக்கள்

Bondi-இல் துப்பாக்கி ஏந்தியவர்கள் என்று கூறப்படுபவர்களுடன் மேலும் இரண்டு போராட்டக்காரர்கள் சண்டையிடும் புதிய காட்சிகள் வெளியாகியுள்ளன. துப்பாக்கி ஏந்தியதாகக் கூறப்படும் ஒருவர் காரில் இருந்து இறங்கும்போது அவரைத்...

பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கு போதுமான வளங்களை அரசாங்கம் வழங்கவில்லை என குற்றம்

Bondi கடற்கரையில் நடந்த கொடூரமான துப்பாக்கிச் சூடு மீண்டும் நிகழாமல் தடுக்க பயங்கரவாத எதிர்ப்பு வளங்களுக்கான செலவினங்களை அதிகரிக்க வேண்டும் என்று பாதுகாப்பு நிபுணர்கள் கூறுகின்றனர். துப்பாக்கிதாரிகள்...

Bondi பயங்கரவாதிகள் ‘இராணுவ பாணி பயிற்சி’க்காக பிலிப்பைன்ஸ் பயணம் செய்ததாக தகவல்

தந்தை-மகன் துப்பாக்கிதாரிகள் சஜித் மற்றும் நவீத் அக்ரம் ஆகியோர் Bondi கடற்கரையில் நடந்த ஹனுக்கா கொண்டாட்டத்தில் 15 பேரைக் கொல்வதற்கு முந்தைய மாதத்தில் "இராணுவ பாணி...