Sports60 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தியது RCB அணி...

60 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தியது RCB அணி – IPL 2024

-

தரம்சாலா மைதானத்தில் நடந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் துடுப்பாடியது.

விராட் கோலி (92), பட்டிடார் (55), கிரீன் (46) ஆகியோரின் அதிரடி ஆட்டத்தினால் பெங்களூரு அணி 241 ஓட்டங்கள் குவித்தது.

பின்னர் இமாலய இலக்குடன் பஞ்சாப் கிங்ஸ் அணி களமிறங்கியது. பிரப்சிம்ரன் சிங் 6 ஓட்டங்களில் அவுட் ஆனார். அடுத்து வந்த ரோசோவ் ருத்ர தாண்டவம் ஆடினார்.

பேர்ஸ்டோவ் 16 பந்துகளில் 27 ஓட்டங்கள் விளாசி அவுட் ஆனார். அதனைத் தொடர்ந்து களமிறங்கிய ஷஷாங்க் சிங்கும் அதிரடி காட்டினார்.

இதற்கிடையில் அரைசதம் அடித்த ரோசோவ் 27 பந்துகளில் 61 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அவர் 3 சிக்ஸர், 9 பவுண்டரிகள் விளாசினார்.

பின்னர் ஷஷாங்க் சிங் 37 (19) ஓட்டங்களில் ரன்அவுட் ஆனார். கார்ன் ஷர்மா, சிராஜ் பந்துவீச்சில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் விக்கெட்டுகள் சரிந்தன. இதனால் அந்த அணி 17 ஓவரில் 181 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.

இதன்மூலம் 60 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது. மேலும், 8வது தோல்வியை சந்தித்த பஞ்சாப் அணி தொடரை விட்டு வெளியேறியது. 92 ஓட்டங்கள் விளாசிய கோலி ஆட்டநாயகன் விருது பெற்றார்.

Latest news

விக்டோரியாவில் இடம்பெற்ற வீதி விபத்துக்கள் – இருவர் பலி

விக்டோரியாவில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் இரண்டு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. விக்டோரியாவின் யர்ராவோங்காவில் 46 வயது பெண் ஒருவர் கார் மோதி உயிரிழந்தார். வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர் ஓட்டிச் சென்ற...

பழங்குடி சமூகத்திற்கு அளித்த வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படவில்லை

வடக்குப் பிரதேசத்தின் பிஞ்சாரி பகுதியில் பழங்குடி சமூகத்தினருக்கு வீடுகள் கட்டித் தருவதாக பிரதமர் அந்தோணி அல்பானீஸ் மார்ச் 2024 இல் அளித்த வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படவில்லை...

பட்டினியால் வாடும் 50,000 ஆஸ்திரேலியர்கள்

ஒவ்வொரு மாதமும் கிட்டத்தட்ட 50,000 ஆஸ்திரேலியர்கள் அடிப்படை உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய சிரமப்படுவதாக ஒரு கணக்கெடுப்பு வெளிப்படுத்தியுள்ளது. OzHarvest என்ற தொண்டு நிறுவனம் சமீபத்தில் நடத்திய...

விக்டோரியன் கடற்கரையில் கண்டெடுக்கப்பட்ட அடையாளம் தெரியாத உடல்

விக்டோரியாவின் Mornington தீபகற்பத்தில் உள்ள Cape Schanck பகுதியில் ஒரு மனித உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த உடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கி இறந்த ஒருவருடையது...

போராட்டக்காரர்கள் சீர்குலைத்த மெல்பேர்ண் அன்சாக் கொண்டாட்டங்கள்

ஆயுதப் படைகளில் பணியாற்றிய அனைவரின் துணிச்சலையும் தியாகத்தையும் நினைவுகூரும் வகையில், நாடு முழுவதும் நேற்று அன்சாக் தினக் கொண்டாட்டங்கள் நடத்தப்பட்டன. மாநில தலைநகரங்களிலும் ஆஸ்திரேலிய போர் நினைவுச்...

மீண்டும் மது அருந்த மாட்டேன் என நீதிமன்றத்தில் உறுதியளித்த சிட்னி குற்றவாளி 

மதுவுக்கு அடிமையான ஒருவர், தனது மனைவியைக் கொன்றதற்காக சிறைத்தண்டனை அனுபவித்த பிறகு, மீண்டும் ஒருபோதும் மது அருந்த மாட்டேன் என்று நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளார். 2020 ஆம் ஆண்டில்,...