Sydneyகடுமையான வானிலை காரணமாக சிட்னியை சுற்றியுள்ள மக்களுக்கு எச்சரிக்கை

கடுமையான வானிலை காரணமாக சிட்னியை சுற்றியுள்ள மக்களுக்கு எச்சரிக்கை

-

சிட்னியில் பெய்து வரும் கனமழையால் வாரகம்ப அணை இன்று காலை நிரம்பத் தொடங்கியது.

நியூ சவுத் வேல்ஸ் நீர் மேலாண்மை ஆணையம் கூறுகையில், இன்று காலை 7.30 மணிக்கு இந்த உபரிநீர் வெளியேறி, நாள் முழுவதும் நீடிக்க வாய்ப்புள்ளது.

ஹாக்ஸ்பரி மற்றும் நேபியன் ஆறுகள் உட்பட வெள்ளம் ஏற்படக்கூடிய நீர்வழிகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் இருந்து மக்கள் விலகி இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இன்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 48 மணித்தியாலங்களில் மொருயா மற்றும் டியுவா ஆற்றுப் பகுதிகளில் 150 மில்லிமீற்றர் மழை பதிவாகியுள்ளதுடன், தென் கரையோரமான வம்பானிற்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இணையதளம் மற்றும் முகநூல் பக்கங்களில் குறிப்பிடப்பட்டுள்ள எச்சரிக்கைகளை மக்கள் கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அடுத்த 24 மணித்தியாலங்களில் தென் கரையோர மற்றும் இலவர பிரதேசங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சிட்னியை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்றிரவு 30மிமீ மழை பெய்துள்ளதுடன், இன்று மேலும் 20மிமீ மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று இரவு கூடுதலான மழை பெய்யக்கூடும் என்பதால் மக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Latest news

அடுத்த மாதம் முதல் மொபைல் போன் பயன்படுத்தினால் ஓட்டுநர்களுக்கு அபராதம்

அடுத்த மாதம் முதல் ஆஸ்திரேலியாவின் சாலைச் சட்டங்களில் பல பெரிய மாற்றங்கள் நடைபெற உள்ளன. நாடு முழுவதும் செயல்படுத்தப்பட உள்ள AI கண்காணிப்பு கேமராக்களின் உதவியுடன் மொபைல்...

ஜப்பானில் ட்விட்டர் கொலையாளிக்கு நிறைவேற்றப்பட்ட மரணதண்டனை

ஜப்பான் 2017 ஆம் ஆண்டில் ஒன்பது பேரைக் கொன்ற ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது. 2022 க்குப் பிறகு அந்த நாடு மரண தண்டனையை அமுல்படுத்தியதில்...

உறைந்த தவளைகள் உட்பட 62,000 கிலோ உணவை ஆஸ்திரேலியாவிற்குள் சட்டவிரோதமாக கொண்டுவந்த பெண்

ஆஸ்திரேலியாவிற்குள் சட்டவிரோதமாக 62,000 கிலோகிராம் வெளிநாட்டு உணவைக் கொண்டு வந்ததற்காக ஒரு பெண்ணுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. போலியாக பெயரிடப்பட்ட polystyrene பெட்டிகளில் அடைக்கப்பட்டிருந்த அந்த உணவை ஆஸ்திரேலிய...

சர்வதேச மாணவர் சேர்க்கை குறைந்து வருவதால் வேலைகளைக் குறைக்க உள்ள பல்கலைக்கழகங்கள்

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய பிராந்திய பல்கலைக்கழகங்களில் ஒன்று, அதன் பட்ஜெட்டில் இருந்து $35 மில்லியன் சேமிக்க முயற்சிப்பதால், ஊழியர்களின் வேலைகள் குறைக்கப்படும் என்று கூறியுள்ளது. சர்வதேச மாணவர் வேலைவாய்ப்புகளில்...

உறைந்த தவளைகள் உட்பட 62,000 கிலோ உணவை ஆஸ்திரேலியாவிற்குள் சட்டவிரோதமாக கொண்டுவந்த பெண்

ஆஸ்திரேலியாவிற்குள் சட்டவிரோதமாக 62,000 கிலோகிராம் வெளிநாட்டு உணவைக் கொண்டு வந்ததற்காக ஒரு பெண்ணுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. போலியாக பெயரிடப்பட்ட polystyrene பெட்டிகளில் அடைக்கப்பட்டிருந்த அந்த உணவை ஆஸ்திரேலிய...

சர்வதேச மாணவர் சேர்க்கை குறைந்து வருவதால் வேலைகளைக் குறைக்க உள்ள பல்கலைக்கழகங்கள்

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய பிராந்திய பல்கலைக்கழகங்களில் ஒன்று, அதன் பட்ஜெட்டில் இருந்து $35 மில்லியன் சேமிக்க முயற்சிப்பதால், ஊழியர்களின் வேலைகள் குறைக்கப்படும் என்று கூறியுள்ளது. சர்வதேச மாணவர் வேலைவாய்ப்புகளில்...