Sydneyகடுமையான வானிலை காரணமாக சிட்னியை சுற்றியுள்ள மக்களுக்கு எச்சரிக்கை

கடுமையான வானிலை காரணமாக சிட்னியை சுற்றியுள்ள மக்களுக்கு எச்சரிக்கை

-

சிட்னியில் பெய்து வரும் கனமழையால் வாரகம்ப அணை இன்று காலை நிரம்பத் தொடங்கியது.

நியூ சவுத் வேல்ஸ் நீர் மேலாண்மை ஆணையம் கூறுகையில், இன்று காலை 7.30 மணிக்கு இந்த உபரிநீர் வெளியேறி, நாள் முழுவதும் நீடிக்க வாய்ப்புள்ளது.

ஹாக்ஸ்பரி மற்றும் நேபியன் ஆறுகள் உட்பட வெள்ளம் ஏற்படக்கூடிய நீர்வழிகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் இருந்து மக்கள் விலகி இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இன்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 48 மணித்தியாலங்களில் மொருயா மற்றும் டியுவா ஆற்றுப் பகுதிகளில் 150 மில்லிமீற்றர் மழை பதிவாகியுள்ளதுடன், தென் கரையோரமான வம்பானிற்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இணையதளம் மற்றும் முகநூல் பக்கங்களில் குறிப்பிடப்பட்டுள்ள எச்சரிக்கைகளை மக்கள் கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அடுத்த 24 மணித்தியாலங்களில் தென் கரையோர மற்றும் இலவர பிரதேசங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சிட்னியை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்றிரவு 30மிமீ மழை பெய்துள்ளதுடன், இன்று மேலும் 20மிமீ மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று இரவு கூடுதலான மழை பெய்யக்கூடும் என்பதால் மக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Latest news

ஆஸ்திரேலியாவில் ஆபத்தில் உள்ள தபால் ஊழியர்களின் பாதுகாப்பு

Australia Post, பணியில் இருக்கும்போது நெடுஞ்சாலையில் உள்ள தபால் ஊழியர்களுக்கு ஆதரவளிக்குமாறு ஓட்டுநர்களைக் கேட்டுக்கொள்கிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை காலம் காரணமாக, குறிப்பாக டிசம்பரில், தபால் ஊழியர்களின் அதிக...

AI உருவாக்கிய அறிக்கை – நிறுவனத்திற்கு $440,000 அபராதம்

AI ஐப் பயன்படுத்தி ஒரு குறைபாடுள்ள அறிக்கையை தயாரித்ததாக ஒப்புக்கொண்ட பிறகு, ஒப்பந்தப் பணத்திற்கான பகுதியை மத்திய அரசுக்குத் திருப்பித் தர Deloitte ஒப்புக்கொண்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும்...

ஆஸ்திரேலியாவில் பிரபலமாகிவரும் Home Schooling முறை

ஆஸ்திரேலியாவில் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டிலேயே கல்வி கற்பிப்பதையோ அல்லது வீட்டுக்கல்வியையோ தேர்ந்தெடுக்கும் பெற்றோரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் தோராயமாக 4 மில்லியன் மாணவர்களில்...

உலகிலேயே அதிக சூதாட்ட விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அதிகப்படியான சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துமாறு நிபுணர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா உலகின் முன்னணி சூதாட்ட நாடுகளில் ஒன்றாகும், மேலும் சூதாட்டம் வேடிக்கையாகத் தோன்றினாலும், அது பெரும்பாலும் பணத்தையும்,...

மெல்பேர்ணின் EV Charging பிரச்சனைக்கான தீர்வுகள்

மெல்பேர்ணின் Merri- bek பகுதியில் மின்சார (EV) வாகனங்களை சார்ஜ் செய்வதில் பலருக்கு இருக்கும் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. Merri- bek நகர சபை,  Vehicle Charging Solutions...

வேகமாக வளர்ந்து வரும் விக்டோரியாவின் மக்கள் தொகையை விட சிறைச்சாலை மக்கள் தொகை

விக்டோரியாவில் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை, மாநிலத்தின் மக்கள்தொகை வளர்ச்சியை விட வேகமாக அதிகரித்து வருவதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 20 வருட காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை...