Sydneyகடுமையான வானிலை காரணமாக சிட்னியை சுற்றியுள்ள மக்களுக்கு எச்சரிக்கை

கடுமையான வானிலை காரணமாக சிட்னியை சுற்றியுள்ள மக்களுக்கு எச்சரிக்கை

-

சிட்னியில் பெய்து வரும் கனமழையால் வாரகம்ப அணை இன்று காலை நிரம்பத் தொடங்கியது.

நியூ சவுத் வேல்ஸ் நீர் மேலாண்மை ஆணையம் கூறுகையில், இன்று காலை 7.30 மணிக்கு இந்த உபரிநீர் வெளியேறி, நாள் முழுவதும் நீடிக்க வாய்ப்புள்ளது.

ஹாக்ஸ்பரி மற்றும் நேபியன் ஆறுகள் உட்பட வெள்ளம் ஏற்படக்கூடிய நீர்வழிகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் இருந்து மக்கள் விலகி இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இன்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 48 மணித்தியாலங்களில் மொருயா மற்றும் டியுவா ஆற்றுப் பகுதிகளில் 150 மில்லிமீற்றர் மழை பதிவாகியுள்ளதுடன், தென் கரையோரமான வம்பானிற்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இணையதளம் மற்றும் முகநூல் பக்கங்களில் குறிப்பிடப்பட்டுள்ள எச்சரிக்கைகளை மக்கள் கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அடுத்த 24 மணித்தியாலங்களில் தென் கரையோர மற்றும் இலவர பிரதேசங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சிட்னியை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்றிரவு 30மிமீ மழை பெய்துள்ளதுடன், இன்று மேலும் 20மிமீ மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று இரவு கூடுதலான மழை பெய்யக்கூடும் என்பதால் மக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...