Newsரஷ்ய உக்ரைன் போருக்குச் சென்ற இலங்கையர்களைப் பற்றி வெளியான சோகம்

ரஷ்ய உக்ரைன் போருக்குச் சென்ற இலங்கையர்களைப் பற்றி வெளியான சோகம்

-

ரஷ்ய உக்ரைன் யுத்தத்தின் போது கூலிப்படையில் இணைந்து கொண்ட இலங்கையர்கள் 17 பேர் உயிரிழந்துள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவுக்குச் சென்ற மேலும் இரண்டு ஓய்வுபெற்ற இராணுவத்தினர் காணாமல் போயுள்ளதாக நேற்று தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த மார்ச் மாதம் 29ஆம் திகதிக்கு பின்னர் அவர்களிடம் இருந்து எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

பதவிய பிரதேசத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி மற்றும் மெதவச்சியை சேர்ந்த ஓய்வு பெற்ற கமாண்டோ அதிகாரி ஒருவர் தொடர்பில் எவ்வித தகவலும் இல்லை என தெரியவந்துள்ளது.

இதேவேளை, ரஷ்யா மற்றும் உக்ரேனில் உள்ள இராணுவத் தளங்களுக்கு இலங்கையின் முன்னாள் இராணுவத்தினரை கடத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் புலனாய்வுப் பிரிவினரும் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மோசடிகளில் சிறிலங்காவின் முன்னாள் இராணுவத்தினர் பலர் சிக்கி போர் முனையில் இறங்கியுள்ளதாகவும் அதில் சிலர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Latest news

அழகுசாதன சிகிச்சைகளால் ஆபத்தின் விளிம்பில் உள்ள பெண்கள்

முக சுருக்கங்களைக் குறைக்க அழகு சிகிச்சைகளை மேற்கொள்ளும் பெண்களில் பல பெரும் ஆபத்தில் உள்ளனர். முக சுருக்கங்களைக் குறைக்கப் பயன்படுத்தப்படும் Toxpia தடுப்பூசியால் விஷம் குடித்த பிரிட்டிஷ்...

தாமதமாகும் அறுவை சிகிச்சைகள் – கவலை கொண்டுள்ள NSW சுகாதார அமைச்சர்

தாமதமான அறுவை சிகிச்சைகளுக்கான காத்திருப்போர் பட்டியல் அதிகரித்து வருவது குறித்து நியூ சவுத் வேல்ஸ் சுகாதார அமைச்சர் கவலை கொண்டுள்ளார். நியூ சவுத் வேல்ஸ் மாநில மருத்துவமனைகளில்...

ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதக் குறைப்பு வீட்டுவசதித் துறையை எவ்வாறு பாதிக்கும்?

ரிசர்வ் வங்கியின் சமீபத்திய வட்டி விகிதக் குறைப்பு, வீட்டுவசதி கட்டுமானத் துறையில் "அதிக நம்பிக்கையை" ஏற்படுத்தியுள்ளது என்று வீட்டுவசதி தொழில் சங்கத்தின் நிர்வாக இயக்குநர் ஜோசலின்...

டிரம்பை எதிர்க்க புதிய அரசியல் கட்சியை ஆரம்பித்தார் எலான் மஸ்க்

கோடீஸ்வரர் எலோன் மஸ்க் புதிய அரசியல் கட்சியைத் தொடங்குவதாகக் கூறியுள்ளார். தனது சமூக ஊடக தளமான X இல் ஒரு அறிவிப்பில், அவர் அமெரிக்க கட்சியை உருவாக்கியுள்ளதாகவும்,...

டிரம்பை எதிர்க்க புதிய அரசியல் கட்சியை ஆரம்பித்தார் எலான் மஸ்க்

கோடீஸ்வரர் எலோன் மஸ்க் புதிய அரசியல் கட்சியைத் தொடங்குவதாகக் கூறியுள்ளார். தனது சமூக ஊடக தளமான X இல் ஒரு அறிவிப்பில், அவர் அமெரிக்க கட்சியை உருவாக்கியுள்ளதாகவும்,...

குயின்ஸ்லாந்தில் வீதியில் தீப்பிடித்து எரிந்த இரசாயன லாரி

குயின்ஸ்லாந்தில் ரசாயனங்கள் ஏற்றிச் சென்ற லாரியில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து, அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. Charleville-இற்கு தெற்கே 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள Bakers Bend-இல்...