Newsரஷ்ய உக்ரைன் போருக்குச் சென்ற இலங்கையர்களைப் பற்றி வெளியான சோகம்

ரஷ்ய உக்ரைன் போருக்குச் சென்ற இலங்கையர்களைப் பற்றி வெளியான சோகம்

-

ரஷ்ய உக்ரைன் யுத்தத்தின் போது கூலிப்படையில் இணைந்து கொண்ட இலங்கையர்கள் 17 பேர் உயிரிழந்துள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவுக்குச் சென்ற மேலும் இரண்டு ஓய்வுபெற்ற இராணுவத்தினர் காணாமல் போயுள்ளதாக நேற்று தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த மார்ச் மாதம் 29ஆம் திகதிக்கு பின்னர் அவர்களிடம் இருந்து எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

பதவிய பிரதேசத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி மற்றும் மெதவச்சியை சேர்ந்த ஓய்வு பெற்ற கமாண்டோ அதிகாரி ஒருவர் தொடர்பில் எவ்வித தகவலும் இல்லை என தெரியவந்துள்ளது.

இதேவேளை, ரஷ்யா மற்றும் உக்ரேனில் உள்ள இராணுவத் தளங்களுக்கு இலங்கையின் முன்னாள் இராணுவத்தினரை கடத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் புலனாய்வுப் பிரிவினரும் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மோசடிகளில் சிறிலங்காவின் முன்னாள் இராணுவத்தினர் பலர் சிக்கி போர் முனையில் இறங்கியுள்ளதாகவும் அதில் சிலர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Latest news

அமெரிக்க குடியுரிமை வாங்க ஒரு சிறப்பு வாய்ப்பு.

அமெரிக்க குடியுரிமையை 5 மில்லியன் டாலர்களுக்கு விற்க நடவடிக்கை எடுப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறுகிறார். இலவச அமெரிக்க குடியுரிமை வழங்குவதற்காக 'Green card' லாட்டரி...

ஆஸ்திரேலிய உருக்கு இரும்பு(Steel) வரி பற்றிய மற்றொரு விவாதம்

அமெரிக்கா விதித்துள்ள வரிகளால் ஆஸ்திரேலியாவின் உருக்கு இரும்பு(Steel) தொழிலுக்கு ஏற்படும் சேதத்தைக் குறைக்கும் நோக்கில் மற்றொரு விவாதம் நடத்தப்பட்டுள்ளது. இது அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்காட் பெசன்ட்...

விக்டோரியன் போக்குவரத்துக்கு மேலும் 7 பில்லியன் டாலர்களை அறிவித்தார் பிரதமர்

விக்டோரியாவில் போக்குவரத்துத் துறையில் மேம்பாட்டுப் பணிகளுக்காக ஆளும் தொழிற்கட்சி அரசாங்கம் 7 ​​பில்லியன் டாலர்களை ஒதுக்க முடிவு செய்துள்ளது. மெல்போர்ன் விமான நிலைய இணைப்பு ரயில் திட்டத்திற்கு...

வேலைநிறுத்தங்களால் Woolworths-இன் வருவாய் சரிவு

ஆஸ்திரேலியாவின் முன்னணி பல்பொருள் அங்காடி சங்கிலிகளில் ஒன்றான Woolworths, தொழிலாளர் வேலைநிறுத்தங்கள் காரணமாக அதன் வருவாய் சரிவைக் கண்டுள்ளது. சமீபத்தில், Woolworths-ல் உள்ள ஒரு குழு ஊழியர்கள்...

வேலைநிறுத்தங்களால் Woolworths-இன் வருவாய் சரிவு

ஆஸ்திரேலியாவின் முன்னணி பல்பொருள் அங்காடி சங்கிலிகளில் ஒன்றான Woolworths, தொழிலாளர் வேலைநிறுத்தங்கள் காரணமாக அதன் வருவாய் சரிவைக் கண்டுள்ளது. சமீபத்தில், Woolworths-ல் உள்ள ஒரு குழு ஊழியர்கள்...

ஆஸ்திரேலிய பொருளாதாரத்தில் ஏற்படும் மாற்றங்கள்

ஜனவரி மாதத்தில் ஆஸ்திரேலியாவில் பணவீக்கம் நிலையாக இருந்தது. ஆஸ்திரேலிய புள்ளியியல் அலுவலகம் நேற்று வெளியிட்ட சமீபத்திய அறிக்கை, ஜனவரி மாத பணவீக்கம் 2.5 சதவீதமாக இருந்ததைக் காட்டுகிறது. இருப்பினும்,...