News14 பேரின் உயிரை பறித்த விளம்பர பலகை

14 பேரின் உயிரை பறித்த விளம்பர பலகை

-

இந்தியாவின் மும்பையில் நிறுவப்பட்ட விளம்பர பலகை இடிந்து விழுந்ததில் 14 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

மோசமான வானிலை காரணமாக ஏற்பட்ட புயலின் போது விளம்பர பலகை ஒன்று இடிந்து விழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

பெட்ரோல் பங்க் அருகே நிறுவப்பட்ட பலகை இடிந்து விழுந்து சிக்கியவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தேசிய பேரிடர் மீட்புப் படை இன்ஸ்பெக்டர் கவுரவ் சவுகான் கூறுகையில், இடிபாடுகளில் இருந்து 8 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

70 முதல் 50 மீற்றர் அளவுள்ள பிரமாண்ட விளம்பரப் பலகை ஒன்று இடிந்து விழுந்துள்ளதுடன், 20 முதல் 30 பேர் வரையில் இன்னும் சிக்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.

சம்பவத்தில் இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 500,000 ரூபாய் நிதியுதவியை மாநில அரசு வழங்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புயல் காரணமாக, மும்பையின் சர்வதேச விமான நிலையத்தில் விமானங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், குறைந்தது 15 விமானங்கள் திருப்பி விடப்பட்டுள்ளதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...