News14 பேரின் உயிரை பறித்த விளம்பர பலகை

14 பேரின் உயிரை பறித்த விளம்பர பலகை

-

இந்தியாவின் மும்பையில் நிறுவப்பட்ட விளம்பர பலகை இடிந்து விழுந்ததில் 14 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

மோசமான வானிலை காரணமாக ஏற்பட்ட புயலின் போது விளம்பர பலகை ஒன்று இடிந்து விழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

பெட்ரோல் பங்க் அருகே நிறுவப்பட்ட பலகை இடிந்து விழுந்து சிக்கியவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தேசிய பேரிடர் மீட்புப் படை இன்ஸ்பெக்டர் கவுரவ் சவுகான் கூறுகையில், இடிபாடுகளில் இருந்து 8 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

70 முதல் 50 மீற்றர் அளவுள்ள பிரமாண்ட விளம்பரப் பலகை ஒன்று இடிந்து விழுந்துள்ளதுடன், 20 முதல் 30 பேர் வரையில் இன்னும் சிக்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.

சம்பவத்தில் இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 500,000 ரூபாய் நிதியுதவியை மாநில அரசு வழங்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புயல் காரணமாக, மும்பையின் சர்வதேச விமான நிலையத்தில் விமானங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், குறைந்தது 15 விமானங்கள் திருப்பி விடப்பட்டுள்ளதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Latest news

புறப்பட்ட 30 வினாடிகளில் விபத்துக்குள்ளான விமானம்

அமெரிக்க விமான விபத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்ட குழந்தை உட்பட 5 பேர் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டு பின் உயிரிழந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது. நேற்று, மருத்துவ போக்குவரத்து...

ஆஸ்திரேலியா மாணவர் விசா பற்றிய சமீபத்திய அறிவிப்பு

கடந்த ஆண்டு அவுஸ்திரேலியாவில் மாணவர் விசா வழங்குவது சாதனை அளவில் உயர்ந்துள்ளது. கடந்த நவம்பரில் வெளிநாட்டிலிருந்து விண்ணப்பித்த பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்பட்ட விசாக்களின் எண்ணிக்கை 17,000 என...

அவுஸ்திரேலியாவில் இலங்கையர்களுக்கு இலவசமாக கல்வி கற்க மற்றுமொரு வாய்ப்பு

இலங்கை மாணவர்கள் விண்ணப்பிக்கக்கூடிய பல அவுஸ்திரேலிய பல்கலைக்கழக புலமைப்பரிசில்கள் பற்றிய தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி, 2026ஆம் ஆண்டுக்கான அவுஸ்திரேலியா விருதுகள் திட்டத்திற்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றுள்ள இலங்கையர்களுக்கு...

தென் கொரிய தேசிய மொழி அருங்காட்சியகத்தில் தீ விபத்து

தென் கொரியாவிலுள்ள தேசிய மொழி அருங்காட்சியகத்தில் நேற்று காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அந்நாட்டு தலைநகர் சியோலின் மத்திய மாகாணத்தில் அமைந்துள்ள கொரியாவின் தேசிய ஹாங்கியூல் அருங்காட்சியகத்தின்...

தென் கொரிய தேசிய மொழி அருங்காட்சியகத்தில் தீ விபத்து

தென் கொரியாவிலுள்ள தேசிய மொழி அருங்காட்சியகத்தில் நேற்று காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அந்நாட்டு தலைநகர் சியோலின் மத்திய மாகாணத்தில் அமைந்துள்ள கொரியாவின் தேசிய ஹாங்கியூல் அருங்காட்சியகத்தின்...

பனியால் மூடப்பட்டுள்ள நயாகரா நீர்வீழ்ச்சி – இணையத்தில் வைரல்

உலகப் புகழ்பெற்ற நயாகரா நீர்வீழ்ச்சி பனி மற்றும் பனியால் மூடப்பட்டிருக்கும் அற்புதமான காட்சிகள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன. நீர்வீழ்ச்சியில் தண்ணீர் முழுமையாக உருகாமல் பனிப் படலத்தின் கீழ் தொடர்ந்து...