Melbourneமெல்போர்னில் இரவு பணியை முடித்துவிட்டு தனது குழந்தையை பள்ளியில் விடச் சென்ற...

மெல்போர்னில் இரவு பணியை முடித்துவிட்டு தனது குழந்தையை பள்ளியில் விடச் சென்ற தாய்க்கு ஏற்பட்ட சோகம்

-

கடந்த செவ்வாய்கிழமை Melbourne Hampton Park பகுதியில் இடம்பெற்ற பயங்கர விபத்தில் உயிரிழந்த பெண் தனது மகனை பாடசாலைக்கு அழைத்துச் சென்றது தெரியவந்துள்ளது.

இவர் தனது கணவரை விட்டு பிரிந்து மகனுடன் தனி தாயாக வாழ்ந்து வருவது தெரியவந்துள்ளது.

சமிரா ஹுசைன்பூர் என்ற 35 வயதுடைய பெண், காலை 7.15 மணியளவில் தான் பணிபுரிந்த தொழிற்சாலையில் இரவு பணியை முடித்துக் கொண்டு காரை ஓட்டிச் சென்றபோது, ​​மற்றொரு வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானார்.

அப்போது தவறான திசையில் வந்த கார், பெண் பயணித்த கார் மீது மோதியதாக கூறப்படுகிறது.

அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், அங்கு பயணித்த 34 வயதுடைய பெண் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தில் சிக்கிய காரை ஓட்டிச் சென்ற 20 வயதுடைய சாரதியும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சமீரா தனது 13 வயது மகனை பள்ளிக்கு அழைத்துச் செல்வதற்காக வேலை முடிந்து வீட்டிற்குச் சென்று கொண்டிருந்ததாக அவரது சகோதரி ஜைனப் ஹுசைன்பூர் கூறினார்.

மகன் தனது தந்தையை அறியாததால், தனது தாயுடன் நம்பமுடியாத அளவிற்கு நெருக்கமாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Latest news

பயங்கரவாதத் தடுப்புச் சட்டங்களை நிறைவேற்ற மீண்டும் கூடும் நாடாளுமன்றம்

வெறுப்புப் பேச்சு மற்றும் துப்பாக்கி திரும்பப் பெறுதல் சட்டங்களை நிறைவேற்றுவதற்காக நாடாளுமன்றம் அடுத்த வாரம் மீண்டும் கூட உள்ளது. இன்று பிற்பகல் ஒரு செய்தியாளர் கூட்டத்தில், பிரதமர்...

தீப்பிழம்புகளுக்கு மத்தியில் ஒரு கப்பல் கொள்கலனில் தங்கியிருந்த மூவர் மீட்பு

விக்டோரியாவிலிருந்து ஒரு நபர் தனது வீடு காட்டுத்தீயில் எரிந்து கொண்டிருந்தபோது, ​​ஒரு கப்பல் கொள்கலனுக்குள் ஒளிந்து கொண்டு உயிர் பிழைத்ததைப் பற்றிய ஒரு கதை பதிவாகியுள்ளது. Longwood-இல்...

சந்தேகத்திற்கிடமான மின்னஞ்சல்கள் குறித்து இன்ஸ்டாகிராம் பயனர்கள் எச்சரிக்கை

கடவுச்சொல் மீட்டமைப்புகளைக் கேட்கும் சந்தேகத்திற்கிடமான மின்னஞ்சல்கள் குறித்து மில்லியன் கணக்கான பயனர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு இன்ஸ்டாகிராம் எச்சரித்துள்ளது. கடவுச்சொல் மீட்டமைப்பு மின்னஞ்சல்களைக் கோராமலேயே பெறுவது குறித்து பயனர்கள்...

குயின்ஸ்லாந்திற்குள் நுழையும் Koji புயல் – 2 பகுதிகளுக்கு திடீர் வெள்ள அபாயம்

வெப்பமண்டல சூறாவளி Koji குயின்ஸ்லாந்து மாநிலத்திற்குள் நுழைந்துள்ளது. அடுத்த சில மணிநேரங்களில் Ayr மற்றும் Bowen-ஐ சுற்றியுள்ள குடியிருப்பாளர்கள் மிக அதிக மழையால் பாதிக்கப்படுவார்கள் என்றும், இது...

குயின்ஸ்லாந்திற்குள் நுழையும் Koji புயல் – 2 பகுதிகளுக்கு திடீர் வெள்ள அபாயம்

வெப்பமண்டல சூறாவளி Koji குயின்ஸ்லாந்து மாநிலத்திற்குள் நுழைந்துள்ளது. அடுத்த சில மணிநேரங்களில் Ayr மற்றும் Bowen-ஐ சுற்றியுள்ள குடியிருப்பாளர்கள் மிக அதிக மழையால் பாதிக்கப்படுவார்கள் என்றும், இது...

புதிய Influenza தொற்றுநோய் – காய்ச்சல் நோயாளிகள் அதிகரிப்பு

'Super-K' அல்லது subclade-K எனப்படும் புதிய இன்ஃப்ளூயன்ஸா திரிபு, காய்ச்சல் நோயாளிகளில் அசாதாரண அதிகரிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று தொற்றுநோயியல் நிபுணர்கள் கூறுகின்றனர். WHO ஒத்துழைப்பு மையத்தின் இன்ஃப்ளூயன்ஸா...