Melbourneமெல்போர்னில் புனைப்பெயர்களால் மாணவிகளை துன்புறுத்திய மாணவர் குழு தொடர்பில் விசாரணைகள்

மெல்போர்னில் புனைப்பெயர்களால் மாணவிகளை துன்புறுத்திய மாணவர் குழு தொடர்பில் விசாரணைகள்

-

மெல்போர்னில் உள்ள மற்றுமொரு பாடசாலையில், ஆபாசமான வார்த்தைகளால் புனைப்பெயர்களைப் பயன்படுத்தி மாணவிகளை துன்புறுத்திய மாணவர் குழு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

McClelland மேல்நிலைப் பள்ளியில் 9 ஆம் வகுப்பு மாணவர்கள் குழுவொன்று, தங்கள் வகுப்பறையில் உள்ள மாணவிகளுக்கு ஆபாசமான புனைப்பெயர்களைப் பயன்படுத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு தயாரிக்கப்பட்ட பெயர் பட்டியல் பாடசாலையின் பிள்ளைகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக விக்டோரியா பொலிஸார் தெரிவித்தனர்.

ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும் செயல் முதல்வர் லாரா ஸ்பென்ஸ் தெரிவித்தார்.

இதன் காரணமாக பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஆலோசனை சேவைகள் வழங்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

எந்தவொரு விக்டோரியா பாடசாலையாலும் பெண் மாணவர்களை இவ்வாறு உடல் ரீதியாகவோ அல்லது மன ரீதியாகவோ ஒடுக்க முடியாது என கல்வி இராஜாங்க அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

சில வாரங்களுக்கு முன்னர், மெல்போர்னில் உள்ள மற்றுமொரு பாடசாலையில் இதேபோன்ற சம்பவம் ஒன்று பதிவாகியிருந்ததுடன், இது போன்று மீண்டும் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாடசாலை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Latest news

மீண்டும் பரவும் புதிய வகை கொரோனா வைரஸ்

புதிய வகை வௌவால் கொரோனா வைரஸை சீன குழு ஒன்று கண்டுபிடித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கோவிட் 19 போன்றே இந்த புதிய வைரஸூம் விலங்குகளிடம்...

ஆஸ்திரேலிய அரசியல்வாதியை மிரட்டிய நபர் – 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை

ஆஸ்திரேலியாவில் சமூக ஊடகங்கள் மூலம் அரசியல்வாதி ஒருவரை மிரட்டிய நபருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு ஆஸ்திரேலியாவிலிருந்து வந்த இந்த நபர், ஒரு கூட்டாட்சி நாடாளுமன்ற...

விக்டோரியாவின் வளர்ச்சிக்காக மில்லியன் கணக்கான டாலர்களை முதலீடு செய்யும் அரசாங்கம்

அல்பானீஸ் அரசாங்கம் விக்டோரியாவில் சாலை மேம்பாட்டில் கவனம் செலுத்தியுள்ளது. அதன்படி, கிளைட் நார்த்தில் உள்ள தாம்சன்ஸ் சாலையில் 41.75 மில்லியன் டாலர்களை முதலீடு செய்வதாக அரசாங்கம் கூறுகிறது. தற்போதுள்ள...

நாளுக்கு நாள் மாறி வரும் விக்டோரியா காவல்துறை

விக்டோரியாவில் மற்றொரு மூத்த காவல்துறை அதிகாரியை நீக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. விக்டோரியாவின் துணை போலீஸ் கமிஷனர் நீல் பேட்டர்சன் கடந்த வியாழக்கிழமை தனது ஊழியர்களுக்கு...

விக்டோரியாவின் வளர்ச்சிக்காக மில்லியன் கணக்கான டாலர்களை முதலீடு செய்யும் அரசாங்கம்

அல்பானீஸ் அரசாங்கம் விக்டோரியாவில் சாலை மேம்பாட்டில் கவனம் செலுத்தியுள்ளது. அதன்படி, கிளைட் நார்த்தில் உள்ள தாம்சன்ஸ் சாலையில் 41.75 மில்லியன் டாலர்களை முதலீடு செய்வதாக அரசாங்கம் கூறுகிறது. தற்போதுள்ள...

நாளுக்கு நாள் மாறி வரும் விக்டோரியா காவல்துறை

விக்டோரியாவில் மற்றொரு மூத்த காவல்துறை அதிகாரியை நீக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. விக்டோரியாவின் துணை போலீஸ் கமிஷனர் நீல் பேட்டர்சன் கடந்த வியாழக்கிழமை தனது ஊழியர்களுக்கு...