Sports5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது பஞ்சாப் - IPL 2024

5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது பஞ்சாப் – IPL 2024

-

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று கவுகாத்தியில் உள்ள அசாம் கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்ற 65-வது லீக் போட்டியில் முன்னாள் சாம்பியன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, பஞ்சாப் கிங்சை எதிர்கொண்டது.

இந்த போட்டிக்கான நாணயசுழற்சியில் வென்ற ராஜஸ்தான் அணியின் தலைவர் சஞ்சு சாம்சன் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார்.அதன்படி , ராஜஸ்தான் அணிமுதலில் துடுப்பாட்ட தீர்மானித்து.

அதன்படி தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் , டாம் கோலர் ஆகியோர் களமிறங்கினர். தொடக்கத்தில் ஜெய்ஸ்வால் 4 ஓட்டங்களிலும் , டாம் கோலர் 18 ஓட்டங்களிலும் , பின்னர் வந்த சாம்சன் 18 ஓட்டங்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

தொடர்ந்து ரியான் பராக் , அஸ்வின் இருவரும் சிறப்பாக ஆடினர். நிலைத்து ஆடி ஓட்டங்களை குவித்தனர். அஸ்வின் 19 பந்துகளில் 28 ஓட்டங்களும் , பராக் 34 பந்துகளில் 48 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு ராஜஸ்தான் 144 ஓட்டங்களை எடுத்தது. பஞ்சாப் சார்பில் சிறப்பாக பந்துவீசிய சாம் கரன் , ராகுல் சாஹர் ,ஹர்சல் படேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

தொடர்ந்து 145 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய பஞ்சாப் அணி 18.5 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

நன்றி தமிழன்

Latest news

ஆஸ்திரேலியாவில் ஆபத்தில் உள்ள தபால் ஊழியர்களின் பாதுகாப்பு

Australia Post, பணியில் இருக்கும்போது நெடுஞ்சாலையில் உள்ள தபால் ஊழியர்களுக்கு ஆதரவளிக்குமாறு ஓட்டுநர்களைக் கேட்டுக்கொள்கிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை காலம் காரணமாக, குறிப்பாக டிசம்பரில், தபால் ஊழியர்களின் அதிக...

AI உருவாக்கிய அறிக்கை – நிறுவனத்திற்கு $440,000 அபராதம்

AI ஐப் பயன்படுத்தி ஒரு குறைபாடுள்ள அறிக்கையை தயாரித்ததாக ஒப்புக்கொண்ட பிறகு, ஒப்பந்தப் பணத்திற்கான பகுதியை மத்திய அரசுக்குத் திருப்பித் தர Deloitte ஒப்புக்கொண்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும்...

ஆஸ்திரேலியாவில் பிரபலமாகிவரும் Home Schooling முறை

ஆஸ்திரேலியாவில் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டிலேயே கல்வி கற்பிப்பதையோ அல்லது வீட்டுக்கல்வியையோ தேர்ந்தெடுக்கும் பெற்றோரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் தோராயமாக 4 மில்லியன் மாணவர்களில்...

உலகிலேயே அதிக சூதாட்ட விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அதிகப்படியான சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துமாறு நிபுணர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா உலகின் முன்னணி சூதாட்ட நாடுகளில் ஒன்றாகும், மேலும் சூதாட்டம் வேடிக்கையாகத் தோன்றினாலும், அது பெரும்பாலும் பணத்தையும்,...

மெல்பேர்ணின் EV Charging பிரச்சனைக்கான தீர்வுகள்

மெல்பேர்ணின் Merri- bek பகுதியில் மின்சார (EV) வாகனங்களை சார்ஜ் செய்வதில் பலருக்கு இருக்கும் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. Merri- bek நகர சபை,  Vehicle Charging Solutions...

வேகமாக வளர்ந்து வரும் விக்டோரியாவின் மக்கள் தொகையை விட சிறைச்சாலை மக்கள் தொகை

விக்டோரியாவில் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை, மாநிலத்தின் மக்கள்தொகை வளர்ச்சியை விட வேகமாக அதிகரித்து வருவதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 20 வருட காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை...