Brisbaneபிரிஸ்பேன் பள்ளி அருகே பயங்கர கத்திக்குத்து

பிரிஸ்பேன் பள்ளி அருகே பயங்கர கத்திக்குத்து

-

பிரிஸ்பேனுக்கு தெற்கே உள்ள பள்ளி ஒன்றிற்கு அருகே நடந்த கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இன்று பிற்பகல் 2.30 மணியளவில் அகாசியா ரிட்ஜில் உள்ள கிரிகோரி மற்றும் ரொட்சே வீதி சந்திப்பில் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டதாக அவசர சேவைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒருவர் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் இடம்பெற்ற இடத்தில் இருந்த ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பள்ளி முடிந்து குழந்தைகளை அழைத்துச் செல்வதற்காக பெற்றோர்கள் காத்திருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.

சுமார் ஒரு வாரத்திற்குள் குறித்த பகுதியில் இடம்பெற்ற இரண்டாவது வாள்வெட்டு சம்பவம் இதுவென பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 12.10 மணியளவில் அகாசியா ரிட்ஜில் உள்ள மோர்டிமர் சாலையில் உள்ள பூங்கா ஒன்றில் 22 வயதுடைய நபர் ஒருவர் கத்தியால் குத்தி கொல்லப்பட்டார்.

உயிரிழந்தவரின் 30 வயதுடைய நண்பரும் மரணம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

Latest news

இணையத்தைப் பயன்படுத்தும் குழந்தைகள் குறித்து காவல்துறை சிறப்பு அறிக்கை

ஆன்லைன் பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை 15 பேரை கைது செய்துள்ளது. நியூ சவுத் வேல்ஸ் காவல்துறையினரால் நடத்தப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கையின்...

2026 ஆம் ஆண்டிலிருந்து விக்டோரியர்களுக்கு எளிதாகும் பொதுப் போக்குவரத்து

2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் விக்டோரியாவில் உள்ள அனைத்து streaming ஊடகங்களிலும் tap and go தொழில்நுட்பத்தை செயல்படுத்தப்போவதாக அரசாங்கம் கூறுகிறது. அதன்படி, ரயில் மற்றும் பேருந்து...

240 மில்லியன் டாலர் அபராதம் செலுத்தவுள்ள ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய வங்கி

ஆஸ்திரேலியாவின் முக்கிய வங்கிகளில் ஒன்றான ANZ வங்கி, பல வருட மோசடிக்காக விதிக்கப்பட்ட $240 மில்லியன் அபராதத்தை செலுத்த ஒப்புக்கொண்டுள்ளது. நான்கு தனித்தனி நடவடிக்கைகள் தொடர்பாக ANZ...

ஆஸ்திரேலியா முழுவதும் பாலியல் ரீதியாக பரவும் நோய்கள் பற்றி எச்சரிக்கை

சமீபத்திய தரவுகளின்படி, கடந்த பத்தாண்டுகளில் ஆஸ்திரேலியாவில் syphilis மற்றும் gonorrhea நோயாளிகளின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது. NSW பல்கலைக்கழகத்தில் உள்ள கிர்பி நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி,...

மெல்பேர்ணில் மணிக்கு 225km வேகத்தில் சென்ற மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்

நேற்று காலை மெல்பேர்ணில் மணிக்கு 225 கிலோமீட்டர் வேகத்தில் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மோட்டார் சைக்கிள் ஓட்டுநரின் உரிமத்தை போலீசார் பறிமுதல்...

ஆஸ்திரேலியா முழுவதும் பாலியல் ரீதியாக பரவும் நோய்கள் பற்றி எச்சரிக்கை

சமீபத்திய தரவுகளின்படி, கடந்த பத்தாண்டுகளில் ஆஸ்திரேலியாவில் syphilis மற்றும் gonorrhea நோயாளிகளின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது. NSW பல்கலைக்கழகத்தில் உள்ள கிர்பி நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி,...