Sports27 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தியது பெங்களூரு - IPL 2024

27 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தியது பெங்களூரு – IPL 2024

-

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற பிளே ஓப் சுற்றுக்கு தகுதிபெறும் 4-வது அணியை நிர்ணயிக்கும் போட்டியில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – சென்னை சூப்பர் கிங்ஸ் மோதின.

இந்த போட்டியில் நாணயசுழற்சியில் வென்ற சென்னை அணியின் தலைவர் கெய்க்வாட் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக விராட் கோலி மற்றும் போப் டு பிளெஸ்சிஸ் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் இணைந்து பெங்களூரு அணிக்கு வலுவான அடித்தளம் அமைத்து கொடுத்தனர்.

இருவரும் இணைந்து தொடக்க விக்கெட்டுக்கு 78 ஓட்டங்களை சேர்த்த நிலையில், விராட் கோலி 47 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து டு பிளெஸ்சிஸ் உடன் ரஜத் படிதார் ஜோடி சேர்ந்தார். சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்து அசத்திய டு பிளெஸ்சிஸ் துரதிஷ்டவசமாக ரன் அவுட் ஆனார்.

பின்னர் கை கோர்த்த கேமரூன் கிரீன் – படிதார் இணை சென்னை அணியின் பந்துவீச்சை அடித்து ஆடினர். படிதார் 23 பந்துகளில் 41 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

20 ஓவர்களில் பெங்களூரு 5 விக்கெட்டுகளை இழந்து 218 ஓட்டங்கள் குவித்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக பொப் டு பிளெஸ்சிஸ் 54 ஓட்டங்கள் குவித்தார். சென்னை தரப்பில் அதிகபட்சமாக ஷர்துல் தாக்கூர் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து 219 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி சென்னை அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 191 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது.

அதன்படி 27 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்று பிலே ஓப் சுற்றுக்கு முன்னேறியது.

Latest news

ஆஸ்திரேலியாவில் ஆபத்தில் உள்ள தபால் ஊழியர்களின் பாதுகாப்பு

Australia Post, பணியில் இருக்கும்போது நெடுஞ்சாலையில் உள்ள தபால் ஊழியர்களுக்கு ஆதரவளிக்குமாறு ஓட்டுநர்களைக் கேட்டுக்கொள்கிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை காலம் காரணமாக, குறிப்பாக டிசம்பரில், தபால் ஊழியர்களின் அதிக...

AI உருவாக்கிய அறிக்கை – நிறுவனத்திற்கு $440,000 அபராதம்

AI ஐப் பயன்படுத்தி ஒரு குறைபாடுள்ள அறிக்கையை தயாரித்ததாக ஒப்புக்கொண்ட பிறகு, ஒப்பந்தப் பணத்திற்கான பகுதியை மத்திய அரசுக்குத் திருப்பித் தர Deloitte ஒப்புக்கொண்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும்...

ஆஸ்திரேலியாவில் பிரபலமாகிவரும் Home Schooling முறை

ஆஸ்திரேலியாவில் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டிலேயே கல்வி கற்பிப்பதையோ அல்லது வீட்டுக்கல்வியையோ தேர்ந்தெடுக்கும் பெற்றோரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் தோராயமாக 4 மில்லியன் மாணவர்களில்...

உலகிலேயே அதிக சூதாட்ட விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அதிகப்படியான சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துமாறு நிபுணர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா உலகின் முன்னணி சூதாட்ட நாடுகளில் ஒன்றாகும், மேலும் சூதாட்டம் வேடிக்கையாகத் தோன்றினாலும், அது பெரும்பாலும் பணத்தையும்,...

மெல்பேர்ணின் EV Charging பிரச்சனைக்கான தீர்வுகள்

மெல்பேர்ணின் Merri- bek பகுதியில் மின்சார (EV) வாகனங்களை சார்ஜ் செய்வதில் பலருக்கு இருக்கும் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. Merri- bek நகர சபை,  Vehicle Charging Solutions...

வேகமாக வளர்ந்து வரும் விக்டோரியாவின் மக்கள் தொகையை விட சிறைச்சாலை மக்கள் தொகை

விக்டோரியாவில் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை, மாநிலத்தின் மக்கள்தொகை வளர்ச்சியை விட வேகமாக அதிகரித்து வருவதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 20 வருட காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை...