Sports27 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தியது பெங்களூரு - IPL 2024

27 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தியது பெங்களூரு – IPL 2024

-

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற பிளே ஓப் சுற்றுக்கு தகுதிபெறும் 4-வது அணியை நிர்ணயிக்கும் போட்டியில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – சென்னை சூப்பர் கிங்ஸ் மோதின.

இந்த போட்டியில் நாணயசுழற்சியில் வென்ற சென்னை அணியின் தலைவர் கெய்க்வாட் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக விராட் கோலி மற்றும் போப் டு பிளெஸ்சிஸ் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் இணைந்து பெங்களூரு அணிக்கு வலுவான அடித்தளம் அமைத்து கொடுத்தனர்.

இருவரும் இணைந்து தொடக்க விக்கெட்டுக்கு 78 ஓட்டங்களை சேர்த்த நிலையில், விராட் கோலி 47 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து டு பிளெஸ்சிஸ் உடன் ரஜத் படிதார் ஜோடி சேர்ந்தார். சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்து அசத்திய டு பிளெஸ்சிஸ் துரதிஷ்டவசமாக ரன் அவுட் ஆனார்.

பின்னர் கை கோர்த்த கேமரூன் கிரீன் – படிதார் இணை சென்னை அணியின் பந்துவீச்சை அடித்து ஆடினர். படிதார் 23 பந்துகளில் 41 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

20 ஓவர்களில் பெங்களூரு 5 விக்கெட்டுகளை இழந்து 218 ஓட்டங்கள் குவித்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக பொப் டு பிளெஸ்சிஸ் 54 ஓட்டங்கள் குவித்தார். சென்னை தரப்பில் அதிகபட்சமாக ஷர்துல் தாக்கூர் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து 219 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி சென்னை அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 191 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது.

அதன்படி 27 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்று பிலே ஓப் சுற்றுக்கு முன்னேறியது.

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...