Sportsகடைசி போட்டியில் 214 ரன் குவித்த பஞ்சாப் கிங்ஸ் - IPL...

கடைசி போட்டியில் 214 ரன் குவித்த பஞ்சாப் கிங்ஸ் – IPL 2024

-

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் 214 ஓட்டங்கள் குவித்தது.

நடப்பு ஐபிஎல் தொடரில் தனது கடைசி போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை எதிர்கொண்டது பஞ்சாப் கிங்ஸ் அணி.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பஞ்சாப் முதலில் துடுப்பாடியது. அதர்வா டைத்தே, பிரப்சிம்ரன் சிங் இருவரும் சிக்ஸர், பவுண்டரிகள் என விளாசினார்.

இதன்மூலம் ஜெட் வேகத்தில் பஞ்சாப் அணியின் ஸ்கோர் உயர்ந்தது. டைத்தே 27 பந்துகளில் 2 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 46 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

இந்த கூட்டணி 55 பந்துகளில் 97 ஓட்டங்கள் குவித்தது. பின்னர் வந்த ரோஸோவ் சிக்ஸர்களை பறக்கவிட்டார். இதற்கிடையில் அரைசதம் விளாசிய பிரப்சிம்ரன் சிங் 45 பந்துகளில் 71 ஓட்டங்கள் குவித்து அவுட் ஆனார். அவரது ஸ்கோரில் 4 சிக்ஸர், 7 பவுண்டரிகள் அடங்கும். 

ரோஸோவ் 24 பந்துகளில் 49 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது கம்மின்ஸ் ஓவரில் சமத்திடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதன் பின்னர் களமிறங்கிய ஷஷாங்க் சிங் (2), அஷுடோஷ் (2) அடுத்தடுத்து ஆட்டமிழக்க, ஜித்தேஷ் ஷர்மா 15 பந்துகளில் 2 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 32 ஓட்டங்கள் விளாசினார்.

இதன்மூலம் பஞ்சாப் கிங்ஸ் 214 ஓட்டங்கள் குவித்தது. நடராஜன் 2 விக்கெட்டுகளும், கம்மின்ஸ் மற்றும் வியாஸ்காந்த் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

Latest news

Pocket Money-ஐ சேமிக்கும் குழந்தைகள் – ஆய்வில் தகவல்

ஆஸ்திரேலியாவில் குழந்தைகள் தங்கள் பெற்றோரிடமிருந்து ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான டாலர்களை பாக்கெட் மணியாக சேமித்து வைப்பதாக ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது. இந்த நாட்டில் உள்ள பிள்ளைகள்...

ஆஸ்திரேலியர்களின் முக்கிய கவலைகளில் ஒன்றாக மாறியுள்ள வீட்டுக் காப்பீடு

ஆஸ்திரேலியர்களுக்கு வீட்டுக் காப்பீடு முதன்மையான பிரச்சனையாக மாறியுள்ளது என்று ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது. வீட்டுக் காப்பீட்டு நிறுவனங்களை மாற்றுவதன் மூலம் நூற்றுக்கணக்கான டாலர்களைச் சேமிக்க முடியும்...

ஜெர்மனிக்கு சென்ற விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

இந்தியாவின் மும்பையில் இருந்து ஜெர்மனியின் பிராங்பேர்ட்டுக்கு பயணித்த இந்திய விமானம் வெடிகுண்டு எச்சரிக்கை காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது. விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானத்தின் கழிவறையில் சந்தேகத்திற்கிடமான குறிப்பு கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து,...

கடத்தப்பட்ட விசாரணைக்கு சென்ற போலீஸ் கார்

நியூ சவுத் வேல்ஸின் நரோமைன் பகுதியில் விசாரணைக்கு சென்ற காவல்துறை அதிகாரிகளின் காரை யாரோ திருடிச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து போலீஸ் அதிகாரிகள் விசாரணை...

ஜெர்மனிக்கு சென்ற விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

இந்தியாவின் மும்பையில் இருந்து ஜெர்மனியின் பிராங்பேர்ட்டுக்கு பயணித்த இந்திய விமானம் வெடிகுண்டு எச்சரிக்கை காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது. விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானத்தின் கழிவறையில் சந்தேகத்திற்கிடமான குறிப்பு கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து,...

கடத்தப்பட்ட விசாரணைக்கு சென்ற போலீஸ் கார்

நியூ சவுத் வேல்ஸின் நரோமைன் பகுதியில் விசாரணைக்கு சென்ற காவல்துறை அதிகாரிகளின் காரை யாரோ திருடிச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து போலீஸ் அதிகாரிகள் விசாரணை...