Sportsகடைசி போட்டியில் 214 ரன் குவித்த பஞ்சாப் கிங்ஸ் - IPL...

கடைசி போட்டியில் 214 ரன் குவித்த பஞ்சாப் கிங்ஸ் – IPL 2024

-

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் 214 ஓட்டங்கள் குவித்தது.

நடப்பு ஐபிஎல் தொடரில் தனது கடைசி போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை எதிர்கொண்டது பஞ்சாப் கிங்ஸ் அணி.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பஞ்சாப் முதலில் துடுப்பாடியது. அதர்வா டைத்தே, பிரப்சிம்ரன் சிங் இருவரும் சிக்ஸர், பவுண்டரிகள் என விளாசினார்.

இதன்மூலம் ஜெட் வேகத்தில் பஞ்சாப் அணியின் ஸ்கோர் உயர்ந்தது. டைத்தே 27 பந்துகளில் 2 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 46 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

இந்த கூட்டணி 55 பந்துகளில் 97 ஓட்டங்கள் குவித்தது. பின்னர் வந்த ரோஸோவ் சிக்ஸர்களை பறக்கவிட்டார். இதற்கிடையில் அரைசதம் விளாசிய பிரப்சிம்ரன் சிங் 45 பந்துகளில் 71 ஓட்டங்கள் குவித்து அவுட் ஆனார். அவரது ஸ்கோரில் 4 சிக்ஸர், 7 பவுண்டரிகள் அடங்கும். 

ரோஸோவ் 24 பந்துகளில் 49 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது கம்மின்ஸ் ஓவரில் சமத்திடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதன் பின்னர் களமிறங்கிய ஷஷாங்க் சிங் (2), அஷுடோஷ் (2) அடுத்தடுத்து ஆட்டமிழக்க, ஜித்தேஷ் ஷர்மா 15 பந்துகளில் 2 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 32 ஓட்டங்கள் விளாசினார்.

இதன்மூலம் பஞ்சாப் கிங்ஸ் 214 ஓட்டங்கள் குவித்தது. நடராஜன் 2 விக்கெட்டுகளும், கம்மின்ஸ் மற்றும் வியாஸ்காந்த் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

Latest news

அமெரிக்காவில் இந்திய மாணவர்களின் விசா இரத்து

அமெரிக்காவில் குடியேற்றவிதிகளை ட்ரம்ப் கடுமையாக்கி வருகிறார். சட்ட விரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினரை நாடு கடத்தி வருகிறார். மேலும் மாணவர்களின் போராட்டம் உட்பட பல்வேறு காரணங்களால் வெளிநாட்டு...

பூமி மீது மோதும் விண்கற்கள் – ஆபத்தை தவிர்க்க நாசா புதிய திட்டம்

சூரிய குடும்பத்தில் ஏராளமான விண்கற்கள் இருக்கின்றன. இவற்றில் எது? எப்போது பூமி மீது மோதும் என்பதை கணிக்க முடியாததாக இருக்கிறது. இருப்பினும் இந்த ஆபத்தை தவிர்க்க...

100 மில்லியன் டாலர்களை இழந்த ஆஸ்திரேலியர்கள்

இந்த நீண்ட வார இறுதியில் ஆஸ்திரேலியர்களின் செலவு கடுமையாக அதிகரித்துள்ளது. ஆஸ்திரேலியர்கள் கஃபேக்கள் மற்றும் உணவகங்களுக்குச் செல்வதற்காக கூடுதலாக $98.4 மில்லியன் செலவிடுவதாக ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. தொடர்ந்து 4...

ஆஸ்திரேலியா அடுத்த 5 ஆண்டுகளில் மில்லியன் கணக்கான வீடுகளை இழக்கும்

ஆஸ்திரேலியாவின் தற்போதைய வீட்டுவசதி கட்டுமானக் கொள்கைகள் தொடர்ந்தால், அடுத்த 5 ஆண்டுகளில் ஆஸ்திரேலியா 1.2 மில்லியன் வீடுகளை இழக்கும் என்று கிராட்டன் நிறுவனம் கூறுகிறது. குடியேற்றக் கட்டுப்பாடுகள்...

அடிலெய்டு கடற்கரைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அடிலெய்டு கடற்கரையில் ஒரு பெரிய வெள்ளை சுறா காணப்பட்டதை அடுத்து எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. இந்த கடற்கரையில் 4.5 மீட்டர் நீளமுள்ள பெரிய வெள்ளை சுறா உட்பட பல...

உலக பத்திரிகையில் பிரபலமான கைகளில்லாத பாலஸ்தீன சிறுவன்

இஸ்ரேலிய தாக்குதலால் இரு கைகளையும் இழந்த ஒரு இளம் பாலஸ்தீன சிறுவனின் புகைப்படம் இந்த ஆண்டின் உலக பத்திரிகை புகைப்படமாக கௌரவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகைப்படம் கத்தாரியைச் சேர்ந்த...