Sportsகடைசி போட்டியில் 214 ரன் குவித்த பஞ்சாப் கிங்ஸ் - IPL...

கடைசி போட்டியில் 214 ரன் குவித்த பஞ்சாப் கிங்ஸ் – IPL 2024

-

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் 214 ஓட்டங்கள் குவித்தது.

நடப்பு ஐபிஎல் தொடரில் தனது கடைசி போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை எதிர்கொண்டது பஞ்சாப் கிங்ஸ் அணி.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பஞ்சாப் முதலில் துடுப்பாடியது. அதர்வா டைத்தே, பிரப்சிம்ரன் சிங் இருவரும் சிக்ஸர், பவுண்டரிகள் என விளாசினார்.

இதன்மூலம் ஜெட் வேகத்தில் பஞ்சாப் அணியின் ஸ்கோர் உயர்ந்தது. டைத்தே 27 பந்துகளில் 2 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 46 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

இந்த கூட்டணி 55 பந்துகளில் 97 ஓட்டங்கள் குவித்தது. பின்னர் வந்த ரோஸோவ் சிக்ஸர்களை பறக்கவிட்டார். இதற்கிடையில் அரைசதம் விளாசிய பிரப்சிம்ரன் சிங் 45 பந்துகளில் 71 ஓட்டங்கள் குவித்து அவுட் ஆனார். அவரது ஸ்கோரில் 4 சிக்ஸர், 7 பவுண்டரிகள் அடங்கும். 

ரோஸோவ் 24 பந்துகளில் 49 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது கம்மின்ஸ் ஓவரில் சமத்திடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதன் பின்னர் களமிறங்கிய ஷஷாங்க் சிங் (2), அஷுடோஷ் (2) அடுத்தடுத்து ஆட்டமிழக்க, ஜித்தேஷ் ஷர்மா 15 பந்துகளில் 2 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 32 ஓட்டங்கள் விளாசினார்.

இதன்மூலம் பஞ்சாப் கிங்ஸ் 214 ஓட்டங்கள் குவித்தது. நடராஜன் 2 விக்கெட்டுகளும், கம்மின்ஸ் மற்றும் வியாஸ்காந்த் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

Latest news

விக்டோரியாவில் சொத்து பாதுகாப்பு குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

குற்றப் புள்ளியியல் நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி, கடந்த காலாண்டில் விக்டோரியாவில் குற்றச் சம்பவங்கள் மேலும் அதிகரித்துள்ளன. அதிக குற்ற விகிதங்களைக் கொண்ட பிற பகுதிகள் Yarra...

2025இல் ஆஸ்திரேலியாவில் அதிகம் விற்பனையான வாகனங்கள்

2025 ஆம் ஆண்டுக்குள் ஆஸ்திரேலிய கார் சந்தையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். கார் உரிமையாளர்கள் அதிகளவில் எரிபொருள் திறன் கொண்ட, குறைந்த உமிழ்வு...

ரொபோக்களுக்கு உயிர்கொடுக்கும் மின்னணு தோல்

மனிதர்கள் செய்யும் அனைத்து வேலைகளையுமே தற்போது ரொபோக்களும் செய்ய ஆரம்பித்துவிட்டன. அந்த வகையில் மனிதர்களைப் போலவே ரொபோக்களும் வலி மற்றும் உணர்வுகளை உணர்ந்து எதிர்வினை ஆற்றும் வகையிலான...

“நான் நிரபராதி. நான் ஒரு நல்ல மனிதன்” – நீதிமன்றத்தில் வெனிசுலா அதிபர்

போதைப்பொருள் பயங்கரவாதக் குற்றச்சாட்டுகளில் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ குற்றவாளி அல்ல என்று நீதிமன்றம் ஒன்று தெரிவித்துள்ளது. 63 வயதான மதுரோ, நேற்று காலை நியூயார்க் கூட்டாட்சி...

“நான் நிரபராதி. நான் ஒரு நல்ல மனிதன்” – நீதிமன்றத்தில் வெனிசுலா அதிபர்

போதைப்பொருள் பயங்கரவாதக் குற்றச்சாட்டுகளில் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ குற்றவாளி அல்ல என்று நீதிமன்றம் ஒன்று தெரிவித்துள்ளது. 63 வயதான மதுரோ, நேற்று காலை நியூயார்க் கூட்டாட்சி...

சிட்னியின் மேற்கில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட பின் ஒருவர் மரணம்

சிட்னியின் மேற்கு Homebush பகுதியில், குடும்ப வன்முறை புகாரைத் தொடர்ந்து கைது செய்யச் சென்றபோது, ​​காவல்துறையினரால் மிளகு தெளிக்கப்பட்டதில் 52 வயது நபர் உயிரிழந்தார். இந்த சம்பவம்...