Sportsஐதராபாத்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது கொல்கத்தா - IPL 2024

ஐதராபாத்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது கொல்கத்தா – IPL 2024

-

அகமதாபாத்தில் நடைபெற்ற முதலாவது தகுதி சுற்றுப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இந்நிலையில் இதில் நாணயசுழற்சியில் வென்ற ஐதராபாத் அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கியது.

இதன்படி ஐதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா அகியோர் களம் இறங்கினர். இதில் ஹெட் 0 ஓட்டம், அபிஷேக் சர்மா 3 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தனர். இதையடுத்து களம் இறங்கிய ராகுல் திரிபாதி ஒருபுறம் நிலைத்து நின்று ஆடினார்.

மறுபுறம் களம் இறங்கிய நிதிஷ் ரெட்டி 9 ஓட்டங்கள், ஷபாஸ் அகமது 0 , ஹென்றிச் க்ளாசென் 32 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தனர். இதையடுத்து அப்துல் சமத் களம் புகுந்தார். மறுபுறம் நிலைத்து நின்று ஆடிய திரிபாதி அரைசதம் அடித்த நிலையில் 55 ஓட்டங்கள் எடுத்திருந்த போது ரன் அவுட் ஆனார். இதையடுத்து இம்பேக்ட் வீரராக களம் புகுந்த சன்வீர் சிங் டக் அவுட் ஆனார்.

இதையடுத்து அப்துல் சமத் உடன் கம்மின்ஸ் ஜோடி சேர்ந்தார். இறுதியில் ஐதராபாத் அணி 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 159 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.

ஐதராபாத் தரப்பில் அதிகபட்சமாக ராகுல் திரிபாதி 55 ஓட்டங்கள் எடுத்தார். கொல்கத்தா தரப்பில் ஸ்டார்க் 3 விக்கெட் வீழ்த்தினார்.

இதையடுத்து 160 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி 13.4 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகள் மாத்திரம் இழந்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் 164 ஓட்டங்களைப் பெற்று வெற்றிப் பெற்றது.

அதன்படி 2024 ஐ.பி.எல் தொடரில் முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு கொல்கத்தா அணி முன்னேறியது.

Latest news

வெளிநாட்டு குடியேற்றவாசிகளால் 27 மில்லியனைத் தாண்டியுள்ள மக்கள் தொகை

ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகை 27 மில்லியனைத் தாண்டியுள்ளது. ஆஸ்திரேலிய புள்ளியியல் அலுவலகத்தின் சமீபத்திய தரவுகளின்படி, ஆஸ்திரேலியாவின் மக்கள்தொகை இந்த ஆண்டு அதிகாரப்பூர்வமாக 27 மில்லியனைத் தாண்டியுள்ளது. மேலும்...

ஆஸ்திரேலியாவில் ஒரு குழுவிற்கு எரிபொருள் தள்ளுபடி

மேற்கு ஆஸ்திரேலியாவில் வாழ்க்கைச் செலவு பிரச்சனைகளால் அவதிப்படும் மூத்த குடிமக்களுக்கு எரிபொருள் தள்ளுபடி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மாநில அரசு அறிமுகப்படுத்திய திட்டத்தின்படி, ஆயிரக்கணக்கான மூத்த குடிமக்கள் United...

ஆஸ்திரேலியர்களுக்கான நிவாரணத் தொகைக்கு நாடாளுமன்ற ஒப்புதல்

Parental Leave  எடுத்துள்ள பெற்றோருக்கு ஜூலை 2025 முதல் ஓய்வூதியம் வழங்குவதற்கான முன்மொழிவுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இதனால், Parental Leave எடுத்த பெற்றோருக்கு வழங்கப்படும் தொகையில்...

வேலையில் மகிழ்ச்சியின்றி இருக்கும் பெரும்பாலான ஆஸ்திரேலியர்கள்

ஆஸ்திரேலியாவின் பணியாளர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் தங்கள் வேலைகளில் மகிழ்ச்சியடையவில்லை என்று புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. வேலைவாய்ப்பு இணையதளம் SEEK வெளியிட்டுள்ள புதிய ஆய்வு அறிக்கை, ஆஸ்திரேலிய...

வேலையில் மகிழ்ச்சியின்றி இருக்கும் பெரும்பாலான ஆஸ்திரேலியர்கள்

ஆஸ்திரேலியாவின் பணியாளர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் தங்கள் வேலைகளில் மகிழ்ச்சியடையவில்லை என்று புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. வேலைவாய்ப்பு இணையதளம் SEEK வெளியிட்டுள்ள புதிய ஆய்வு அறிக்கை, ஆஸ்திரேலிய...

வரும் நாட்களில் மெல்போர்ன் மற்றும் சிட்னி போராட்டங்கள் நடைபெறும் என எச்சரிக்கை

மெல்பேர்ண் மற்றும் சிட்னியில் போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கும் போராட்டங்கள் வரும் நாட்களில் தொடரலாம் என்று கட்டுமான, வனத்துறை மற்றும் கடல்சார் தொழிலாளர் சங்கம் (CFMEU) எச்சரித்துள்ளது. வேலையில்...