Newsகத்திக்குத்து குற்றங்களை தடுக்க புதிய சட்டம் இயற்றத் திட்டம்

கத்திக்குத்து குற்றங்களை தடுக்க புதிய சட்டம் இயற்றத் திட்டம்

-

அவுஸ்திரேலியாவின் மாநில அரசாங்கங்கள் கத்திகள் அல்லது உலோகக் கூரிய ஆயுதங்களை எடுத்துச் செல்பவர்களைச் சோதனை செய்வது தொடர்பான புதிய சட்டங்களை இயற்றத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அவற்றுள், நியூ சவுத் வேல்ஸ் மாநிலம் தற்போது சில பொது இடங்களில் கத்திகள் மற்றும் உலோகக் கூரிய ஆயுதங்களை ஏந்தியவர்களை வாரண்ட் இன்றி சோதனையிட சட்டப்பூர்வ அனுமதி பெற்றுள்ளது.

உலோகப் பொருள்களைக் கண்டறிய ஸ்கேனிங் கருவிகளைப் பயன்படுத்த மாநில காவல்துறைக்கும் சட்டப்பூர்வ அனுமதி உள்ளது என்பது சிறப்பு.

இரட்டை முனைகள் கொண்ட கத்திகள், வாள்கள் போன்ற கூர்மையான ஆயுதங்களை வைத்திருந்தால் 14 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

நியூ சவுத் வேல்ஸ் பிரதமர் கிறிஸ் மினாஸ், கடந்த காலங்களில் காணப்பட்ட கொடூரமான கத்திக் குத்துச் சம்பவங்களைத் தடுப்பதற்காக இந்தப் புதிய சட்டங்கள் ஏற்படுத்தப்பட்டதாகக் கூறினார்.

தடை செய்யப்பட்ட கத்திகளை வாங்குவதற்கும் பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கவும், பொது இடங்களில் அவற்றை எடுத்துச் செல்வதைத் தடுக்கவும் மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இளைஞர்கள் மத்தியில் கத்திகள் மற்றும் கூரிய ஆயுதங்களின் பாவனையை குறைப்பதற்கும் வாள்வெட்டு தொடர்பான குற்றச்செயல்களை குறைப்பதற்கும் புதிய சட்டங்களை கொண்டு வருவதன் நோக்கம் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு – ஆஸ்திரேலிய விமான போக்குவரத்துக்கு எச்சரிக்கை

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, வானில் சுமார் 2 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் பரவியதை அடுத்து, ஆஸ்திரேலியாவில் விமானப் போக்குவரத்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் ஜாவா...

Ai சொல்வதையெல்லாம் உண்மையென்று நம்பக்கூடாது – சுந்தா் பிச்சை

செயற்கை நுண்ணறிவு (AI) செயலிகள் சொல்வதையெல்லாம் மக்கள் “கண்மூடித்தனமாக நம்பக் கூடாது” என்று கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டின் தலைமை செயல் அதிகாரி சுந்தா் பிச்சை...

ஜப்பானில் பாரிய தீ விபத்து – 170 வீடுகள் தீக்கிரை

ஜப்பானில் உள்ள ஓய்டா நகரில் சுமார் 170 வீடுகள் தீ பற்றி எரிந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். துறைமுகத்தில் பரவிய தீ அருகில் இருந்து வீடுகளுக்கும் பரவியதாக முதற்கட்ட...

ஆண்டுக்கு ஒரு பில்லியன் டாலர்களுக்கு மேல் வீணாக்கும் ஆஸ்திரேலிய பொது மருத்துவமனைகள்

ஆஸ்திரேலியாவில் உள்ள பொது மருத்துவமனைகள் ஆண்டுக்கு $1.2 பில்லியன் வீணாக்குவதாக ஒரு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. Grattan Institute அறிக்கை, பொது மருத்துவமனைகள் தேவையற்ற நீண்ட மருத்துவமனை தங்குதல்...

சிட்னியில் சாலையை கடக்கும்போது கார் மோதி பலியான கர்ப்பிணிப் பெண்

ஆஸ்திரேலியாவில், சாலையைக் கடக்கும்போது கார் மோதி பலியானார் இந்தியப் பெண்ணொருவர். கூடுதல் சோகம் என்னவென்றால், அவர் எட்டு மாத கர்ப்பிணி! கடந்த வெள்ளிக்கிழமை, அதாவது, நவம்பர் மாதம்...

சமூக ஊடகத் தடை நெருங்கி வருவதால் Meta விடுத்துள்ள எச்சரிக்கை

சமூக ஊடகத் தடை நெருங்கி வருவதால் Meta, லட்சக்கணக்கான ஆஸ்திரேலிய இளைஞர்களுக்கு Instagram, Facebook மற்றும் Threads-இல் இருந்து தங்கள் தரவை "download or delete"...