Newsபள்ளிக்கு செல்ல மறுக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம்

பள்ளிக்கு செல்ல மறுக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம்

-

ஆஸ்திரேலியாவில் பள்ளிக்கு செல்ல மறுக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் வெளியான செனட் அறிக்கைகள், கோவிட் தொற்றுநோய்க்குப் பிறகு பள்ளிக்குச் செல்ல மறுக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகக் காட்டுகின்றன.

இந்நிலைமையை கட்டுப்படுத்தும் வகையில் எதிர்வரும் 12 மாதங்களுக்குள் கல்வித்துறையை மேம்படுத்தும் தேசிய செயற்திட்டமொன்றை தயாரிப்பதில் கல்வி அதிகாரிகளின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் கல்வி அமைப்பில் சேரும் குழந்தைகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது, ​​ஆயிரக்கணக்கான குழந்தைகள் தங்கள் கல்வியை முடிக்கும் முன்பே பள்ளியை விட்டு வெளியேறுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு குழந்தைக்கும் அடிப்படைக் கல்வியை வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக இந்நாட்டின் கல்வியாளர்கள் சுட்டிக்காட்டுவதுடன், கல்வி முறையை கைவிடும் பிள்ளைகளுக்கு மாற்றுக் கல்விச் சூழலை உருவாக்குவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

Latest news

பெருங்குடல் புற்றுநோய்க்கு மருந்து தயார் – ரஷ்யா அறிவிப்பு

பெருங்குடல் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசி பயன்பாட்டுக்கு தயார் நிலையில் உள்ளதாக ரஷ்யாவின் மத்திய மருந்து மற்றும் உயிரியல் முகவரக அமைப்பு தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி...

கோலாக்களைப் பாதுகாக்கும் அரசாங்கத் திட்டத்தை எதிர்க்கும் மரத்தொழில் குழுக்கள்

ஆஸ்திரேலியாவின் கோலாக்களை அழிவிலிருந்து பாதுகாக்கும் அரசாங்கத்தின் திட்டம் மரத் தொழில் குழுக்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. நியூ சவுத் வேல்ஸில் Great Koala தேசிய பூங்கா என்ற பெரிய...

சர்வதேச கவனத்தை ஈர்த்த காளான் கொலையாளி வழக்கின் இறுதித் தீர்ப்பு

சர்வதேச கவனத்தை ஈர்த்த காளான் கொலையாளி Erin Patterson வழக்கின் இறுதித் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விஷக் காளான்கள் கலந்த உணவை அளித்து...

பெரும் நிதி நெருக்கடியை எதிர்கொள்ளும் Woolworths மற்றும் Coles

நீதிமன்றத் தீர்ப்பைப் பெற்ற பிறகு, Woolworths மற்றும் Coles நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்கள் புதுப்பித்தல் செலவுகளைப் பதிவு செய்துள்ளன. 30,000 ஊழியர்களுக்கு சம்பளம் குறைவாக வழங்குவது தொடர்பாக...

மல்லிகைப்பூவால் விமான பயணத்தின் போது சிக்கலில் சிக்கிய பிரபல இந்திய நடிகை

நடிகை நவ்யா நாயர் விமானத்தில் மல்லிகைப்பூவை எடுத்துச் சென்றதால் ஆஸ்திரேலியாவில் அவருக்கு 125,000 ரூபாய் (இந்திய மதிப்பில்) அபராதம் விதிக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவின், விக்டோரியா நகரில் நடைபெற்ற ஓணம்...

பெர்த்தில் ஒரு பணியிட சம்பவத்தில் 40 வயதுடைய நபர் படுகாயம்

பெர்த்தின் வடகிழக்கில் நடந்த ஒரு பணியிட சம்பவத்தில் 40 வயதுடையவர் என்று கருதப்படும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். நேற்று மதியம் Bassendean-இல் உள்ள ஆலிஸ் தெருவில் நடந்த இடத்திற்கு...