Newsவரவிருக்கும் வார இறுதி நாட்களின் வானிலை பற்றி சிறப்பு அறிவிப்பு

வரவிருக்கும் வார இறுதி நாட்களின் வானிலை பற்றி சிறப்பு அறிவிப்பு

-

வரும் வார இறுதியில் ஆஸ்திரேலியாவின் பல பகுதிகளில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

வார இறுதியில் 80 வீதமான பகுதிகளில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிக்கைகளின்படி, எதிர்வரும் வெள்ளிக்கிழமை சிட்னியில் ஆரம்பிக்கும் மழை அடுத்த வாரம் திங்கட்கிழமை வரை நீடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

வியாழன் அன்று மெல்போர்ன் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மழை தொடங்கி ஞாயிறு வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தெற்கு ஆஸ்திரேலியாவின் தலைநகரான அடிலெய்டைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வியாழக்கிழமை மழை தொடங்கி திங்கள் வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரிஸ்பேனில் இன்று முதல் மழை தொடங்கும் என்றும் ஈரமான வானிலை வாரம் முழுவதும் தொடரும் என்றும் கூறப்படுகிறது.

சில பகுதிகளில் மணிக்கு 40 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் அவுஸ்திரேலியர்கள் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Latest news

2026 முதல் விக்டோரியாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வார இறுதிப் பயணங்கள்

விக்டோரியா மாநிலம் அடுத்த ஆண்டு முதல் மாற்றுத்திறனாளிகளுக்கு வார இறுதி நாட்களில் இலவச பொதுப் போக்குவரத்து சேவைகளை வழங்க திட்டமிட்டுள்ளது. இந்த திட்டம் "Fairer Fares for...

ஹொங்கொங், சிங்கப்பூரில் வேகமடையும் கொரோனா புதிய அலை

ஆசிய நாடுகளில் கொரோனா புதிய அலை பரவிவரும் நிலையில் ஹொங்கொங் மற்றும் சிங்கப்பூரில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 2019-ல் சீனாவில் தோன்றிய கொரோனா...

NSW நெடுஞ்சாலையில் நூற்றுக்கணக்கான கார்களை சேதப்படுத்திய உலோகத் துண்டுகள்

நியூ சவுத் வேல்ஸில் உள்ள ஒரு பெரிய சாலையில் சுமார் 840 கிலோகிராம் உலோகத் துண்டுகளை ஒரு லாரி கொட்டியதில், 300க்கும் மேற்பட்ட கார்களின் டயர்கள்...

NSW நெடுஞ்சாலையில் நடந்த பயங்கர விபத்து – இருவர் உயிரிழப்பு 

NSW தூர தெற்கு கடற்கரையில் நடந்த ஒரு பயங்கர நெடுஞ்சாலை விபத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். இன்று பிற்பகல் 1.45 மணியளவில் Eden பகுதியில் உள்ள Princes...

பிரிஸ்பேர்ணில் ஐ.நா. அமைதி காக்கும் பயிற்சி மையத்தைத் தொடங்கியது ஆஸ்திரேலியா

பசிபிக் தீவு காவல்துறையினரை ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் படையினராக மாற்றுவதற்கு பயிற்சி அளிக்கும் உலகின் முதல் திட்டத்தை ஆஸ்திரேலியா தொடங்கியுள்ளது. ஆஸ்திரேலியா வெறும் அண்டை...

சிட்னி துறைமுகத்தில் பயணக் கப்பலின் நங்கூரமிடும் கயிறில் ஏறிய நபர்

சிட்னி துறைமுகத்தில் ஒரு பயணக் கப்பலின் நங்கூரமிடும் கயிறுகளில் ஏறிய ஒரு நபரை பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று பிற்பகல் 3 மணியளவில், Carnival Adventure பயணக் கப்பலை...