Newsவாகன விபத்து இறப்புகளை குறைக்க மத்திய அரசின் புதிய திட்டம்

வாகன விபத்து இறப்புகளை குறைக்க மத்திய அரசின் புதிய திட்டம்

-

2030ஆம் ஆண்டுக்குள், ஆஸ்திரேலியாவில் சாலை மரணங்களின் எண்ணிக்கையை 50 சதவீதம் குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

அதற்காக மாநிலங்கள் மற்றும் பிரதேசங்களுக்கு நிதியுதவி வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

விபத்துகளைக் குறைக்க நிபுணர்களின் உதவியைப் பெறுவது அரசாங்கத்தின் பொறுப்பு என்று ஆஸ்திரேலியா ஆட்டோ மொபில் நிர்வாக இயக்குநர் மைக்கேல் பிராட்லி கூறுகிறார்.

சாலை விபத்துகளில் கவனம் செலுத்தும் மெல்போர்ன் பல்கலைக்கழகத்தின் நகர்ப்புற போக்குவரத்து மற்றும் பொது சுகாதார பேராசிரியர் மார்க் ஸ்டீபன்சன், அதிக எண்ணிக்கையிலான விபத்துகளுக்கு வேகமே காரணம் என்று கூறினார்.

இது தொடர்பாக சுமார் ஆயிரம் சாரதிகளின் தரவுகள் பெறப்பட்டு வேகத்தை மட்டுப்படுத்துமாறு அறிவுறுத்தல் வழங்கினாலும் அது நடக்கவில்லை என தெரியவந்துள்ளது.

சாரதிகளின் சோர்வு, அதீத வேகம், மதுபானம் மற்றும் போதைப்பொருள் பாவனையால் பல வீதி விபத்துக்கள் ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்த காரணங்களைக் குறைப்பதன் மூலம் அரசாங்கத்தின் இலக்குகளை எட்ட முடியும் என பேராசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Latest news

$1 மில்லியன் ரொக்கப் பரிசை வழங்கவுள்ள விக்டோரியா காவல்துறை

விக்டோரியா காவல்துறை ஒரு மில்லியன் டாலர் ரொக்கப் பரிசை வழங்கத் தயாராகி வருகிறது. 27 ஆண்டுகளுக்கு முன்பு வடக்கு மெல்போர்னில் இறந்த கியானி "ஜான்" ஃபர்லானின் கொலை...

சுகாதார காப்பீட்டை வேண்டாம் என்று கூறும் மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள்

நாட்டில் காப்பீட்டு பிரீமிய விலைகள் அதிகரித்து வருவதால், இந்த ஆண்டு மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் தங்கள் தனியார் சுகாதார காப்பீட்டை ரத்து செய்யத் தயாராகி வருவதாக...

ஆஸ்திரேலியாவில் வாழ்க்கைச் செலவு ஏன் அதிகரித்து வருகிறது?

நாட்டின் வாழ்க்கைச் செலவு நெருக்கடிக்கு வட்டி விகிதங்கள் உயர்வு காரணமல்ல என்று முன்னாள் பெடரல் ரிசர்வ் வங்கித் தலைவர் பிலிப் லோவ் கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவில் பல பொருளாதார...

விக்டோரியாவில் அதிகம் இடம்பெறும் புகையிலை தொடர்பான குற்றங்கள்

ஆஸ்திரேலியா முழுவதும் புகையிலை உற்பத்தித் துறையை அடிப்படையாகக் கொண்ட குற்றச் செயல்களில் அதிகரிப்பு உள்ளது. இத்தகைய குற்றச் செயல்கள் விக்டோரியா மாநிலத்தில் அதிகமாக நடப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. கடந்த...

மெல்பேர்ணில் உள்ள ஒரு தேவாலயத்தில் சந்தேகத்திற்கிடமான தீ விபத்து

மெல்பேர்ணில் உள்ள ஒரு தேவாலயத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அங்கு குடியேற்றவாசிகள் குழு வசித்து வருவதாக சந்தேகிக்கப்படுகிறது. தெற்கு மெல்பேர்ணில் உள்ள பார்க் தெருவில் உள்ள...

சுகாதார காப்பீட்டை வேண்டாம் என்று கூறும் மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள்

நாட்டில் காப்பீட்டு பிரீமிய விலைகள் அதிகரித்து வருவதால், இந்த ஆண்டு மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் தங்கள் தனியார் சுகாதார காப்பீட்டை ரத்து செய்யத் தயாராகி வருவதாக...