Newsபல கோடி மக்களால் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட “All eyes on...

பல கோடி மக்களால் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட “All eyes on Rafah” புகைப்படம்

-

AI தொழில்நுட்ப உதவியுடன் உருவாக்கப்பட்ட “All eyes on Rafah” என்ற காசா ஆதரவு வாசகம் கொண்ட புகைப்படம் சமூகவலைதளங்களில் 4.4 கோடிக்கும் அதிகமான முறை பகிரப்பட்டு கவனம் பெற்றுள்ளது.

2023 ஒக்டோபர் 7 முதல் காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 36,171 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 81,136 பேர் காயமடைந்துள்ளனர். இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,139 ஆக உள்ளதுடன் பலர் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.

வடக்கு, மத்திய காசாவில் தனது தாக்குதலை முழு வீச்சில் நடத்திய இஸ்ரேல் இப்போது தெற்கு காசாவைக் குறிவைத்துள்ளது. தெற்கு காசாவின் ரஃபா பகுதியில் தான் தாக்குதல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தெற்கு காசாவில் உள்ள ரஃபா நகரத்தில் தற்காலிக முகாம்கள் மீது இஸ்ரேல் படைகள் ஞாயிற்றுக்கிழமை (மே 26) குண்டு வீசி தாக்குதல் நடத்தின. இதில், பெண்கள், குழந்தைகள் உட்பட 45 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாகவும், 249 பேர் காயமடைந்ததாகவும் காசாவில் உள்ள சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.

இது குறித்து ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், “இந்த கொடூர மோதலில் இருந்து தங்களை காத்துக் கொள்ளும் வகையில் தஞ்சம் புகுந்த அப்பாவி மக்களின் உயிரை பலி வாங்கிய இஸ்ரேலின் தாக்குதல் நடவடிக்கையை நான் கடுமையாக கண்டிக்கிறேன். காசாவில் பாதுகாப்பான இடம் ஏதும் இல்லை. இந்தக் கொடூரம் நிறுத்தப்பட வேண்டும்” என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், காசா நகரில் நடைபெற்று வரும் படுகொலையை கண்டிக்கும் வகையில், “ஓல் ஐஸ் ஒன் ரஃபா” என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டானது. அதேபோல் ஏஐ தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்ட “ஓல் ஐஸ் ஒன் ரஃபா” புகைப்படமும் வேகமாகப் பரவியது. இஸ்டாகிராமில் இதுவரை 4.4 கோடிக்கும் அதிகமான முறை பகிரப்பட்டுள்ளது.

அந்தப் புகைப்படத்தில் மிக நெருக்கமாக அமைந்துள்ள தற்காலிக கூடாரங்கள் இடம்பெற்றுள்ளன. பாலைவனப் பின்னணியில், மலைகளுக்கு இடையே தற்காலிகக் கூடாரங்களில் இருக்கும் பாலஸ்தீனர்களின் துயரமான நிலையை எடுத்துரைப்பது போல் அந்தப் படம் அமைந்தது.

இந்தப் படத்தை பாலஸ்தீன பின்புலம் கொண்ட அமெரிக்க நடிகர் பெட்ரோ பாஸ்கல், மாடல்கள் பெல்லா, கிகி ஹாடிட், பிரான்ஸ் நாட்டு கால்பந்து வீரர் ஓஸ்மானே டெம்பேல் ஆகியோர் தங்கள் இன்ஸ்டா பக்கங்களில் பகிர்ந்திருந்தனர். ட்விட்டரில் இந்த் ஹேஷ்டேக் 2.75 கோடி முறைக்கு மேல் பகிரப்பட்டுள்ளது.

இந்நிலையில் இஸ்ரேல் தரப்போ ஹமாஸ் அமைப்பின் மிக முக்கியப் புள்ளிகளான இருவரைக் கொலை செய்யவே தாக்குதல் நடத்தப்பட்டதாகவும். அந்த இலக்கை எட்டியதாகவும் தெரிவித்துள்ளது.

Latest news

விக்டோரியாவில் குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க புதிய வழி

விக்டோரியா மாநிலத்தில் பல்வேறு குற்றச்செயல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கும் புதிய முறையை அம்மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. விக்டோரியாவில் குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இப்போது ஆன்லைனில் $85,000 வரை...

கிறிஸ்துமஸ் நேரத்தில் ஆஸ்திரேலியா முழுவதும் ஆயிரக்கணக்கான புதிய வேலைகள்

ஆஸ்திரேலியாவின் வேலையின்மை விகிதம் 4.2 சதவீதத்திலிருந்து 4.1 சதவீதமாகக் குறைந்துள்ளது. ஆஸ்திரேலிய புள்ளியியல் அலுவலகம் நேற்று வெளியிட்ட சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த மாதம் மட்டும் சுமார் 65,000...

விக்டோரியாவில் இன்று இடியுடன் கூடிய மழை மற்றும் பனி பொழியும்

இன்று விக்டோரியாவில் இடியுடன் கூடிய மழை மற்றும் பனி முன்னறிவிப்பு விக்டோரியாவில் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம்...

இன்று ஆஸ்திரேலியா வந்துள்ள மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமிலா

மன்னர் மூன்றாம் சார்லஸ் மற்றும் ராணி கமிலா இன்று ஆஸ்திரேலியா வந்துள்ளனர். முடிசூட்டு விழாவுக்குப் பிறகு அவர்களின் முதல் பெரிய வெளிநாட்டுப் பயணம் இதுவாகும், மேலும் அரச...

புதிய விண்வெளி பயணத்திற்கு தயாராகும் தெற்கு ஆஸ்திரேலியா

தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள கூனிபா சோதனை மைதானத்தில் இருந்து முதல் விண்வெளி ராக்கெட்டை ஏவுவதற்கான ஒப்பந்தத்தில் சதர்ன் லாஞ்ச் கையெழுத்திட்டுள்ளது. உத்தேச புதிய திட்டம் குறித்து மத்திய...

சிட்னி துறைமுக பாலத்தில் ஏற்பட்ட பயங்கர விபத்து – இருவர் உயிரிழப்பு

சிட்னி துறைமுக பாலத்தில் சிறிது நேரத்திற்கு முன் வாகனங்கள் அடுத்தடுத்து மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர். பிற்பகல் 1.40 மணியளவில் மூன்று கார்களும் பஸ்ஸொன்றும் மோதிக்கொண்டதில் இந்த...