News49 பெண்களை கொன்று பன்றிகளுக்கு உணவாக்கிய கொடூர நபர்

49 பெண்களை கொன்று பன்றிகளுக்கு உணவாக்கிய கொடூர நபர்

-

கனடாவை சேர்ந்த நபரொருவர் கடந்த 1990 முதல் 2000 ஆண்டு தொடக்கம் வரையில் கனடாவின் வான்கூவர் அருகே பல எண்ணிக்கையிலான பெண்களை தமது பன்றி பண்ணைக்கு அழைத்துச் சென்று படுகொலை செய்துள்ளதுடன், உடல் பாகங்களை பன்றிகளுக்கு உணவாக்கியுள்ளார்.

இந்த வழக்குகளில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த Robert Pickton மே 19ம் திகதி சக கைதிகளால் தாக்கப்பட்டு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

ராபர்ட் பிக்டன் 6 கொலை வழக்கில் குற்றவாளி என நிரூபணமான நிலையில் கடந்த 2007ல் ஆயுள் தண்டனைக்கு விதிக்கப்பட்டார். 26 பெண்களை கொலை செய்துள்ளதாக அவர் மீது வழக்கு பதியப்பட்டிருந்த நிலையில், 6 கொலைகளில் மட்டும் அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமாகியுள்ளது.

சுமார் 22 ஆண்டுகளுக்கு முன்னர் வான்கூவர் புறநகர் பகுதியில் டசின் கணக்கான பெண்கள் திடீரென்று மாயமான சம்பவம் தொடர்பில் ராபர்ட் பிக்டனின் பண்ணையில் பொலிசார் தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த பன்றி பண்ணையில் இருந்து 33 பெண்களின் உடல் பாகங்கள் அல்லது DND மாதிரிகள் கண்டெடுக்கப்பட்டது. ஒருமுறை பொலிஸ் அதிகாரி என தெரியாமல் 49 பெண்களை கொன்றுள்ளதாக ராபர்ட் பிக்டன் உளறியுள்ளார்.

மட்டுமின்றி, பண்ணையில் நடந்த சம்பவங்களை நேரில் பார்த்த நபர் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்துள்ளார். ராபர்ட் பிக்டன் விவகாரத்தில் வான்கூவர் பொலிசார் உரிய விசாரணை முன்னெடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது.

மாயமான பெரும்பாலான பெண்கள் பாலியல் தொழில் செய்பவர்கள் அல்லது போதை மருந்துக்கு அடிமையானவர்கள் என்பதால் இந்த மெத்தனம் என்றும் கூறப்பட்டது.

ராபர்ட் பிக்டன் இதுவரை 49 பெண்களை கொன்று பன்றிகளுக்கு உணவாக்கியதாக கூறியிருந்தாலும், 6 வழக்குகள் மட்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதுடன் 25 ஆண்டுகளுக்கு பிணையும் மறுக்கப்பட்டது.

Latest news

ஆஸ்திரேலிய பல்கலைக்கழக மாணவர்கள் மீது அறிமுகமாகும் புதிய சட்டங்கள்

புதிய போராட்டக் கட்டுப்பாடுகள் மாணவர்களின் போராட்ட உரிமைகளை மீறுவதாகக் கூறி, ஆஸ்திரேலியா முழுவதும் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டங்களைத் தொடங்கியுள்ளனர். இந்தச் சட்டங்கள் தங்கள் கருத்துச் சுதந்திரத்தைப் பறிப்பதாக...

உலகிலேயே அதிக புகார்களைக் கொண்ட கடற்கரைகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா அதன் அழகிய கடற்கரைகளுக்கு உலகப் புகழ் பெற்றிருந்தாலும், பல்வேறு தவறான காரணங்களுக்காக உலகில் அதிகம் புகார் செய்யப்படும் 20 கடற்கரைகளில் இதுவும் ஒன்றாக சேர்க்கப்பட்டுள்ளது. கூட்ட...

ஆஸ்திரேலியாவில் குழந்தையை துஷ்பிரயோகம் செய்ததாக பெண் கைது

தன்னுடன் பணிபுரிந்த 18 வயதுக்குட்பட்ட சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த 29 வயது பெண் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். சட்டவிரோதமானது என்று தெரிந்திருந்தும், அந்தப் பெண் சிறுவனுடன் பாலியல்...

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 2 மில்லியன் டாலர் நிதியுதவி

தெற்கு ஆஸ்திரேலியாவின் வறட்சியால் பாதிக்கப்பட்ட மத்திய-வடக்கு பிராந்தியத்தில் உள்ள Fischer-iல் உள்ள ஒரு பண்ணையை பிரதமர் அந்தோணி அல்பானீஸ் பார்வையிட்டு, விவசாயிகளுக்கு கூடுதலாக 2 மில்லியன்...

உலகிலேயே அதிக புகார்களைக் கொண்ட கடற்கரைகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா அதன் அழகிய கடற்கரைகளுக்கு உலகப் புகழ் பெற்றிருந்தாலும், பல்வேறு தவறான காரணங்களுக்காக உலகில் அதிகம் புகார் செய்யப்படும் 20 கடற்கரைகளில் இதுவும் ஒன்றாக சேர்க்கப்பட்டுள்ளது. கூட்ட...

ஆஸ்திரேலியாவில் குழந்தையை துஷ்பிரயோகம் செய்ததாக பெண் கைது

தன்னுடன் பணிபுரிந்த 18 வயதுக்குட்பட்ட சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த 29 வயது பெண் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். சட்டவிரோதமானது என்று தெரிந்திருந்தும், அந்தப் பெண் சிறுவனுடன் பாலியல்...