Newsமுறியடிக்கப்பட்ட பாரிஸ் ஒலிம்பிக் தீவிரவாத தாக்குதல் திட்டம்

முறியடிக்கப்பட்ட பாரிஸ் ஒலிம்பிக் தீவிரவாத தாக்குதல் திட்டம்

-

2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் கால்பந்து மைதானத்தில் தீவிரவாத தாக்குதலை நடத்த திட்டமிட்ட 18 வயது இளைஞனை பிரான்ஸ் பாதுகாப்பு படையினர் Saint-Etienne இல் கைது செய்துள்ளனர்.

இஸ்லாமியர்களுடன் குறியிடப்பட்ட செய்திகளை பரிமாறிய சந்தேக நபரின் தொலைபேசி மற்றும் கணினியில் மைதானத்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் காணப்பட்டதாக பிரான்ஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாரிஸ் ஒலிம்பிக்கின் பல கால்பந்து போட்டிகள் நடைபெறவுள்ள Saint-Etienne இல் உள்ள Geoffroy-Guichard கால்பந்து மைதானத்தை தாக்குவதே சந்தேகநபரின் திட்டமாக இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரான்ஸ் உள்துறை அமைச்சரை மேற்கோள்காட்டி, சந்தேக நபர் பார்வையாளர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினரை இலக்கு வைத்து தற்கொலைத் தாக்குதல் நடத்தத் தயாராக இருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இஸ்லாமிய சித்தாந்தவாதி என கூறப்படும் இளைஞன் யார் என்பது இதுவரையில் வெளியாகவில்லை எனவும், பயங்கரவாத சதிச் செயலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பாரீஸ் ஒலிம்பிக் போட்டியின் பாதுகாப்பிற்காக 20,000 ராணுவ வீரர்கள் மற்றும் 40,000 போலீசார் மற்றும் 2,000 வெளிநாட்டு ராணுவம் மற்றும் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Latest news

கிரெடிட் கார்டுகளால் அதிகமான கடனில் உள்ள ஆஸ்திரேலியர்கள்

ஆஸ்திரேலியர்கள் அன்றாட செலவுகளை ஈடுகட்ட கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துவதாக ஃபைண்டரின் புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. வாழ்க்கைச் செலவு அழுத்தங்களை எதிர்கொள்வதில், ஒப்பீட்டு வலைத்தளம் ஒன்று வெளியிட்ட ஒரு...

iPhone 17 model-ஐ வெளியிட்டுள்ளது Apple

2025 ஆம் ஆண்டின் மிகப்பெரிய தொழில்நுட்ப வெளியீடுகளில் ஒன்றாகக் கருதப்படும் iPhone 17 model-ஐ Apple வெளியிட்டுள்ளது. இதன் விலை US$899 இல் தொடங்கும் என்றும், iPhone...

ஆயிரக்கணக்கான வேலைகளை குறைக்க உள்ள ANZ

அடுத்த 12 மாதங்களில் ஆயிரக்கணக்கான வேலைகளை குறைக்க ANZ தயாராகி வருகிறது. நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில், செப்டம்பர் 2026 க்குள் சுமார் 3,500 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய...

எதிர்ப்புகளைத் தொடர்ந்து சமூக ஊடகத் தடையை நீக்கியது நேபாளம்

நேபாளத்தில் சமூக ஊடகத் தடைக்கு எதிரான போராட்டத்தில் 19 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, சமூக ஊடகத் தடையை நீக்க நேபாள அரசு முடிவு செய்துள்ளது. நேபாள அரசாங்கம்...

விக்டோரியன் அரசாங்கத்திற்கும் பழங்குடி மக்களுக்கும் இடையிலான ஒரு வரலாற்று ஒப்பந்தம்

விக்டோரியா பழங்குடியினர் மற்றும் Torres Strait தீவுவாசிகள் சார்பாக நாடாளுமன்றத்தில் ஒரு ஒப்பந்த மசோதாவை அறிமுகப்படுத்திய முதல் மாநிலமாக விக்டோரியா மாறியுள்ளது. முன்மொழியப்பட்ட ஒப்பந்த மசோதா நிறைவேற்றப்பட்டால்,...

டெஸ்லாவின் Full Self-Driving சோதனை விக்டோரியன் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்படவில்லை!

விக்டோரியா அரசாங்கம் நடத்தும் முழுமையான Self-Driving சோதனைக்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது Self-Driving சோதனைகள் பாதுகாப்பாக மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்ய போக்குவரத்து மற்றும் திட்டமிடல் துறையின்...