Newsஇன்ஸ்டாகிராமில் அறிமுகமாகியுள்ள புதிய அம்சம்

இன்ஸ்டாகிராமில் அறிமுகமாகியுள்ள புதிய அம்சம்

-

இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் ‘Limit Interactions’ என்ற புதிய அம்சம் அறிமுகமாகி உள்ளது. இது Insta பயனர்களுக்கு எந்த வகையில் பயன் தரும் என்பதை பார்ப்போம்.

Meta நிறுவனத்தின் Photo மற்றும் Video sharing சமூக வலைதளம்தான் இன்ஸ்டாகிராம். கடந்த 2010-இல் தொடங்கப்பட்டது. அடுத்த சில ஆண்டுகளில் Meta (அப்போது Facebook) அதனை கையகப்படுத்தியது. இன்று உலக அளவில் மாதந்தோறும் சுமார் 1 பில்லியனுக்கும் மேலான active பயனர்கள் இன்ஸ்டாகிராம் தளத்தை பயன்படுத்தி வருவதாக தகவல்.

Story முதல் Post வரை அனைத்தையும் இதில் பதிவு செய்யலாம். அனைத்தும் காட்சி வடிவிலான மொழியில் இருக்கும். இன்றைய இளைஞர்கள் அதிகம் உலா வருவது இன்ஸ்டாவில் தான். அதை கருத்தில் கொண்டு பயனர்களின் பயன்பாட்டு அனுபவத்திற்காக அவ்வப்போது புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் Limit Interactions என்ற அம்சத்தை மெட்டா வெளியிட்டுள்ளது.

சமூக வலைதளத்தில் Troll மற்றும் Bullying போன்றவற்றை பயனர்கள் எதிர்கொள்வதை தடுக்கும் வகையில் இந்த அம்சம் அறிமுகமாகி உள்ளது. இதன் மூலம் குறிப்பிட்ட பயனார்களிடத்தில் இருந்து வரும் DM (Direct Message), போஸ்டுக்கான Comments, Tags போன்ற அனுமதிகள் இருக்காது. இதை தற்காலிகமாக மட்டுமே மேற்கொள்ள முடியும். அதாவது ஒருநாள் முதல் நான்கு வார காலம் வரையில்.

இந்த அம்சத்தின் மூலம் பயனர்கள் தங்களது நெருங்கிய நட்புகளுடன் மட்டும் Interact செய்யலாம். மற்ற பயனார்களிடத்தில் இருந்து message, comment, tag போன்றவற்றை பெறாமல் இருக்கலாம். இன்ஸ்டாகிராம் பக்கத்தின் Settings and Activity-க்கு சென்று Limit Interactions தேர்வு செய்தால் இந்த அம்சத்தின் பயன்பாட்டை பெற முடியும்.

Latest news

REDcycle பேரழிவு தரும் தவறுக்குப் பிறகு ACCC முன்மொழிந்துள்ள புதிய திட்டம்

ஆஸ்திரேலியாவில் பிளாஸ்டிக்குகளை மறுசுழற்சி செய்வதற்கான மற்றொரு புதிய திட்டமாக மென்மையான பிளாஸ்டிக் திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது. இந்தத் திட்டம், Woolworths, Coles, Aldi, Nestlé, Mars மற்றும் McCormick...

பாலியல் ரீதியாக பரவும் நோய் பற்றி ஆஸ்திரேலியர்களுக்கு எச்சரிக்கை

ஆஸ்திரேலியாவில் பாலியல் ரீதியாக பரவும் நோயால் ஏற்படும் குழந்தைகள் இறப்பு குறித்து சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 2016 ஆம் ஆண்டு முதல் ஆஸ்திரேலியாவில் 37 குழந்தைகள்...

மிகக் குறைந்த காய்ச்சல் தடுப்பூசி விகிதத்தைக் கொண்ட மாநிலமாக குயின்ஸ்லாந்து

கடந்த வாரம் குயின்ஸ்லாந்தில் சுமார் 4,000 இன்ஃப்ளூயன்ஸா வழக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சில வயதினரிடையே, நாட்டிலேயே குயின்ஸ்லாந்தில் தான் காய்ச்சல் தடுப்பூசி போடும் விகிதம் மிகக்...

NSW-வில் எரிவாயு குழாய் வெடிப்பு – இரு பள்ளி மாணவர்கள் வெளியேற்றம்

நியூ சவுத் வேல்ஸில் எரிவாயு குழாய் உடைந்ததால் இரண்டு பள்ளி மாணவர்களும் ஒரு வீட்டில் உள்ளவர்களும் வெளியேற்றப்பட்டுள்ளனர். சிட்னியில் உள்ள Harris சாலை அருகே தொழிலாளர்கள் பழுதுபார்க்கும்...

மிகக் குறைந்த காய்ச்சல் தடுப்பூசி விகிதத்தைக் கொண்ட மாநிலமாக குயின்ஸ்லாந்து

கடந்த வாரம் குயின்ஸ்லாந்தில் சுமார் 4,000 இன்ஃப்ளூயன்ஸா வழக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சில வயதினரிடையே, நாட்டிலேயே குயின்ஸ்லாந்தில் தான் காய்ச்சல் தடுப்பூசி போடும் விகிதம் மிகக்...

சிட்னி நீர்வழிகளில் கண்டுபிடிக்கப்பட்ட 21 நச்சு இரசாயனங்கள்

சிட்னியின் நீர்வழிகளில் 21 புதிய நிரந்தர இரசாயனங்கள் வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக புதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. Polyfluoroalkyl பொருட்கள் (PFAS) நிரந்தர இரசாயனங்கள் என்று அழைக்கப்படுகின்றன. மேலும் அவை...